search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது"

    • வாலிபர் ஒருவர் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.
    • வாலிபரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானலில் கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்களை குறி வைத்து கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை நடைபெற்று வருகிறது. போலீசார் அதிரடி நடவடிக்கை எடுத்து இவற்றை கண்காணித்தபோதும் விற்பனையை தடுக்க முடியவில்லை.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு போதை காளான் தேடி சென்ற வாலிபர்கள் 3 நாட்களாக வனப்பகுதியில் மயங்கி கிடந்தனர். மேலும் கஞ்சா, போதை காளான் விற்பனையை தடுக்க போலீசார் ரோந்து சென்று வியாபாரிகளை கைது செய்தனர்.

    இந்த நிலையில் கொடைக்கானல் அப்சர்வேட்டரி பகுதியைச் சேர்ந்த சதீஷ் என்ற நாகராஜ் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளை குறிவைத்து கஞ்சா, போதைக்காளான் உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது.

    தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் இவர் மீது எடுக்கப்பட்டாலும் தொடர்ந்து கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை செய்து வந்துள்ளார்.

    குற்றச்சம்பவங்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் மாவட்ட எஸ்.பி. பாஸ்கரன் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் விசாகன் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைதுசெய்ய உத்தரவிட்டார். அதன்படி சதீஷ் என்ற நாகராஜை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • ஜெயிலில் அடைப்பு
    • போலீஸ் சூப்பிரண்டு அதிரடி நடவடிக்கை

    போளூர்:

    ஜமுனாமுத்தூர் அடுத்த மந்தைவெளி கொட்டாய் சேர்ந்தவர் ஏழுமலை (வயது 22) ஏழுமலை முன் விரோதத்தால் தன் சித்தப்பாவை துப்பாக்கியால் சுட்டு கொன்ற வழக்கில் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஏழுமலையை குண்டர் சட்டத்தில் ைது செய்ய கலெக்டர் முருகேஷிடம் பரிந்துரை செய்தார்.

    இந்த நிலையில் ஏழுமலையை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய நேற்று உத்தரவு பிறப்பித்தார். அதன்பேரில் ஏழுமலையை வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    போளூர் போலீசார் 17-ந் தேதி வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது அந்தவழியாக வந்த காரை மடக்கிய சோதனையை மேற்கொண்டனர். அப்போது காரில் 5 பேர் 2 கிலோ கஞ்சாவை கடத்தியது தெரிய வந்தது.

    இதில் 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    இந்த நிலையில் முக்கிய குற்றவாளியான போளூர் சின்னப்பா தெருவை சேர்ந்த பாலகுமரனை (32) குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.

    அதன்பேரில் கலெக்டர் முருகேஷ் உத்தரவின்படி போலீசார் பாலகுமரனை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து சேலம் மத்திய சிறையில் நேற்று அடைத்தனர்.

    ×