search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் வெறிச்செயல்"

    வந்தவாசி அருகே தகராறில் தாக்கப்பட்ட மகனை காப்பாற்ற முயன்ற தாய் வெட்டி கொலை செய்யபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    வந்தவாசி:

    திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வல்லம் பகுதியை சேர்ந்தவர் பலராமன். இவரது மனைவி காசியம்மாள் (வயது 70). பலராமன் கடந்த மாதம் இறந்து விட்டார். தனது தந்தை சாவிற்கு உறவினர்கள் யாரும் சரிவர வரவில்லை என்று அவரது இளைய மகன் ரவி போதையில் ஆபாசமாக பேசிக் கொண்டிருந்தாரம். அப்போது அந்த வழியாக வந்த ரவியின் அண்ணன் பெருமாளின் மகன் அரிவரசன் ரவியிடம் ஏன் உறவினர்களை ஆபாசமாக பேசிக் கொண்டிருக்கிறாய் என தட்டி கேட்டுள்ளார்.

    இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த அரிவரசன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரவியை வெட்டி உள்ளார். இதனை கண்டு அதிர்ச்சியடைந்த காசியம்மாள் தடுக்க முயன்றுள்ளார்.

    அப்போது அவர் காசியம்மாளையும் சரமாரியாக வெட்டி உள்ளார். இதில் பலத்த காயமடைந்து அங்கேய அவர் ரத்த வெள்ளத்தில் இறந்தார். பின்னர் அங்கிருந்து அரிவரசன் தப்பி ஓடிவிட்டார்.

    இது குறித்து தகவலறிந்த வந்தவாசி டி.எஸ்.பி. அசோக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    பின்னர் உடலை மீட்டு வந்தவாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து தப்பி ஓடிய அரிவரசனை தேடி வருகின்றனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் அம்மி கல்லை தூக்கிப்போட்டு பெண்ணை படுகொலை செய்த வாலிபரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கடலூர்:

    தஞ்சை கீழவாசல் வீதியை சேர்ந்தவர் வெள்ளைச்சாமி. இவரது மனைவி தனலட்சுமி (வயது 45). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.

    கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெள்ளைச்சாமி இறந்து விட்டார். இதையடுத்து தனலட்சுமி தனது 2 குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்தார். அப்போது அதே பகுதியில் வேலைப்பார்த்து வந்த கடலூர் வாலிபர் ஒருவருடன் தனலட்சுமிக்கு பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

    இதையடுத்து அந்த வாலிபர் தனலட்சுமியை தஞ்சாவூரில் இருந்து கடலூருக்கு அழைத்து வர முடிவு செய்தார். அதன்படி தனலட்சுமியின் குழந்தைகளை தஞ்சையில் உள்ள உறவினர் வீட்டில் விட்டு விட்டு தனலட்சுமியை மட்டும் கடலூர் கூத்தப்பாக்கத்துக்கு அழைத்து வந்தார். பின்னர் அங்குள்ள பாரதியார் நகரில் அந்த வாலிபரும், தனலட்சுமியும் ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    நேற்று இரவு அவர்களுக்கிடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அந்த வாலிபர் ஆத்திரம் அடைந்து தனலட்சுமியின் தலையில் அம்மி கல்லை தூக்கி போட்டார். இதில் தனலட்சுமி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்தார்.

    உடனே அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்று காலை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் தனலட்சுமி பிணமாக கிடப்பை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். இது பற்றி திருப்பாதிரிப்புலியூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

    கொலை செய்யப்பட்டு கிடந்த தனலட்சுமியின் உடலை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கடலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கள்ளக்காதல் பிரச்சினையில் தனலட்சுமி கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். இது தொடர்பாக கடலூர் முதுநகரை சேர்ந்த வாலிபர் சரவணனை (வயது 39) போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×