search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "லாரி மோதிய விபத்தில்"

    • அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.
    • இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    பவானி:

    அந்தியூர் தவிட்டுப் பாளையம் நஞ்சப்பா வீதியை சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மனைவி லதா மணி (30). இவர்களுக்கு ஒரு மகன், மகள் உள்ளனர்.

    இந்நிலையில் சம்பவத்தன்று லதா மணி தனது மொபட்டில் அந்தியூரில் இருந்து ஈரோடு செல்ல வீட்டில் இருந்து புறப்பட்டார்.

    பவானி-அந்தியூர் மெயின் ரோட்டில் அரசு மருத்துவமனை அருகே சென்று கொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த லாரி எதிர்பாராத விதமாக லதா மணி ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதியது.

    இதில் அவர் கீழே விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த பவானி போலீசார் சம்பவ இடம் விரைந்து வந்து லதா மணியின் உடலை மீட்டு பவானி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் இச்சம்பவம் குறித்து பவானி இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    • பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.
    • இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    கொடுமுடி:

    ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகே உள்ள வெள்ளோட்டம் பரப்பு பகுதியை சேர்ந்த பெரியசாமி. இவரது மனைவி கண்ணம்மாள் (வயது 55). இருவரும் விவசாயம் செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் நேற்று மாலை பெரியசாமி, கண்ணம்மாள் இருவரும் மொபட்டில் கொடுமுடி அருகே உள்ள வெங்கமேடு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக வந்த லாரி ஒன்று இவர்கள் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

    இதில் நிலைதடுமாறி கீழே விழுந்த கண்ணம்மாளின் தலையில் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே கண்ணம்மாள் துடிதுடித்து இறந்தார். கணவர் பெரியசாமிக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து தகவல் அறிந்ததும் கொடுமுடி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து கண்ணம்மாவின் உடலை மீட்டு கொடுமுடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பெரியசாமியை சிகிச்சை க்காக மருத்துவமனையில் சேர்த்தனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கணவன் கண் முன்னால் மனைவி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    ×