search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வார சந்தை"

    • வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியாபாரிகளும் வருவார்கள்.
    • இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன.

    கள்ளக்குறிச்சி:

    சின்னசேலத்தில் வாரந் தோறும் வியாழக்கிழமை அன்று சந்தை நடைபெறு வது வழக்கம். ரம்ஜான் பக்ரீத் தீபாவளி பொங்கல் உள்ளிட்ட முக்கிய பண்டி கை நாட்களில் ஆடுகள் அதிக அளவில் விற்பனை யாவது வழக்கம். இதில் கள்ளக்குறிச்சி மட்டும் இல்லாமல் வெளி மாவட் டங்களில் இருந்து ஆடுகள் வாங்கி செல்வதற்கும் வியா பாரிகளும் வருவார்கள். இந்த நிலை யில் வருகின்றதி தீபாவளி பண்டிகை முன்னிட்டு இன்று காலை முதலே பல்வேறு கிராமங்க ளில் மாவட்டங்களில் இருந் தும் ஆடுகள் விற்பனைக்கு வந்தன. இதில் 3500 முதல் 20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்பட்டன. இன்று நடைபெற்ற வார சந்தையில் ஒரே நாளில் 50 லட்சத்திற்கு ஆடுகள் விற்பனையாது.

    • பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டன
    • பள்ளிகொண்டா பேரூராட்சியில் கவுன்சிலர்கள் கூட்டம் நடந்தது

    அணைக்கட்டு:

    பள்ளிகொண்டா பேரூராட்சியில் மாதாந்திர கவுன்சிலர் கூட்டம் நேற்று பேரூராட்சி அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது . கூட்டத்திற்கு பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி தலைமை தாங்கினார்,

    கூட்டத்தில் பேரூராட்சி கணினி ஆபரேட்டர் சந்தோஷ் முக்கிய தீர்மானங்களை வாசித்தார்.

    இதில் பேரூராட்சி க்குட்பட்ட வார சந்தையை ரூ.1.35 கோடியில் புதுப்பிக்கும் பணி மேற்கொள்ள ஒப்பந்த தாரருக்கு பணி உத்தரவு வழங்கி கவுன்சிலர்கள் கூட்டத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இதனையடுத்து 18 வார்டுகளிலும் மழைநீர் வடிகால் அமைத்தல், தெரு விளக்கு அமைத்தல், குடிநீர் வசதிகள், சாலை அமைத்தல், கல்வெர்ட் அமைத்தல் போன்ற அனைத்து அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

    இந்த கூட்டத்தில் அனைத்து வார்டு கவுன்சிலர்கள் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×