search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாள்வீச்சு போட்டி"

    • வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டியில் தமிழக அணி 2-வது இடத்தை பிடித்தது.
    • பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி. கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    கொச்சி:

    24-வது தேசிய சப்-ஜூனியர் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி கேரள மாநிலம் கொச்சியில் கடந்த 3 தினங்களாக நடந்தது. இதில் தமிழக அணி ஒட்டுமொத்தமாக 2-வது இடத்தை பிடித்தது. தமிழக அணிக்கு 5 பதக்கம் கிடைத்தது.

    14 வயதுக்குட்பட்ட தனிநபர் பாயல் பிரிவில் நிபின்ராஜ் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும், அபிலின் ஷானு (கன்னியாகுமரி) சபரே பரிசுப் வெள்ளிப் பதக்கமும், பெஜினோ ஜிப்ரின் (கன்னியாகுமரி) வெண்கல பதக்கமும் பெற்றனர்.

    14 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பாயல் பிரிவில் தமிழக அணிக்கு (நிபின்ராஜ், ஆஸ்கெர், அகிலேஷ், திருக்குமரன்) வெண்கல பதக்கம் கிடைத்தது. அணிகள் சாப்ரே பிரிவில் வெள்ளிப்பதக்கம் (ஆஸ்பின், வினிஷ்குமார், ஷானு, நரேன்) கிடைத்தது.

    பதக்கம் வென்ற சிறுவர், சிறுமியரை தமிழ்நாடு வாள்வீச்சு சங்கத்தின் அடாக் கமிட்டி தலைவர் வி.கருணாமூர்த்தி பாராட்டி வாழ்த்து தெரிவித்தார்.

    • 28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார்.
    • பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    லண்டன்:

    காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வாள் வீச்சு பந்தயம் 1950 முதல் 1970 வரை இடம் பெற்று இருந்தது. அதன் பிறகு அந்த போட்டி நீக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து காமன்வெல்த் விளையாட்டு முடிந்த பிறகு காமன் வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் போட்டி தனியாக நடத்தப்படும்.

    22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தில் உள்ள பர்மிங்காமில் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து காமன்வெல்த் வாள்வீச்சு சாம்பியன்ஷிப் இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நேற்று தொடங்கியது.

    எப்பி, பாய்ல், சேபர் பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு போட்டி நடத்தப்படுகிறது. இதே போல ஜூனியர் கேடட், வெடரன் மற்றும் பாரா பிரிவுகளுக்கு வருகிற 16-ந்தேதி வரை இந்த போட்டி நடக்கிறது.

    நேற்று நடந்த சீனியர் பெண்கள் சேபர் பிரிவில் பங்கேற்ற தமிழக வீராங்கனை பவானி தேவி தங்கப் பதக்கம் வென்று முத்திரை பதித்தார்.

    28 வயதான பவானி தேவி இறுதி போட்டியில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த வெரோனிகா வஸ்லேவை எதிர் கொண்டார். இதில் பவானி தேவி 15-10 என்ற கணக்கில் வெரோனிகாவை வீழ்த்தி தங்கம் வென்றார்.

    சென்னையை சேர்ந்த பவானி தேவி காமன்வெல்த் வாள்வீச்சு போட்டியில் முதல் முறையாக தங்கம் வென்றுள்ளார். சேபர் தனி நபர் பிரிவில் அவர் 2-வது முறையாக பதக்கம் பெற்றுள்ளார். ஒட்டு மொத்தத்தில் காமன்வெல்த் சாம்பியன் ஷிப்பில் அவர் 4-வது முறையாக பதக்கத்தை கைப்பற்றி உள்ளார்.

    பவானி தேவி இதற்கு முன்பு 2009 ஆண்டு மலேசி யாவில் நடந்த காமன்வெல்த் சாம்பியன்ஷிப் சேபர் அணிகள் பிரிவில் வெண்கலமும், 2012-ம் ஆண்டு அமெரிக்கா வில் நடந்த போட்டியில் சேபர் அணிகள் பிரிவில் வெள்ளியும், சேபர் தனி நபர் பிரிவில் வெண்கலமும் பெற்று இருந்தார்.

    இது தவிர ஆசிய சாம்பி யன் ஷிப், சேட்டிலைட் சாம்பியன் ஷிப் போட்டியில் பதக்கம் பெற்று சாதனை படைத்து உள்ளார்.

    கடந்த ஜூலை மாதம் டோக்கியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிக்கு இந்தியா சார்பில் பங்கேற்ற ஒரே வாள்வீச்சு வீராங்கனை பவானி தேவி ஆவார். அவர் 2-வது சுற்று வரை முன்னேறி இருந்தார். அங்கேரியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் கால் இறுதிக்கு நுழைந்ததன் மூலம் அவர் ஒலிம்பிக்குக்கு தகுதி பெற்று இருந்தார்.

    காமன்வெல்த் சாம்பியன்ஷிப்பில் தங்கம் வென்ற பவானி தேவிக்கு பாராட்டுகள் குவிகிறது. 

    • 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி நடக்கிறது.
    • இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.

    சென்னை:

    சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்கம் சார்பில் 10 மற்றும் 12 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியருக்கான வாள்வீச்சு போட்டி கொளத்தூரில் உள்ள கல்ட்டிஜென் மல்டி விளையாட்டு அரங்கில் நாளை ( 24-ந் தேதி ) நடக்கிறது. இந்தப் போட்டியின் அடிப்படையில் மாநில போட்டிக்கான சென்னை அணி தேர்வு செய்யப்படும்.

    மேற்கண்ட தகவலை சென்னை மாவட்ட வாள்வீச்சு சங்க செயலாளர் வி.கருணாமூர்த்தி தெரிவித்து உள்ளார்.

    ×