என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வியாபாரி படுகொலை"
- சாலையோரமாக பெருமாள் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
- கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள ஓடையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60).
இவர் சைக்கிளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சென்று ஊர்,ஊராக போய் விற்று விட்டு வருவார்.
இதற்காக தினமும் அதிகாலையிலேயே தனது சைக்கிளில் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார்.
இன்றும் அதேபோல அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து வியாபாரம் செய்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார்.
இந்நிலையில் ஓடையாண்டஅள்ளி-எச்சம்பட்டி பிரிவுசாலை அருகே சாலையோரமாக பெருமாள் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராயக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு கத்தியால் குத்தப்பட்டு குடல் வெளியே சரிந்த நிலையில் பெருமாள் கொல்லப்பட்டு கிடந்தார்.
அவரது சைக்கிளும்,எடுத்து வந்த பொருட்களும் சாலையிலேயேகிடந்தன. இதையடுத்து பெருமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமாளை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மர்ம நபர்கள் முதியவரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
- தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.
செம்பட்டி:
திண்டுக்கல் மாவட்டம் செம்பட்டி அடுத்த வீரக்கல் அருகே தெற்கு மேட்டுப்பட்டியை சேர்ந்தவர் தண்ணி வண்டி (என்ற) சின்னத்துரை (வயது60). இவருக்கு கலையரசி (56) என்ற மனைவியும், கனகராஜ் (36) என்ற மகனும், நாகஜோதி (34) என்ற மகளும் உள்ளனர். கனகராஜ் திருப்பூரில் உள்ளார். நாகஜோதி திண்டுக்கல்லில் குடியிருந்து வருகிறார்.
பழைய இரும்பு மற்றும் பித்தளை பாத்திரங்களை கிராமம் கிராமமாக சென்று வியாபாரம் செய்து வரும் சின்னத்துரை தெற்கு மேட்டுப்பட்டியில் தனது மனைவி கலையரசியுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை தெற்கு மேட்டுப்பட்டியில் 2 பேர் சின்னத்துரையிடம் தகராறில் ஈடுபட்டு, ஒருவருக்கொருவர் தாக்கி கொண்டனர். பின்னர் இரவு சுமார் 7 மணி அளவில் சின்னத்துரை வீட்டிற்கு சென்றபோது அவரைப் பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள் சின்னத்துரை வீட்டு அருகே அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டி இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று, கொலை செய்யப்பட்டவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்தை திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் நேரில் பார்வையிட்டு விசாரணை நடத்தினார். சம்பவ இடத்திற்கு மோப்ப நாய் ரூபி வரவழைக்கப்பட்டு அது சிறிது தூரம் ஓடிச் சென்று யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.
கொலையாளிகளை பிடிக்க எஸ்.பி. உத்தரவின் பேரில்தனிப்படை அமைத்து தேடி வந்தனர். மேலும் தெற்கு மேட்டுப்பட்டியில் உள்ள சி.சி.டி.வி. கேமராவை வைத்து கொலையாளிகள் யார் என அடையாளம் காண போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில் தனிப்படை அமைத்து தேடி வரும் போலீசார் கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாமல் கொலையாளிகளை பிடிக்க முடியாமல் திணறி வருகின்றனர். சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாகியும் குற்றவாளிகளை பிடிக்க முடியாமல் போலீசார் இருப்பதால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் பீதியில் உள்ளனர்.
- குடிபோதையில் வந்த சில வாலிபர்கள் அவரிடம் பொருட்கள் கேட்டு தகராறு செய்தனர்
- படுகாயம் அடைந்த சுருளிவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார்
கம்பம்:
தேனி மாவட்டம் கம்பம் 6வது வார்டு பாரதியார் நகரை சேர்ந்தவர் சுருளிவேல் (வயது52). இவர் தள்ளுவண்டியில் ரொட்டி, பன் உள்ளிட்ட திண்பண்டங்களை வைத்து விற்பனை செய்து வந்தார்.
நேற்று இரவு கம்பம் மெட்டு காலனியில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது குடிபோதையில் வந்த சில வாலிபர்கள் அவரிடம் பொருட்கள் கேட்டு தகராறு செய்தனர். இதில் ஏற்பட்ட வாக்குவாதத்தில் சுருளிவேலை அந்த வாலிபர்கள் உருட்டு கட்டையால் சரமாரியாக தாக்கினர்.
படுகாயம் அடைந்த சுருளிவேல் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தார். அந்த சமயத்தில் அங்கு சாரல் மழை பெய்து கொண்டிருந்ததாலும் மின் வினியோகம் தடைபட்டதாலும் இச்சம்பவம் குறித்து தாமதமாக தகவல் வெளிவந்தது.
உடனடியாக அங்கு சென்ற போலீசார் சுருளிவேல் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அங்கிருந்த சி.சி.டி.வி. காமிரா உதவியுடன் சந்தேகத்தின் பேரில் 5 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சுருளிவேலுக்கு சுந்தரி என்ற மனைவியும், ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். மகளுக்கு திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். மகன் பள்ளியில் படித்து வருகிறார். இந்த நிலையில் போதை வாலிபர்களால் சுருளிவேல் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்