என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "வாராந்திர ரெயில்"
- பாட்னா மற்றும் ஷாலிமர் செல்லும் வாராந்திர ரெயில்கள், கோவையில் இரண்டு நிமிடம் கூடுதலாக நிறுத்தப்படுகிறது.
- 600க்கும் அதிகமான வடமாநில பயணிகள் திருப்பூர் வந்திறங்குகின்றனர்.
திருப்பூர் :
பாட்னா மற்றும் ஷாலிமர் செல்லும் வாராந்திர ரெயில்கள், கோவையில் இரண்டு நிமிடம் கூடுதலாக நிறுத்தப்படுகிறது.திருப்பூரிலும் ஒன்று அல்லது இரண்டு நிமிடம் கூடுதலாக நின்று செல்ல வேண்டும் என்று பயணிகள் வலியுறுத்துகின்றனர்.
பீகார் தலைநகர் பாட்னாவில் இருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்துக்கு வெள்ளிக்கிழமைதோறும்,மே ற்கு வங்க மாநிலம் ஷாலிமரில் இருந்து கேரள மாநிலம், திருவனந்தபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமைதோறும் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது. பாட்னா சூப்பர்பாஸ்ட் எக்ஸ்பிரஸ், ஷாலிமர் எக்ஸ்பிரஸ் ஆகிய இந்த ெரயில்கள் கோவையில், காலை 10:27மணிக்கு வந்து 10:30 மணிக்கு புறப்பட்டு வந்தது. ரெயில் பயணிகள் வசதிக்காக கூடுதலாக இரண்டு நிமிடங்கள் அதாவது காலை 10:25மணிக்கு வரும் ரெயில்கள் 10:30 மணி வரை கோவையில் நிற்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
திருப்பூர் ரெயில் நிலையத்திற்கு வரும் இந்த ரெயில்கள் காலை 9:28மணிக்கு வந்து 9:30 மணிக்கு புறப்படும். இரண்டும் வாராந்திர ரெயில் என்பதால், வடமாநிலங்களில் இருந்து 600க்கும் அதிகமான வடமாநில பயணிகள் திருப்பூர் வந்திறங்கு கின்றனர். ரெயில்கள் கூடுதலாக ஒன்று அல்லது இரண்டு நிமிடங்கள் நின்று சென்றால் பயனுள்ளதாக இருக்கும் என்கின்றனர் பயணிகள்.
- சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் வாராந்திர ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது.
- ரெயில்களில் 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 2 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
தென்காசி:
கடந்த ஜூன் மாதம் நெல்லை-தாம்பரம் இடையே தென்காசி வழியாக வாராந்திர சிறப்பு ரெயில் இயக்கப்பட்டது. அதன்பின்னர் ஜூலையில் அந்த ரெயில் இயக்கப்படவில்லை. சிறிய இடைவெளிக்கு பிறகு மீண்டும் இந்த ரெயில் வருகிற 7-ந்தேதி முதல் செப்டம்பர் மாதம் வரை இயக்கப்பட இருக்கிறது.
அதன்படி நெல்லை-தாம்பரம் வாராந்திர சிறப்பு ரெயில் (06004) வருகிற 7-ந்தேதி முதல் செப்டம்பர் 4-ந்தேதி வரை ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லையில் இருந்து இரவு 7 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.20 மணிக்கு தாம்பரம் சென்றடையும் வகையில் இயக்கப்படுகிறது.
மறுமார்க்கத்தில் தாம்பரம்-நெல்லை வாராந்திர சிறப்பு ரெயில் (06003) வருகிற 8-ந்தேதி முதல் செப்டம்பர் 5-ந்தேதி வரை திங்கட்கிழமைகளில் தாம்பரத்தில் இருந்து இரவு 10.20 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 5.35 மணிக்கு மதுரைக்கும், காலை 10.35 மணிக்கு நெல்லைக்கும் வந்தடைய உள்ளது.
இந்த ரெயில்கள் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாச்சலம், திருச்சி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், சிவகாசி, ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், தென்காசி, பாவூர்சத்திரம், கீழக்கடையம், அம்பாசமுத்திரம், சேரன்மகாதேவி ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும்.
இந்த ரெயில்களில் ஒரு குளிர்சாதன இரண்டடுக்கு படுக்கை வசதி பெட்டி, 2 குளிர்சாதன மூன்று அடுக்கு படுக்கை வசதி பெட்டிகள், 7 இரண்டாம் வகுப்பு படுக்கை வசதி பெட்டிகள், 3 இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள், 2 ரெயில் மேலாளர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்படும்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்