search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முப்பூஜை"

    • பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது.
    • அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அக்ரஹாரம், புதுப்பாளையம் பகுதியில் வசிக்கும் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு வாழப்பாடி காமராஜ்நகரில் பெரியாற்றின் கரையிலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் குல தெய்வமாக விளங்கி வருகிறது.

    இக்கோவிலில் பாரம்பரிய முறைப்படி முப்பூஜை திருவிழா 3 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமரிசையாக நடைபெற்றது. அக்ரஹாரம் குடியிருப்பு பகுதியில் இருந்து கோயிலுக்கு ஊர்வலமாக சென்ற 100க்கும் மேற்பட்ட பெண்கள் புதிய மூங்கில் கூடைகளில் பூஜை பொருட்கள் மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு பம்பை உறுமி மேளத்திற்கு ஏற்ப சாமியாடியபடிச் சென்றனர்.

    இந்நிகழ்வு, காண்போரை பரவசமூட்டும் வகையில் அமைந்தது. பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியில் குல தெய்வமான பெரியாண்டிச்சி அம்மனுக்கு, ஆடு,கோழி, பன்றி ஆகியவற்றை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். இளம் தம்பதிகள் குழந்தைகளுக்கு மொட்டை போட்டு, காது குத்தி, உறவினர்களை அழைத்து விருந்து வைத்து உபசரித்தனர்.

    நாமக்கல் மாவட்டம் மங்களபுரத்திலுள்ள பெரியாண்டிச்சி அம்மன் கோயிலுக்கு, நேற்று முன்தினம் திரண்டு சென்ற வாழப்பாடி பகுதி மக்கள், முப்பூஜை வழிபாடு நடத்தியதும். பெரியாண்டிச்சி அம்மன் கோயிலிலுள்ள முன்னடியான் என அழைக்கப்படும் கருப்பனார் சுவாமிக்கு மதுபானம் படையலில் வைத்து வழிபாடு நடத்தியதும் குறிப்பிடதக்கதாகும்.

    இதுகுறித்து, வாழப்பாடி புதுப்பாளையம் சரவணன், அக்ரஹாரம் அங்கமுத்து, கலைச்செல்வி ஆகியோர் கூறியதாவது:

    பணி நிமித்தமாக பல்வேறு பகுதியில் வசித்து வரும் உறவினர்களை, ஒரே இடத்தில் சந்தித்து உறவை மேம்படுத்திக் கொள்வதற்காக, 3 ஆண்டுக்கு ஒருமுறை ஒட்டு மொத்த பங்காளிகளின் குடும்பங்களும் ஒன்று சேர்ந்து, குலதெய்வமான பெரியாண்டிச்சி அம்மன் கோயிலில் முப்பூஜை திருவிழா கொண்டாடுவதை முன்னோர்கள் வழியில் தொடர்ந்து வருகிறோம்.

    100 குடும்பங்களை சேர்ந்த உறவுகள் ஒன்றிணைந்து குல தெய்வ முப்பூஜை வழிபாடு நடத்தியது பெரும் மகிழ்ச்சி–யை ஏற்படுத்தியதோடு, உறவை பலப்படுத்தி ஒற்று–மையை அதிகரித்துள்ளது' என்றனர்.

    • வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த குல தெய்வமாக விளங்கி வரும் பழமையான மல்லன் மல்லி கோவில் அமைந்துள்ளது.
    • 100-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடா, சேவல், பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து முப்பூஜை வழிபாடு நடத்தினர்.

    வாழப்பாடி:

    வாழப்பாடி அடுத்த அத்தனுார்பட்டியில் சேலம், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு குல தெய்வமாக விளங்கி வரும் பழமையான மல்லன் மல்லி கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், வேறெங்கும் இல்லாத மல்லன் மல்லி மற்றும் அடக்குப்பூச்சி ஆகிய பெயர்களைக் கொண்ட தெய்வங்கள் மூலவராக அருள்பாலித்து வருகின்றனர்.

    இக்கோவிலில் 4 ஆண்டுக்கு பிறகு ஒன்றுகூடிய குல தெய்வ பங்காளிகள், நேற்று 100-க்கும் மேற்பட்ட ஆட்டுக்கிடா, சேவல், பன்றி ஆகியவற்றை பலி கொடுத்து முப்பூஜை வழிபாடு நடத்தினர். முன்னதாக, 500 -க்கும் மேற்பட்ட மூங்கில் கூடைகளில் பூஜை மற்றும் பொங்கல் வைப்பதற்கு தேவையான பொருட்களை வைத்து தலையில் சுமந்து கொண்டு, சாமியாடியபடி பெண்கள் ஊர்வலமாக சென்றனர். இந்த ஊர்வலம் காண்போரை பரவசப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. முப்பூஜை வழிபாடு முடிந்ததும், உறவினர்கள் மற்றும் நண்பர்களை வரவழைத்து அசைவ விருந்து வைத்து உபசரித்தனர்.

    வாழப்பாடி அடுத்த துக்கியாம்பாளையம் கிராமத்தில் நல்லசேவி வகையறா குல தெய்வ பங்காளிகள் ஒன்றிணைந்து ஐயனாரப்பன், செல்லியம்மன், கருப்பனார், முனியப்பன், பெரியாண்டிச்சி சுவாமிகளுக்கு முப்பூஜை வழிபாடு நடத்தினர். இந்த வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • அத்தனூர்பட்டி கிராமத்தில், நேற்று பச்சியம்மன், பச்சியாயி, பெரியாண்டிச்சி ஆகிய 3 அம்மனுக்கும், முனியப்பன் சாமிக்கும் ஒரே நேரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெற்றது.
    • 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி பகுதியில் பெரும்பாலான கிராமங்களில் இன்றளவும் பாரம்பரிய முறைப்படி முன்னோர்கள் வழியாக, பெரியாண்டிச்சி அம்மன், பச்சியம்மன், பேச்சியம்மன், அய்யனார், முனியப்பன், கருப்பனார், மதுரைவீரன் உள்ளிட்ட குலதெய்வங்களுக்கு ஆண்டு தோறும், ஆட்டுக்கிடா, சேவல், பன்றி பலியிட்டு முப்பூஜை வழிபாடு நடத்தி வருகின்றனர்.

    அத்தனூர்பட்டி கிராமத்தில், நேற்று பச்சியம்மன், பச்சியாயி, பெரியாண்டிச்சி ஆகிய 3 அம்மனுக்கும், முனியப்பன் சாமிக்கும் ஒரே நேரத்தில் முப்பூஜை திருவிழா நடைபெற்றது. பெண்கள் பாரம்பரிய முறைப்படி மூங்கில் கூடைகளில் பூஜைப் பொருட்களை சுமந்தபடி பம்பை மேளத்தோடு சாமியாடிபடி சென்றனர். இந்த சிறப்பு பூஜை வழிபாட்டில் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 2000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

    அம்மன் சன்னதியில் பொங்கலிட்டு பலியிட்ட ஆட்டுக்கிடா, சேவல், பன்றி இறைச்சியை சமைத்து, உறவினர்கள் நண்பர்களுக்கு விருந்து வைத்து கோலாகலமாக கொண்டாடினர்.

    கொரோனா பெருந்தொற்று முடக்கத்தால், 3 ஆண்டுகளுக்கு பிறகு திருவிழா நடைபெறுவதால், ஏராளமானோர் குழந்தைகளுக்கு மொட்டையடித்து காதணி விழா நடத்தியும், பெயர்சூட்டியும் மகிழ்ந்தனர்.

    விழாவிற்காக ஏற்பாடுகளை, தோது, பட்டிக்காரர் ராமசாமி, பால்காரர் ஆறுமுகம், பெருமாள் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் உழவன் முருகன், சாந்தி கந்தன் மற்றும் ஆசிரியர் குருநாதன், கைலாசம், சடையன் ஆகியோர் செய்திருந்தனர்.

    ×