search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வாகன ஓட்டிகள் பீதி"

    • கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேனும், கார் ஒன்றின் பின் பகுதியில் மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
    • பின்னர் விபத்துக்குள்ளான வெங்காய பார லாரி, சரக்கு வேன் மற்றும் காரை மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர்.

    தொப்பூர்,

    மராட்டிய மாநிலத்தில் இருந்து கோவைக்கு வெங்காய பாரம் ஏற்றி கொண்டு ஒரு லாரி புறப்பட்டது. இந்த லாரியை கர்நாடக மாநிலம் சித்தரதுர்கா பகுதியை சேர்ந்த சக்தி (வயது 30) என்பவர் ஓட்டி வந்தார்.

    தருமபுரி மாவட்டம், தொப்பூர் கணவாய் வழியாக நேற்று காலை வந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையில் தறிக்கெட்டு ஓடி முன்னால் சென்ற பிளாஸ்டிக் பார சரக்கு வேன் மீது மோதியது.

    இதையடுத்து வெங்காய பார லாரி சென்டர் மீடியனில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேனும், கார் ஒன்றின் பின் பகுதியில் மோதிவிட்டு சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் வெங்காய பார லாரி டிரைவர் சக்தி மற்றும் சரக்கு வேன் டிரைவர் படுகாயம் அடைந்து தவித்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் மற்றும் சுங்கச்சாவடி ரோந்து படையினர் ஒன்றிணைந்து டிரைவர்களை மீட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்த விபத்தால் தருமபுரி- சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 2 மணி நேரத்துக்கு மேல் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

    பின்னர் விபத்துக்குள்ளான வெங்காய பார லாரி, சரக்கு வேன் மற்றும் காரை மீட்பு குழுவினர் அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். இந்த விபத்து குறித்து தொப்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • யானைகள் வழிமறித்ததால் வாகன ஓட்டிகள் பீதி அடைந்தனர்
    • பந்தலூரில் யானைகள் அட்டகாசம் தொடர்கிறது

    நீலகிரி

    பந்தலூர் தாலுகா பகுதியில் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் சேரம்பாடியில் இருந்து கூடலூர் சென்ற வாகனங்களை காட்டு யானைகள் வழிமறித்தன.

    இதனால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்தனர். நேற்று முன்தினம் இரவு அய்யன்கொல்லி அருகே கோட்டப்பாடி வழியாக கருத்தாடு பகுதிக் குள்காட்டுயானை நுழைந்தது. இதனால் பொதுமக்கள் பீதி அடைந்தனர்.

    தகவல் அறிந்த பிதிர்காடு வனகாப்பாளர் ராஜேஸ்குமார் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் காட்டு யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். இதேபோல் கொளப்பள்ளி டேன்டீ ரேஞ்ச் எண்.2 தேயிலை தோட்ட பகுதிகளில் காட்டு யானைகள் முகாமிட்டு உள்ளன.

    அங்கு குடியிருப்புகளை ஒட்டி உலா வருவதால், சேரம்பாடி வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர்.

    ×