என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "விமான நிலைய பணிகள்"

    • இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன.
    • அடுத்த 5 ஆண்டில் 50 விமான நிலையம் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    டாவோஸ்:

    சுவிட்சர்லாந்து நாட்டின் டாவோஸ் நகரில் உலகப் பொருளாதார மன்றத்தின் வருடாந்திர கூட்டம் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, இந்தியாவின் மத்திய மந்திரிகள் மற்றும் பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் பங்கேற்று வருகின்றனர்.

    இந்நிலையில், மத்திய சிவில் விமான போக்குவரத்து மந்திரியான ராம் மோகன் நாயுடு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    விக்சித் பாரத் என்ற நீண்டகால தொலைநோக்குப் பார்வையின் ஒரு பகுதியாக வரும் 2047-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 350 விமான நிலையங்களைக் கட்ட மத்திய அரசு இலக்கு வைத்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டில் இந்தியாவில் 74 விமான நிலையங்கள் மட்டுமே செயல்பட்டு வந்தன. ஆனால், இந்தியாவில் தற்போது 164 விமான நிலையங்கள் உள்ளன. அடுத்த 5 ஆண்டுகளில் குறைந்தது 50 விமான நிலையங்கள் கட்ட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

    2047-ம் ஆண்டுக்குள் 350 விமான நிலையங்களை உருவாக்குவதே எங்கள் இலக்கு. கடந்த 11 ஆண்டுகளில், பெரிய நகரங்களில் மட்டுமின்றி நாட்டின் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை நகரங்களிலும் 88 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டுள்ளன.

    2047 விக்சித் பாரத இலக்கை அடைய விமானப் போக்குவரத்து மிக முக்கியமான துறையாகும். நாட்டின் மிகப்பெரிய வளர்ச்சித் துறை சிவில் விமானப் போக்குவரத்து என்பதை நாங்கள் காண்கிறோம்.

    சிவில் விமானப் போக்குவரத்தில் மாநிலங்களை வலுப்படுத்த நாங்கள் விரும்புகிறோம். வரும் நாட்களில் மாநிலங்களுக்கு முழு ஆதரவை வழங்குவோம் என தெரிவித்தார்.

    • பல மாதங்களாக முடங்கி கிடந்தது
    • ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது

    வேலூர்:

    வேலூர் அப்துல்லாபுரத் தில் விமான நிலையம் அமைந்துள்ளது. மத்திய அர சின் உதான் திட்டத்தின் கீழ் இந்த விமான நிலையத்தை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டுவர முடிவு செய்யப் பட்டது.

    கடந்த 2016-ம் ஆண்டு அதற்கான ஆயத்த பணிகள் தொடங்கியது. பல ஆண்டுகளாக பல்வேறு கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட் டன. பொதுமக்களின் நிலங் கள் கையகப்படுத்தப்பட்டது. ஓடுதளம், டெர்மினல் கட்டிபட்டது. டம், தளவாட கருவிகள், பய ணிகள் காத்திருக்கும் அறை உள்ளிட்டவை அமைக்கப் பட்டது.

    இதன் நடுவே இருந்த தார் வழி சாலையும் விமான நிலைய விரிவாக்கத்துக்காக கையகப்படுத்தப்பட்டது. பல கோடி ரூபாய் செலவில் பயன் பாட்டுக்கு கொண்டு வர எடுக்கப்பட்ட முயற்சியில் திடீரென தொய்வு ஏற்பட்ட டது. விமான நிலையத்தின் செயல்பாட்டுக்கு கூடுதலாக சுமார் 10 ஏக்கர் நிலம் தேவையாக இருந்தது. ஆனால் அதை கையகப்படுத்துவதில் பல சிக்கல்கள் எழுந்தது.

    இதனால் பல மாதங்களுக்கு மேல் பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்தது. அங்குள்ள ஓடுதள பகுதிகள் உள்ளிட்ட பல்வேறு இடங் களில் செடி, கொடிகள் முளைத்தன. அமைக்கப் யாகி உள்ளது. பட்ட டெர்மினல் கட்டிட மும் பராமரிப்பின்றி காணப்பட்டது.

    இந்த நிலையில் தற்போது வேலூர் விமான நிலையத்தில் இதன் நடுவே இருந்த தார் மீண்டும் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மின் கம்பங்களும் அகற்றும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், வேலூர் விமான நிலைய பணிகள் தொடங்க கூடுதலாக 10 ஏக்கர் நிலம் தேவைப்பட்டது.

    இந்த நிலை யில் அந்த நிலம் தேவை யில்லை என்றும், இருக்கும் இடத்தினை வைத்துக் கொண்டு விமான நிலை யத்தை பயன்படுத்தலாம். என் றும் விமான ஆணையரகம் சார்பில் தெரிவித்துள்ளதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

    எனவே இருக்கும் இடத் தில் உள்ள மரங்கள், மின்கம் பங்கள் அகற்றல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள சுமார் ரூ.22 லட்சம் ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளது என்றனர்.

    ×