search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விளையாட்டு வீராங்கனை"

    • கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப்.
    • ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலத்தில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று ஓணம் பண்டிகை. இந்த ஆண்டுக்கான ஓணம் பண்டிகை கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அதில் இருந்தே மாநிலம் முழுவதும் ஓணம் கொண்டாட்டங்கள் நடந்தபடி இருந்தது.

    இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியில் பங்கேற்ற முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்தார். கோழிக்கோடு மாவட்டம் மேரிக்குன்னு பகுதியை சேர்ந்தவர் ஜிப்சி ஜோசப் (வயது52).

    முன்னாள் தேசிய கைப்பந்து வீராங்கனையான இவர் மலப்புரம் மாவட்ட வேளாண்மை துறை அலுவலகத்தில் நிர்வாக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். இந்தநிலையில் தான் மேரிக்குன்னு பகுதியில் உள்ள தேவாலயத்தில் நடந்த ஓணம் கொண்டாட்டத்தில் தனது குடும்பத்தினருடன் கலந்துகொண்டார்.

    அங்கு நடத்தப்பட்ட இசை நாற்காலி போட்டியில் பங்கேற்று விளையாடியபோது ஜிப்சி திடீரென சுருண்டு விழுந்தார். சுயநினைவின்றி காணப்பட்ட அவர் அங்குள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டது தெரிய வந்தது.

    ஜிப்சியின் கணவர் ஜோசப் ரிபாலோ மலப்புரம் மாவட்ட சமூக நல அதிகாரியாக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஓணம் கொண்டாட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீராங்கனை சுருண்டு விழுந்து இறந்த சம்பவம் கேரளாவில் சோகத்தை ஏற்படுத்தியது.

    • விளையாட்டு வீராங்கனை ஆசிரியை தற்கொலை செய்து கொண்டார்.
    • சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    விருதுநகர்

    சிவகாசி பள்ளப்ப ட்டியை சேர்ந்தவர் முருகேஸ்வரி. இவரது மகள் தங்கபாண்டியம்மாள் (18). கல்லூரி மாணவியான இவர் ஜூடோ விளையாட்டு வீராங்கனை ஆவார். மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்று தங்கபாண்டியம்மாள் விளையாடி உள்ளார். திருப்பூரில் நடைபெற உள்ள போட்டியில் பங்கேற்க பெற்றோர் அனுமதி மறுத்ததாக கூறப்படுகிறது. இதில் விரக்தி அடைந்த தங்கபாண்டியம்மாள் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி கிழக்கு ேபாலீசார் விசாரித்து வருகின்றனர்.

    திருச்சுழி அருகே உள்ள வீரநல்லாங்குளத்தைச் சேர்ந்தவர் வெள்ளையன் (60). உடல் நலம் பாதிக்கப்பட்ட இவர் வாழ்க்கையில் விரக்தியடைந்து பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். வீரசோழன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி சாட்சியாபுரம் கந்தபுரம் காலனியைச் சேர்ந்தவர் அந்ேதாணிசாமி. இவரது மனைவி ஆரோக்கிய புஷ்பா (50). வடபட்டி நடுநிலைப்பள்ளியில் அரசு ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டு இவரது தந்தை இறந்து விட்டார். இதனால் மனநலம் பாதிக்கப்பட்ட ஆரோக்கிய புஷ்பா சம்பவத்தன்று இரவு கத்தியால் உடலில் கீறிக்கொண்டு வீட்டின் வராண்டாவில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சிவகாசி டவுண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×