search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "jumping in front of a train"

    • வாலிபர் ஒருவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
    • ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில்வே போலீஸ் எல்லைக்கு உட்பட்ட மகுடஞ்சாவடி ரெயில் நிலையம் யார்டு பகுதியில் கடந்த 30-ந் தேதி இரவு வாலிபர் ஒருவர் அவ்வழியாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

    இதில் அந்த வாலிபரின் தலை துண்டாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த ஈரோடு ரெயில்வே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று இறந்து கிடந்த வாலிபரின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் இறந்த வாலிபருக்கு சுமார் 35 முதல் 40 வயது இருக்கும் என்பது தெரியவந்தது. ஆனால் இறந்தவர் யார்?, எந்த ஊரை சேர்ந்தவர்? என்ற விவரம் தெரியவில்லை.

    இதையடுத்து தற்கொலை செய்த வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்த னர்.

    இறந்த வாலிபா் கருநீல நிற ஜீன்ஸ் சட்டையும், கருப்பு நிற ஜீன்ஸ் பேண்ட் அணிந்து இருந்தார். இச்சம்பவம் குறித்து ஈரோடு ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×