search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரிஷிகேஷ்"

    கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய சமூக ஆர்வலர் அகர்வால் மரணத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். #Agarwal #SaveGanga #Modi
    புதுடெல்லி:

    கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்து வந்தார். 

    87 வயதான அகர்வால் ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 100 நாட்களை தாண்டிய நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 



    இந்நிலையில், சமூக ஆர்வலர் அகர்வால் மரணம் அடைந்தத்ற்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
     
    இதுதொடர்பாக அவர் டுவிட்டரில் கூறுகையில், அகர்வால் மரணம் அடைந்த செய்தி கேட்டு துயரத்தில் ஆழ்ந்துள்ளேன். அவரது பரந்த அறிவு மற்றும் சமூகத்தின் பால் அவர் கொண்டுள்ள அக்கறையை எண்ணிப் பார்க்கிறேன்.

    குறிப்பாக, கங்கை நதியை தூய்மைப்படுத்தும் விவகாரத்தில் அவர் நடத்திய போராட்டம் என்றென்றும் நினைவில் பசுமையாக இருக்கும் என பதிவிட்டுள்ளார். #Agarwal #SaveGanga #Modi
    கங்கை நதியை சுத்தப்படுத்த வலியுறுத்தி உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்த சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் இன்று காலமானார். #Agarwal #SaveGanga
    புதுடெல்லி:

    கங்கை நதியை சுத்தம் செய்யும் வகையில் சட்டம் கொண்டுவர வேண்டும்; கங்கோதிரி மற்றும் உத்தரகாசி இடையே கங்கை இடையூறு இன்றி பாய்வதை உறுதி செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக ஆர்வலர் ஜிடி அகர்வால் 4 மாத காலமாக உண்ணாவிரதம் இருந்தார். 

    87 வயதான அகர்வால் ஜூன் 22 முதல் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தார். போராட்டம் 100 நாட்களை தாண்டிய நிலையில், நேற்று அவரது உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து அவர் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

    கான்பூர் ஐஐடி பேராசிரியராக பணியாற்றிய அகர்வால் நதிகளுக்காக பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. #Agarwal #SaveGanga
    தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகளுள் ஒருவரான மஞ்சிமா மோகனுக்கும், நடிகர் ரிஷிக்கும் காதல் என வெளியான தகவல் குறித்து மஞ்சிமா விளக்கம் அளித்துள்ளார். #ManjimaMohan
    நடிகை மஞ்சிமா மோகன் அச்சம் என்பது மடமையடா படத்தில் நடித்திருந்தார். அதன் பிறகு அவருக்கு எந்த பெரிய வாய்ப்பும் கிடைக்கவில்லை. தற்போது அவர் கவுதம் கார்த்திக் ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார்.

    இந்நிலையில் நடிகர் ரிஷியை அவர் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வந்தன. இதுகுறித்து அவரிடம் கேட்டதற்கு ’ரிஷி என்னுடைய நெருங்கிய நண்பன். வெறும் வார்த்தைக்காக சொல்லவில்லை, உண்மையிலேயே என்னுடைய நல்ல நண்பன்.



    நான் ஒருவருடன் டேட்டிங் போகிறேன் என்றால், குறைந்தபட்சம் அதைப்பற்றி ஒரு புகைப்படமாவது வெளிவந்திருக்க வேண்டும். ஆனால், அப்படி இல்லாமல் அவர்களாக ஏதாவது கதைகட்டி விடுகிறார்கள்’ என்று கூறி இருக்கிறார். மேலும் இதுவரை யாரும் தன்னை காதலிப்பதாக நேரில் வந்து கூறவே இல்லை. அப்படியே கூறினாலும் தனக்கு முதல் பார்வையில் காதல் என்பதில் நம்பிக்கை இல்லை என்றும் கூறி இருக்கிறார். #ManjimaMohan

    ×