search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வலியுறுத்தி"

    • அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி
    • இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார்.

    நாகர்கோவில் : அன்றாட வாழ்வில் தினமும் உடற்பயிற்சி செய்வதால் உடல் நலத்தை பேண முடியும் என்பதை வலியுறுத்தி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை யொட்டி நாகர்கோவிலில் இன்று மாரத்தான் போட்டி நடந்தது. அண்ணா விளையாட்டு அரங்கம் முன்பிருந்து தொடங்கிய இந்த போட்டியை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், மாவட்ட விளையாட்டு அதிகாரி ராஜேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். 4 பிரிவுகளாக போட்டி நடந்தது.

    நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் இருந்து தொடங்கிய 10 கிலோ மீட்டர் தூரம் கொண்ட மினி மாரத்தான் போட்டியானது மணிமேடை வேப்பமூடு, கோர்ட்டு ரோடு, கலெக்டர் அலுவலகம், செட்டிகுளம், இந்து கல்லூரி கோட்டார், ஒழுகினசேரி வழியாக மீண்டும் அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது. இதேபோல் 8 கிலோ மீட்டர் ஆண்களுக்கான மாரத்தான் போட்டி நாகர்கோவில் அண்ணா விளையாட்டரங்கத்தில் தொடங்கி மணிமேடை வேப்பமூடு வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை வந்தடைந்தது.

    பெண்களுக்கான 5 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டி 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் மற்றும் 25 வயதிற்கு மேற்பட்டவர்கள் என 2 பிரிவுகளில் நடத்தப்பட்டது. அண்ணா விளையாட்டு அரங்கத்தில் தொடங்கி கோட்டார், மீனாட்சிபுரம் வழியாக அண்ணா விளையாட்டு அரங்கத்தை மாரத்தான் வந்தடைந்தது.

    மினி மாரத்தான் போட்டியில் மாவட்டம் முழுவதும் இருந்து பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள் 500-க்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டனர். இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரமும், 2-வது பரிசாக ரூ.3 ஆயிரமும், 3-வது பரிசாக ரூ.2 ஆயிரமும் வழங்கப்பட்டது. 7 பேருக்கு ஆறுதல் பரிசாக தலா ஆயிரமும் வழங்கப்பட்டது.

    10 கிலோ மீட்டர் மினி மாரத்தான் போட்டியில் முதல் பரிசை ஜோஸ் தட்டி சென்றார். 2-வது பரிசை அனீஸ் லியோன் என்பவரும், 3-ம் பரிசை மணிகண்டன் என்பவரும் பெற்றனர். 8 கிலோ மீட்டர் தூரம் ஆண்களுக்கான போட்டியில் முதல் பரிசை அகில்ராம், 2-வது பரிசை ஜெயராஜ், 3-வது பரிசை அஜய்குமார் ஆகியோர் பெற்றனர்.

    5 கிலோ மீட்டர் தூரம் ஓடிய 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை கோலி கிராஸ் கல்லூரி மாணவி ரம்யா தட்டி சென்றார். 2-வது பரிசை அதே கல்லூரி மாணவி ஹரிஷ்மாவும், 3-வது பரிசை அனிஷாவும் பெற்றனர்.

    25 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கான மாரத்தான் போட்டியில் முதல் பரிசை போலீஸ் துறையை சேர்ந்த ரஜிதாவும், 2-வது பரிசை கிருஷ்ண ரேகாவும், 3-வது பரிசை சலினாவும் பெற்றனர்

    • இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • திருமருகல் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும்.

    நாகப்பட்டினம்:

    பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நாகை மாவட்டம் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.

    ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் சந்திரசேகர் தலைமை தாங்கினார்.

    தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் பாபுஜி, விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் தமிழரசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் தங்கையன்,ஏஐடியுசி மாவட்ட தலைவர் தியாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.

    ஆர்ப்பாட்டத்தில் திருமருகல் வட்டார தலைமை மருத்துவமனையில் 24 மணி நேரமும் மருத்துவர் பணியில் இருக்க வேண்டும், திருக்கண்ணபுரம், திருப்பயத்தங்குடி, ஏனங்குடி, கணபதிபுரம்,திட்டச்சேரி ஆகிய 5 ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் மருத்துவர் உடன் செயல்பட வேண்டும், திருமருகல் ஒன்றிய பகுதியில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர்.

    முடிவில் ஒன்றிய துணை செயலாளர் ரமேஷ் நன்றி கூறினார்.

    • கேரளா மாநிலத்தை சேர்ந்த நபர் ஒருவர் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்கிறார்.
    • இவர் நாள் ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார்.

    கன்னியாகுமரி:

    கேரளா மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் கோவிந்தன் உன்னி (வயது 58). ஆடிட்டர். இவர் சீடு குருகுலம் சார்பில் தூய்மை பாரதத்தை வலியுறுத்தி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் இருந்து காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவில் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள முடிவு செய்தார்.

    அதன்படி அவர் கன்னியாகுமரி விவே கானந்தபுரத்தில் உள்ள விவேகானந்தா கேந்திர வளாகத்தில் அமைந்து உள்ள ராமாயண தரிசன சித்திரக் கண்காட்சி கூடத்தில் இருந்து தனது சைக்கிள் பயணத்தை தொடங்கினார்.

    அங்கு உள்ள பாரத மாதா சிலைக்கு மலர் தூவி வணங்கினார். அதைத் தொடர்ந்து ராமர் லட்சுமணர் சீதை சிலைகளுக்கு மலர் தூவி வணங்கினார். பின்னர் சித்திரக் கண்காட்சி கூடம் முன்பு உள்ள 27 அடி உயர ஆஞ்சநேயர் சிலையின் கால் பாதத்தில் மலர் தூவி வணங்கினார்.

    அதைத் தொடர்ந்து சைக்கிள் பயணத்தை கன்னியா குமரி விவே கானந்த கேந்திர தலை வர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கன்னியாகுமரி விவே கானந்த கேந்திர மக்கள் தொடர்பு அதிகாரி ரகுநாதன் நாயர், கேந்திர பொறுப்பாளர் சுனில் ராமுலு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கன்னியாகுமரியில் இருந்து சைக்கிள் பயணம் புறப்பட்ட கோவிந்தன் உன்னி தமிழ்நாடு, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், டெல்லி, அரியானா, உத்தரபிரதேசம், பஞ்சாப் வழியாக ஜம்மு காஷ்மீரில் உள்ள வைஷ்ணவி தேவி கோவிலை அடுத்த மாதம் (ஜூலை) 19-ந் தேதி சென்றடைகிறார். மொத்தமுள்ள 5 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரத்தை இவர் 48 நாட்களில் சைக்கி ளில் கடந்து செல்கிறார்.

    இவர் நாள்ஒன்றுக்கு சராசரியாக 90 முதல் 140 கிலோ மீட்டர் தூரம் வரை சைக்கிள் பயணம் மேற்கொள்ள உள்ளார். இவர் ஏற்கனவே கடந்த 2017- ம் ஆண்டு சபரி மலைக்கு பிளாஸ்டிக் கொண்டு செல்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலி யுறுத்தி கேரள மாநிலம் பாலக்காட்டில் இருந்து கன்னியாகுமரி, சென்னை வழியாக மீண்டும் பாலக்காடு சென்றடையும் வகையில் சைக்கிள் பயணம் மேற்கொண்டு உள்ளார்.

    அப்போது இவர் மொத்தம் உள்ள 1860 கிலோ மீட்டர் தூரத்தை 28 நாட்களில் சைக்கிளில் கடந்து சென்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் இவர் இந்த முறை சைக்கிள் பயணம் மேற்கொள்வதற்காக பொது மக்களிடம் இருந்து தலா ஒரு ரூபாய் வீதம் மொத்தம் ரூ 22 ஆயிரம் வசூல் செய்து சைக்கிள் விலைக்கு வாங்கி உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

    ×