என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ராயக்கோட்டை அருகே கத்தியால் குத்தி வியாபாரி படுகொலை
- சாலையோரமாக பெருமாள் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார்.
- கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை அருகேயுள்ள ஓடையாண்டஅள்ளி பகுதியை சேர்ந்தவர் பெருமாள் (வயது 60).
இவர் சைக்கிளில் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு சென்று ஊர்,ஊராக போய் விற்று விட்டு வருவார்.
இதற்காக தினமும் அதிகாலையிலேயே தனது சைக்கிளில் பொருட்களை எடுத்துக்கொண்டு புறப்பட்டு விடுவார்.
இன்றும் அதேபோல அதிகாலை 5 மணியளவில் வீட்டிலிருந்து வியாபாரம் செய்வதற்காக சைக்கிளில் புறப்பட்டார்.
இந்நிலையில் ஓடையாண்டஅள்ளி-எச்சம்பட்டி பிரிவுசாலை அருகே சாலையோரமாக பெருமாள் ரத்தக்காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். அவ்வழியாக சென்றவர்கள் இதுகுறித்து ராயக்கோட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.அங்கு கத்தியால் குத்தப்பட்டு குடல் வெளியே சரிந்த நிலையில் பெருமாள் கொல்லப்பட்டு கிடந்தார்.
அவரது சைக்கிளும்,எடுத்து வந்த பொருட்களும் சாலையிலேயேகிடந்தன. இதையடுத்து பெருமாளின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக ராயக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பெருமாளை கொன்றவர்கள் யார்? எதற்காக கொன்றனர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்