search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில்வே இணையதளம்"

    தமிழக மக்கள் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய ரெயில்வே இணையதளத்தில் தமிழையும் சேர்க்க வேண்டும் என மத்திய மந்திரிக்கு, ரெயில் பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    நாகர்கோவில்:

    குமரி மாவட்ட ரெயில் பயணிகள் சங்க தலைவர் ஸ்ரீராம், செயலாளர் எட்வர்டு ஜெனி ஆகியோர் மத்திய ரெயில்வே மந்திரி, ரெயில்வே வாரிய தலைவர், தென்னக ரெயில்வே பொதுமேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    ரெயில்வே புதிய இணையதள சேவையின் மூலமாக ரெயில் டிக்கெட் முன்பதிவு செய்வதற்கு இந்தி மற்றும் ஆங்கில மொழிகள் மட்டுமே பயன்பாட்டில் உள்ளன. வேறு பிராந்திய மொழிகள் எதுவும் அதில் இடம்பெறவில்லை. இதனால் இந்தி மொழி தெரியாத தமிழக மக்களும், பிற பிராந்திய மொழி மக்களும் அவதிப்படும் நிலை உள்ளது.

    எனவே ரெயில்வே முன்பதிவு இணையதள சேவையில் தமிழையும் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம் எளிதாக டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும் என்பதால், தமிழகத்தில் உள்ள 8 கோடி மக்கள் பயன் பெறுவார்கள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
    காத்திருப்போர் நிலையில் உள்ள ரெயில் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ரெயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழக (ஐ.ஆர்.சி.டி.சி.) இணையதளத்தில் ரெயில் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன. ரெயில்களில் மொத்தம் 10 லட்சத்து 50 ஆயிரம் படுக்கைகள் உள்ள நிலையில், தினந்தோறும் சுமார் 13 லட்சம் டிக்கெட்டுகள் முன்பதிவு செய்யப்படுகின்றன.

    இதனால், பல்லாயிரக்கணக்கான டிக்கெட்டுகள் காத்திருக்கும் நிலை டிக்கெட்டுகளாகவும், ஆர்.ஏ.சி. டிக்கெட்டுகளாகவும் அமைகின்றன. அந்த டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை தெரிந்து கொள்ள முடியாதநிலை இருந்தது.

    இந்நிலையில், அத்தகைய டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா? என்பதை ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளமே யூகித்து சொல்லி விடும். அதற்கேற்ப இணையதளம் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

    ரெயில்வே தகவல் சேவை மையம் உருவாக்கிய புதிய தொழில்நுட்பத்தின்படி, முன்பதிவு நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை வைத்து, காத்திருக்கும் நிலையில் உள்ள டிக்கெட் உறுதி செய்யப்பட வாய்ப்பு உள்ளதா என்பதை இணையதளம் யூகித்து சொல்லி விடும். இந்த புதிய முறை, நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது. 
    ×