search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் முகவர் தின விழா
    X

    முகவர் தின விழாவில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் பேசியபோது எடுத்த படம் 

    முளகுமூடு நாஞ்சில் பால் பதனிடும் நிலையத்தில் முகவர் தின விழா

    • நிகழ்ச்சியில் 5, 10, 15 கிலோ பக்கெட் நெய், 250 கிராம் பால்கோவா பாக்ஸ் போன்றவை அறிமுகப்படுத்தப்பட்டது.
    • மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார்.

    கன்னியாகுமரி:

    முளகுமூடு பால் பதனிடும் நிலையத்தில் விற்பனை, முகவர் தின விழா நடந்தது. மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின் சென்ட் மார் பவுலோஸ் தலைமை தாங்கினார். குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் யேசுரெத்தி னம் முன்னிலை வகித்தார். நிலைய பணியா ளர் தனிஸ்லாஸ் வரவேற்று பேசினார். மேலாண்மை இயக்குனர் ஜெரால்டு ஜஸ்டின் அறி முக உரையாற்றினார். சிறப்பு விருந்தினராக ஊரம்பு பாத்திமா டிரேடர்ஸ் நிர்வாகி வர்கீஸ் கலந்து கொண்டு பேசினார்.

    நிகழ்ச்சியில் 5, 10, 15 கிலோ பக்கெட் நெய், 250 கிராம் பால்கோவா பாக்ஸ் போன் றவை அறிமுகப்படுத்தப்பட் டது. இதில் பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை முக வர்கள் பலர் கலந்து கொண்ட னர். முடிவில், நிலைய பணி யாளர் சாலமோன் ஜோஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×