search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வியாபாரம் மந்தம்"

    • இறைச்சி, மீன் கடைகளில் வியாபாரம் மந்தம் உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
    • புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் இருக்கிறார்கள்


    புரட்டாசி மாதம் பெருமாள் வழிபாட்டுக்கு உரிய மாதம் ஆகும். இந்த மாதம் இந்து மக்கள் விரதம் இருந்து சனிக்கிழமைகளில் பெருமாள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வார்கள். இந்த மாதம் முழுவதும் சிலர் அசைவ உணவுகளை சாப்பிட மாட்டார்கள்.

    இந்த நிலையில் 2- வது புரட்டாசி ஞாயிற்றுக்கி–ழமையான இன்று கிருஷ்ணகிரி, ஒசூர், தேன்கனிக்கோட்டை, ராயக்கோட்டை, சூளகிரி, காவேரிப்பட்டினம் ஆகிய ஊர்களில் உள்ள ஆடு மற்றும் கோழி இறைச்சி கடைகளில் மிக குறைவாக மக்கள் இறைச்சி வாங்க வந்திருந்தனர். அதே போன்று மீன் கடைகளுக்கு மீன் வாங்க வருவோர் எண்ணிக்கையும் கணிசமாக குறைந்தது. இதனால் இறைச்சி மற்றும் மீன் வியாபாரிகள் கவலை அடைந்தனர்.

    இதே போன்று தருமபுரி நகரில் உள்ள இறைச்சி கடைகளில் ஞாயிற்றுக்–கிழமைகளில் அதிகளவில் வந்து வாங்கி செல்வார்கள்.

    ஆனால் இன்று மிக குறைவானே நபர்களே வந்து இறைச்சியை வாங்கிச் சென்றனர். மீன் மார்கெட்டிலும் மீன் வாங்க வருபவர்களின் எண்ணிக்கையும் குறைந்து இருந்தது. இதே போன்று அரூர், மொரப்பூர், பென்னாகரம், பாப்பி ரெட்டிப்பட்டி, ஏரியூர் போன்ற பகுதிகளில் உள்ள இறைச்சி கடைகளிலும் விற்பனை மந்தமாகவே இருந்தது.

    இது குறித்து இறைச்சி கடை வியாபாரி ஒருவர் கூறியதாவது;-

    பொதுவாக வார விடுமுறையான ஞாயிற்றுக்–கிழமைகளில் அசைவ பிரியிர்கள் அதிகாலை முதல கடை முன்பு அதிக அளவில் வந்து காத்திருந்து இறைச்சியை வாங்கி செல்வார்கள். இன்று புரட்டாசி மாத ஞாயிற்று கிழமை என்பதால் மிக குறைவானவர்களே வந்து இறைச்சியை வாங்கி சென்றனர். இதனால் வியாபாரம் பாதிப்பு அடைந்துள்ளது என்றார். 

    • இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை.
    • இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் வாரச்சந்தை உலக புகழ்பெற்றது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

    விடிய விடிய நடை பெறும் இந்த ஜவுளி சந்தை யில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்து மொத்த விலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேபோல் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டரின் பெயரில் ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதேபோல் உள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.

    இந்நிலையில் ஆனி மாதம் பிறந்ததையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த மாதத்தில் எந்த ஒரு விசேஷமும் இருக்காது என்பதால் விசேஷம் தொடர்பான வியாபாரமும் சூடு பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் வந்திருந்தனர். இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடை பெற்றது. சில்லரை வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.

    இந்த மாதம் முழுவதும் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். ஆடி மாதம் பிறந்தால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்த னர். 

    ×