search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வில்லாபுரம்"

    பெண்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் 13 பவுன் நகையை பறித்து சென்றனர்.
    மதுரை:

    மதுரை வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் அசோக்குமார், சிவில் என்ஜினீயர். இவரது மனைவி ஜெயப்பிரதா (வயது39).

    இவர் கடைக்கு சென்று பொருட்கள் வாங்கி விட்டு அங்குள்ள பூ மார்க்கெட் சாலையில் நடந்து வந்தார். அப்போது 2 பேர் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தனர்.

    அவர்கள் ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் ஜெயப்பிரதா கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றனர். ஆனால் ஜெயப்பிரதா போராடினார். இருப்பினும் மர்ம மனிதர்கள் 12 பவுன் நகையை பறித்துக்கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்றனர்.

    இதுகுறித்து அவனியாபுரம் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற மர்ம மனிதர்களை தேடி வருகின்றனர்.

    மற்றொரு சம்பவம்...

    சுப்பிரமணியபுரம் வசந்தம் நகரைச் சேர்ந்தவர் ராமசுப்பிரமணியன். இவரது மனைவி உமாதேவி (35). ஜெராக்ஸ் கடை ஊழியரான இவர் வேலை முடிந்து இரவில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

    வசந்தம் நகர் 2-வது தெருவில் வந்தபோது மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் அவரது கழுத் தில் கிடந்த ஒரு பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    விளாங்குடி சமாதான நகர் தெருவைச் சேர்ந்தவர் தினகரன். இவரது மனைவி சிரியாபுஷ்பம் (57). இவர் வீட்டை பூட்டி விட்டு பெங்களூரில் உள்ள மகள் வீட்டுக்கு சென்று விட்டார். இன்று காலை சிரியாபுஷ்பம் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப் பட்டது. கூடல்புதூர் போலீசார் விரைந்து வந்து சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

    பீரோவில் இருந்த 11 பவுன் நகைகள் மற்றும் 32 இஞ்ச் எல்.இ.டி. டி.வி. கொள்ளைபோய் இருப் பதாக சிரியாபுஷ்பம் போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லாபுரம் பகுதிகளில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள் எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    மதுரையில் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவித்துள்ளது.

    மதுரை:

    மதுரை நகரில் சுப்பிரமணியபுரம், வில்லபுரம் ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை 7-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது.

    எனவே நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை. தெற்கு வெளி வீதி, தெற்கு மாசி வீதி, தெற்கு மாரட் வீதி, சப்பாணிகோவில் தெரு, காஜிமார் தெரு, காஜா தெரு, தெற்கு கிருஷ்ணன் கோவில் தெரு, பாண்டிய வேளாளர் தெரு, மேல வாசல், பெருமாள் கோவில் தெரு, டி.பி.கே. ரோடு, வடம்போக்கி, கட்ரா பாளை யம், தெற்கு மாரட் வீதி, மேல வெளி வீதி, நன்மை தருவார் கோவில் தெரு, மேல பெருமாள் மேஸ்திரி வீதி, தெற்காவணி மூல வீதி, ரத்தினபுரம், சுந்தரராஜபுரம், எம்.கே.புரம், பெரியார் பேருந்து நிலையம், ஷாப் பிங்காம்ப்ளக்ஸ், ஆர்.எம்.எஸ். ரோடு பகுதி கள், கீரைத் துரை, மாகாளிப் பட்டி, நல்ல முத்து பிள்ளை ரோடு, சிந்தாமணி ரோடு, சென்மேரிஸ் பகுதி, தெற்கு வெளிவீதி, பிள்ளையார் பாளையம், சின்னக் கடை தெரு, மஞ்சனக் காரத் தெரு, பந்தடி மகால்பகுதி, தெற்கு மாசி வீதி, மறவர்சாவடி, காமராஜபுரம், வாழைத்தோப்பு, கீழவெளி வீதி, அம்மன் சன்னதி, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல் தெரு ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்னகண்மாயின் மேற்கு பகுதிகள், எப்.எப். ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் 1 முதல் 2 வது மெயின் வீதி வரை, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 முதல் 2 வது தெருவரை, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலை யழகுபுரம், 1 முதல் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம் பகுதிகள், சுந்தரராஜபுரம், வெங் கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலி டெக்னிக் பகுதிகள் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும்.

    இந்த தகவலை மதுரை மின் பகிர்மான செயற் பொறியாளர்கள் சுஜா, ராஜாகாந்தி தெரிவித்துள்ளார்.

    ×