search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெளி மாவட்டம்"

    • வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.
    • பஸ்சுக்கு மூன்று சரக்கு பெட்டி இணைக்கப்படுகிறது.

    திருப்பூர் :

    வருவாயை அதிகரிக்கும் நோக்கில், அரசு விரைவு பஸ்களில் நாளை 3ம் தேதி முதல் கூரியர், பார்சல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது. அதற்காக பஸ்சின் பக்க வாட்டில் 2 சரக்கு பெட்டி, பஸ்சுக்கு பின்னால் ஒரு சரக்கு பெட்டி என, பஸ்சுக்கு மூன்று பெட்டி இணைக்கப்படுகிறது. அதன்படி நாள் அல்லது மாத வாடகையில் சரக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

    இதற்கு 250 கிராமுக்கு, 50 ரூபாய் என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.திருப்பூர் அரசு போக்குவர–த்து கழக வணிகப்பிரிவு அதிகாரிகள் கூறுகையில், ''எஸ்.இ.டி.சி., டிப்போ கோவையில் தான் உள்ளது. திருப்பூரில் இருந்து சென்னை, திருப்பதிக்கு இரண்டு பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.நாகர்கோ–வில், மார்த்தாண்டம், திருநெல்வேலி, பெங்களூரு வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ்கள், அந்தந்த கிளையில் இருந்து இயக்கப்படுகிறது. கிளைகளில் பார்சல், கூரியர் முன்பதிவு செய்வது குறித்து விரிவான அறிவிப்பு பின்னர் வரும்'' என்றனர்.

    ×