search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மைத்ரிபாலா சிறிசேனா"

    250-க்கும் அதிகமான உயிர்களை பறித்த ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து இலங்கையில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை சட்டத்தை மேலும் ஒரு மாதத்துக்கு நீட்டித்து அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா உத்தரவிட்டுள்ளார்.
    கொழும்பு:

    இலங்கை தலைநகர் கொழும்புவில் கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனையின்போது 3 தேவாலயங்கள், 4 ஓட்டல்கள் மற்றும் ஒரு குடியிருப்பு பகுதியில் அடுத்தடுத்து 8 இடங்களில் குண்டுகள் வெடித்தன.

    இந்த தாக்குதல்களில் இந்தியர்கள் உள்பட 250-க்கும் அதிகமானவர்கள் உயிரிழந்தனர். 400-க்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்தனர். இந்த கொடூர தாக்குதலுக்கு காரணமான தேசிய தவ்ஹீத் ஜமாத் உள்பட 3 பயங்கரவாத இயக்கங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்தது.



    இச்சம்பவம் தொடர்பாக 89 பேர் கைது செய்து விசாரணை காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். விசா காலம் முடிந்தும் இலங்கையில் தங்கி இருந்த சுமார் 200 இஸ்லாமிய போதகர்கள் உள்பட 600 வெளிநாட்டினர் வெளியேற்றப்பட்டனர்.

    இந்நிலையில், ஈஸ்டர் தாக்குதலை தொடர்ந்து நாடு முழுவதும் அவசரநிலை சட்டத்தை பிரகடனப்படுத்தி இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா கடந்த மாதம் 22-ம் தேதி உத்தரவிட்டார்.

    இந்த அவசரநிலை உத்தரவைமேலும் ஒரு மாதத்துக்கு நீட்டிக்கும் அரசு அறிவிக்கையில் மைத்ரிபாலா சிறிசேனா இன்று கையொப்பமிட்டுள்ளார்.
    சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள் முன்னர் திட்டமிட்டதாக இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார். #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    கொழும்பு:

    ஐக்கிய நாடுகள் சபை கூட்டத்தில் பங்கேற்பதற்காக அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு சென்றிருந்த இலங்கை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா அங்கு வாழும் சிங்களத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.

    கடந்த 2009-ம் ஆண்டில் சென்னையில் இருந்து விமானம் மூலம் கொழும்பு நகரை தாக்க விடுதலைப் புலிகள்  திட்டமிட்டதாக அப்போது மைத்ரிபாலா சிறிசேனா குறிப்பிட்டார்.

    அந்த காலகட்டத்தில் இலங்கையின் அந்நாள் அதிபர், பிரதமர், பாதுகாப்புத்துறை செயலாளர் மற்றும் ராணுவ தளபதி அனைவருமே வெளிநாடுகளுக்கு சென்றிருந்தனர். தற்காலிக ராணுவ மந்திரியாக அப்போது நான் பொறுப்பேற்றிருந்தேன்.


    சென்னையில் இருந்தோ, வேறேதாவது காட்டுப் பகுதியில் இருந்தோ கொழும்பு நகரில் உள்ள சில முக்கிய பகுதிகளில் விடுதலைப் புலிகள் வான்வழியாக வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தப் போவதாக உளவுத்துறை மூலம் தகவல் வந்தது. இதை தொடர்ந்து அனைவரும் வெளியேறி விட்டனர்.

    தாக்குதலுக்கு பயந்து நானும் கொழும்புவை விட்டு வெளியேறி வெவ்வேறு பகுதிகளில் அப்போது தங்கி இருந்தேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

    கடந்த 2007 மற்றும் 2009-ம் ஆண்டுகளில் கொழும்பு நகரின்மீது இருமுறை விமான தாக்குதல்களை விடுதலைப் புலிகள் நடத்தி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. #LTTE #planefromChennai #MaithripalaSirisena
    இலங்கையில் உள்ள இந்து ஆலயங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடுவதை தடை செய்யும் சட்டத்துக்கு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. #bananimal #Hindutemples #sirisena
    கொழும்பு:

    வேண்டுதல்கள் நிறைவேறும்போது ஆலயங்களில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிட்டு பக்தர்களுக்கு விருந்து படைப்பது இந்து மக்களிடையே பாரம்பரிய பழக்கமாக இருந்து வருகிறது. இதுதவிர, திருவிழாக்களின்போது கிடா வெட்டுதல் போன்ற சம்பிரதாயங்கள் நடத்தப்படுகின்றன.

    இலங்கையின் யாழ்ப்பாணம் பகுதியில் உள்ள கவுனவட்டே நரசிம்மர் ஆலயத்தில் ஆடு, சேவல் போன்றவற்றை பலியிடும் பழக்கத்துக்கு எதிராக யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் சிலோன் இந்து மகாசபை என்ற அமைப்பு முன்னர் வழக்கு தொடர்ந்தது.

    இந்த வழக்கில் கடந்த அக்டோபர் மாதம் தீர்ப்பளித்த நீதிபதி இளஞ்செழியன் கோயில்களில் உயிரினங்களை பலியிடும் பழக்கத்துக்கு தடை விதித்து உத்தரவிட்டார்.

    இந்நிலையில்,  இலங்கையில் நாடு முழுவதும் உள்ள இந்து கோயில்களில் இத்தகைய பழக்கத்துக்கு தடை விதிக்கும் சட்ட முன்வரைவு ஒன்றை அந்நாட்டின் இந்து மத விவகாரங்கள் துறை மந்திரி டி.எம். சாமிநாதன் முன்மொழிந்திருந்தார்.

    அந்த முன்மொழிவை அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தலைமையிலான மந்திரிசபை இன்று வழிமொழிந்துள்ளது. அந்த முன்மொழிவில் கூறப்பட்டுள்ளதாவது.

    விலங்குகள் மற்றும் பறவைகளை பலியிடும் பண்டைக்கால வழிபாட்டு முறைகளை அனைத்து தரப்பு இந்து மக்களும் ஏற்றுகொள்வதில்லை. பக்தர்களுக்கு மனரீதியாகவும், சுகாதாரரீதியாகவும் ஏற்படும் தீமைகளைப்பற்றி கவலைப்படாமல் கோயில் வளாகங்களில் ஆடு, கோழிகளை பலியிடும் இந்த  பழக்கத்துக்கு இந்து மதத்தை சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களும், இந்து அமைப்புகளும் ஒருமனதாக எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

    இந்த பழக்கத்துக்கு தடை விதித்து தண்டனைக்குரிய குற்றமாக அறிவிக்க வேண்டும் என அவர்கள் விரும்புகின்றனர். 


    அகிம்சை மற்றும் பிற உயிர்களுக்கு தீங்கிழைக்காமை என்பதுதான் பெரும்பாலான மதங்களின் கொள்கையாக உள்ளதாலும், இலங்கையில் வாழும் பெரும்பாலான மக்கள் இந்த கொள்கையை பின்பற்றி வருவதாலும் பாவச்செயலாக கருதி இந்த பழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டியுள்ளது.

    இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த சட்ட முன்வரைவு சட்டத்துறை அமைச்சகத்தின் இறுதி ஒப்புதலுக்கு விரைவில் அனுப்பி வைக்கப்படும். பின்னர், இலங்கை அரசின் தலைமை வழக்கறிஞரின் மூலம் அரசின் அறிவிக்கையாக வெளியாகி, பாராளுமன்றத்தின் ஒப்புதலுடன் சட்டமாக அமல்படுத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. #bananimal #Hindutemples #sirisena 
    ×