search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரெயில் முன் பாய்ந்து"

    • செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.
    • திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த வெள்ளாள பாளையம் பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (35). இவருக்கு திருமணம் ஆகி ஒரு குழந்தை உள்ளது. செந்தில்குமார் ஒரிச்சேரியில் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

    இந்நிலையில் கடந்த சில நாட்களாக செந்தில்குமார் குடும்ப பிரச்சினை மற்றும் கடன் பிரச்சினை காரணமாக மன வேதனையில் இருந்து வந்துள்ளார்.

    இதனால் தற்கொலை செய்ய முடிவெடுத்த செந்தில் குமார் சம்பவத்தன்று மதியம் தனது பெரியம்மா மகள் ரம்யாவிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தான் தற்கொலை செய்து கொள்ள போவதாக கூறிவிட்டு போன் இணைப்பை துண்டித்து விட்டார்.

    பின்னர் செந்தில்குமார் நேராக தொட்டிபாளையம் ரெயில் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சகாப்தி அதிவிரைவு எக்ஸ்பிரஸ் ரெயில் வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென செந்தில்குமார் ரெயில் முன் பாய்ந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்த வரை அக்கம் பக்கத்தினர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர்.

    அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து மனைவி மற்றும் உறவினர்கள் அல்லது பரிதாபமாக இருந்தது.

    இது குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

    • வாலிபர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் யார்டு பகுதியில் கடந்த 30-ந் தேதி இரவு வாலிபர் ஒருவர் அவ்வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதில் அந்த வாலிபரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்த வாலிபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து தற்கொலை செய்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இறந்த வாலிபா் கருநீல நிற ஜீன்ஸ் சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தார். இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×