என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மேட்டூர் அணை பூங்கா"
- சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர்.
- காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர்.
சேலம்:
சேலம் மாவட்டத்தில் உள்ள சுற்றுலா தலமான மேட்டூர் அணை பூங்காவிற்கு விடுமுறை நாளான நேற்று ஏராளமான சுற்றுலாப் பணிகள் வந்தனர். அவர்கள் காவிரியில் நீராடி அணைக் கட்டு முனியப்பனை தரி சித்தனர். நேர்த்தி கடனை நிறைவேற்ற ஆடு, கோழிகள் பலியிட்டு பொங்கல் வைத்து வழிபட்டனர்.
மீன்களை வாங்கி சுவைத்தும், அண்ணா பூங்காவிற்கு சென்று ஊஞ்ச லாடியும், சறுக்கு விளையாடி யும் மகிழ்ந்தனர். சிறிய வர்கள், பெரியவர்கள் என வயது வித்தியாசம் இல்லா மல் விளையாடி மகிழ்ந்தனர்.
மான், முயல்கள், பாம்புகள் மற்றும் மீன்காட்சி சாலையும் பார்த்து மகிழ்ந்தனர். நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 7513 சுற்றுலா பணிகள் வந்து சென்றனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 37 ஆயிரத்து 565 வசூல் ஆனது. அணையின் வலது கரையில் உள்ள பவள விழா நினைவு கோபுரத்தை 772 சுற்றுலா பயணிகள் பார்த்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக ரூ.3860 வசூல் ஆனது.
ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டிற்கு தமிழக மற்றும் அண்டை மாநிலங்க ளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்வார்கள்.
பக்ரீத் பண்டிகை மற்றும் சனி, ஞாயிறு விடுமுறை நாளான கடந்த 4 நாட்களாக ஏற்காட்டில் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்தி ருந்தனர். அவர்கள் அண்ணா பூங்கா, ரோஜா தோட்டம், ஐந்திணை பூங்கா, ஏரி பூங்கா, பகோடா பாயிண்ட், சேர்வரா யன் குகை கோவில், லேடிஸ் சீட், ஜெண்ட் சீட் என அனைத்து பகுதிகளிலும் குடும்பத்து டன் பார்த்து மகிழ்ந்தனர்.
மேலும் படகு இல்லத்தில் நீண்ட வரிசையில் காத்தி ருந்து குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். பூங்காவில் பூத்துக் குலுங்கும் மலர்களை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்து செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.
சுற்றுலா பயணிகள் அதிக அளவில் குவிந்திருந்த தால் ஏற்காடு மலை பாதை யில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
- ஏற்காட்டில் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
- படகு இல்லத்தில் திரண்ட அவர்கள் வரிசையில் காத்திருந்து ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
மேட்டூர்:
மேட்டூர் அணை பூங்காவிற்கு சேலம் மற்றும் அண்டை மாவட்டங்களை சேர்ந்த ஏராளமானோர் தினமும் சுற்றுலாவாக வந்து செல்கிறார்கள். விடுமுறை தினமான நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.
மேட்டூர் காவிரியில் நீராடிய அவர்கள் அணைக்கட்டு முனியப்பனை தரிசித்தனர். பின்னர் ஆடு, கோழி பலியிட்டு நேர்ததிக்கடன் செலுத்தினர். பின்னர் அணை பூங்காவிற்கு சென்று குடும்பத்தினருடன் உண்டு மகிழ்ந்தனர்.
பூங்காவில் குழந்தைகளு டன் விளையாடி மகிழ்ந்த அவர்கள் மீன்காட்சி சாலை, பாம்பு பண்ணை, மான் பண்ணை, முயல் பண்ணை ஆகியவற்றை பார்த்து ரசித்தனர். நேற்று ஒரே நாளில் மேட்டூர் அணை பூங்காவிற்கு 4 ஆயிரத்து 722 பார்வையாளர்கள் வந்து சென்றனர்.
இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 23 ஆயிரத்து 610 வசூலானது. மேலும் அணையின் பவள விழா கோபுரத்தை காண 736 பேர் வந்து சென்றனர். இதன் மூலம் பார்வையாளர் கட்டணமாக 3 ஆயிரத்து 680 வசூலானது குறிப்பிடத்தக்கது.
ஏற்காட்டில் நேற்று காலை முதலே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிந்தனர். படகு இல்லத்தில் திரண்ட அவர்கள் வரிசையில் காத்திருந்து ஏரியில் படகு சவாரி சென்று மகிழ்ந்தனர்.
மேலும் அண்ணா பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட், தாவரவியல் பூங்கா, ரோஜா தோட்டம் சேர்வராயன் கோவில் ஆகிய பகுதிகளில் அதிக அளவில் திரண்டிருந்தனர். இதனால் கடைகளில் வியாபாரம் களை கட்டியதால் வியாபாரிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்