search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வில்லாபுரம் பகுதியில் 21-ந்தேதி மின் நிறுத்தம்
    X

    வில்லாபுரம் பகுதியில் 21-ந்தேதி மின் நிறுத்தம்

    வில்லாபுரம் பகுதிகளில் வருகிற 21-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) மின் சப்ளை நிறுத்தப்படுகிறது.

    மதுரை:

    மதுரை மேற்கு மின் வினியோக செயற்பொறியாளர் ராஜா காந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    வில்லாபுரம் துணை மின் நிலையத்தில் வருகிற 21-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற உள்ளது.

    எனவே அந்த நேரத்தில் வில்லாபுரம் ஹவுசிங் போர்டு, சின்ன கண்மாயின் மேற்கு பகுதிகள் எப்.எப்.ரோடு, வில்லாபுரம் கிழக்கு பகுதிகள், மணிகண்டன் நகர், அரவிந்த் தியேட்டர் பகுதிகள், ஜெய்ஹிந்த்புரம் மற்றும் 2-வது மெயின் வீதி, பாரதியார் ரோடு, ஜீவாநகர் 1 மற்றும் 2-வது தெரு, மீனாம்பிகை நகர், தென்றல் நகர், சோலையழகுபுரம் 1-வது மற்றும் 3-வது தெரு, அருணாசலம் பள்ளி பகுதிகள், முருகன் தியேட்டர் பகுதிகள், எம்.கே.புரம், சுப்பிரமணியபுரம், வெங்கடாசலபுரம், மதுரை கல்லூரி, தமிழ்நாடு பாலிடெக்னிக் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதிகளில் மின் வினியோகம் தடைபடும்.

    மேற்கண்டவாறு அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×