search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முளகுமூடு"

    • நிகழ்ச்சியில் 5, 10, 15 கிலோ பக்கெட் நெய், 250 கிராம் பால்கோவா பாக்ஸ் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.
    • மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    முளகுமூடு பால் பதனிடும் நிலையத்தில் விற்பனை, முகவர் தின விழா நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின் சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசுரெத்தி னம் முன்னிலை வகித்தார். நிலைய பணியா ளர் தனிஸ்லாஸ் வரவேற்று பேசினார். மேலாண்மை இயக்குனர் ஜெரால்டு ஜஸ்டின் அறி முக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஊரம்பு பாத்திமா டிரேடர்ஸ் நிர்வாகி வர்கீஸ் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் 5, 10, 15 கிலோ பக்கெட் நெய், 250 கிராம் பால்கோவா பாக்ஸ் போன் றவை அறிமுகப்படுத்தப்பட் டது. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை முக வர்கள் பலர் கலந்து கொண்ட னர். முடிவில், நிலைய பணி யாளர் சாலமோன் ஜோஸ் நன்றி கூறினார்.

    • முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா வளாகத்தில் நடைபெற்றது.
    • குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசுரத்தினம் தலைமையில் நடைபெற்றது.

    தக்கலை, அக்.31-

    முளகுமூடு மறைவட்ட மூத்த குடிமக்கள் தின விழா முளகுமூடு தூய மரியன்னை பசலிக்கா வளாகத்தில், குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் ஏசுரத்தி னம் தலைமையில் நடைபெற்றது.

    முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் அறிமுக உரையாற்றினார். குழித்துறை மறைமாவட்ட வார்த்தை வழிபாட்டு பணி குழுக்களின் செயலாளர் செலஸ்டின் ஜெரால்ட், தூய மரியன்னை பசலிக்கா அதிபர் டொமினிக் எம் கடாட்சதாஸ், முளகுமூடு வட்டார கிட்ஸ் இயக்குனர் எலியாஸ் ஆகியோர் வாழ்த்தி பேசினர்.

    சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் குமரி ஆதவன் கலந்து கொண்டு, மூத்தக் குடிமக்கள் வாழ்க்கையை எதிர்கொள்வதற்கான வழிகள் குறித்துப் பேசினார். சமூக நலத்துறை பொறுப்பாளர் அமுதா முதியோர்களுக்கான அரசு சார்ந்த உதவிகள் என்னென்ன என்று பேசினார்.

    முன்னதாக மறைவட்ட அருட்பணி பேரவை துணைத் தலைவர் ஸ்டாலின் வரவேற்றார். மறை மாவட்ட பொதுநிலையினர் பணிக்குழு தலைவர் எட்வர்ட் ஆஸ்டின் நன்றி கூறினார். தொட ர்ந்து முளகுமூடு வட்டார முதல்வர் மரிய ராஜேந்திரன் தலைமையில் திருப்பலியும் அன்பின் விருந்தும் நடைபெற்றது.

    இதில் அருட்தந்தையர்கள் ஏராளம் பேர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை பொதுநிலையினர் பணிக்குழு செயலர் ஜான்சி, பொருளார் ரோஸ்மேரி, மேப்புப் பணி பேரவை செயலர் சிபி மோள் உட்பட பலர் இணைந்து செய்தனர். நிகழ்வில் 1500 க்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் கலந்து கொண்டனர்.

    • பேரூராட்சி செயல் அலுவலருக்கு பொதுமக்கள் பாராட்டு
    • பல வருடங்களாக குளம் சுத்தம் செய்யப்படாத நிலையில் தற்போது குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை

    கன்னியாகுமரி:

    முளகுமூடு பேரூ ராட்சிக்குட்பட்ட 3, 4 ஆகிய வார்டுகளுக்கு உட்பட்ட பகுதியில் சுமார் மூன்று ஏக்கர் பரப்பளவு உள்ள ஆள்காட்டி குளம் உள்ளது. இந்த குளத்திலுள்ள நீர் விவசாய நிலங்களுக்கு வரப்பிரசாதமாக காணப்பட்டது. ஆனால் குளம் ஆக்கிரமிப்பாலும், கழிவுநீர் பாய்ந்ததாலும் சீர்கேடு ஏற்பட தொடங்கி யது. இதனால் விவசாயிகள் ஆடு, மாடுகளை கூட குளிப்பாட்ட இறங்குவ தில்லை. இந்நிலையில் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பாக பெண் ஒருவர் அந்த குளத்தில் இறந்து கிடந்தார்.

    இந்நிலையில் முளகுமூடு பேரூராட்சி செயல் அலுவலர் வழிகாட்டுதலில் குளத்திலுள்ள பாசிகளை அகற்றி சுத்தம் செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டு வந்தது. இதனடிப்படையில் பேரூராட்சி தலைவர் ஜெனுஷா அஜித், செயல் அலுவலர் கிறிஸ்துதாஸ் தலைமையில் கவுன்சிலர்கள் விஜயகுமார், மகேஷ் மற்றும் அலுவலகபணியாளர்கள் சசிகுமார், றாபின்சன், ஸ்டீபன் ஆகியோர் முன்னிலையில் பணிகள் தொடங்கின.

    தொடர்ந்து 6 நாட்களாக தூய்மைபணியாளர்கள் 30 பேர் மற்றும் அலுவலக பணியாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட 40 பேர் இந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பல வருடங்களாக குளம் சுத்தம் செய்யப்படாத நிலையில் தற்போது குளத்தை சுத்தம் செய்ய நடவடிக்கை எடுத்த செயல் அலுவலர் மற்றும் பேரூராட்சி தலைவரை பொதுமக்கள் பாதசாரிகள் பாராட்டினர். தற்போது குளம் அழகிய சிறு காயலை போல் காட்சியளிக்கிறது. இதனால் அப்பகுதி மக்கள் செயல் அலுவலர் கிறிஸ்துதாஸ் மற்றும் பேரூராட்சி தலைவர் ஜெனுஷா அஜித் ஆகியோர்களை பாராட்டி வருகின்றனர்.

    ×