search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்
    X

    ஈரோடு ஜவுளி சந்தையில் சில்லரை விற்பனை நடந்த போது எடுத்த படம்.

    ஈரோடு ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தம்

    • இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை.
    • இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்கில் கனி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இங்கு வாரச்சந்தை, தினசரி கடைகள் செயல்பட்டு வருகிறது. குறிப்பாக இங்கு நடைபெறும் வாரச்சந்தை உலக புகழ்பெற்றது. திங்கட்கிழமை மாலை முதல் செவ்வாய்க்கிழமை மாலை வரை ஜவுளி சந்தை நடைபெறுகிறது.

    விடிய விடிய நடை பெறும் இந்த ஜவுளி சந்தை யில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா, நேபாளம் போன்ற மாநிலங்களில் இருந்து வியாபாரிகள் அதிக அளவில் வந்து மொத்த விலையில் ஜவுளிகளை கொள்முதல் செய்து செல்வார்கள்.

    இதேபோல் பல்வேறு வெளி மாநிலங்களில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டரின் பெயரில் ஜவுளி வியாபாரம் நடைபெற்று வருகிறது. இதேபோல் உள்ளூர் மாவட்டத்தில் இருந்தும் அதிக அளவில் வியாபாரிகள் வருவார்கள்.

    இந்நிலையில் ஆனி மாதம் பிறந்ததையொட்டி கடந்த சில நாட்களாகவே ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருந்து வருகிறது. இந்த மாதத்தில் எந்த ஒரு விசேஷமும் இருக்காது என்பதால் விசேஷம் தொடர்பான வியாபாரமும் சூடு பிடிக்கவில்லை.

    இந்நிலையில் இன்று கூடிய சந்தையில் வெளி மாநில வியாபாரிகள் அறவே வரவில்லை. இதனால் ஜவுளி சந்தை ஆள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் அதே சமயம் உள்ளூர் வியாபாரிகள் ஒரு சிலர் வந்திருந்தனர். இன்று மொத்த வியாபாரம் 15 சதவீதம் மட்டுமே நடை பெற்றது. சில்லரை வியாபாரம் 20 சதவீதம் நடைபெற்றதாக வியாபாரி கள் தெரிவித்தனர்.

    இந்த மாதம் முழுவதும் ஜவுளி வியாபாரம் மந்த நிலையில் இருக்கும் என வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர். ஆடி மாதம் பிறந்தால் வியாபாரம் சூடு பிடிக்க தொடங்கிவிடும் என்று நம்பிக்கை தெரிவித்த னர்.

    Next Story
    ×