search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "முதியவர் திடீர் சாவு"

    • திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.
    • சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    ஈரோடு:

    ஈரோடு சூரம்பட்டி கோவலன் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன் (61). இவருக்கு கடந்த 6 மாத காலமாக மூச்சு திணறல் ஏற்பட்டு வந்துள்ளது.

    இதற்காக அவர் மருந்து, மாத்திரை எடுத்து வந்துள்ளார். சம்பவத்தன்று திடீரென மூச்சு விடுவதில் தியாகராஜனுக்கு சிரமம் ஏற்பட்டது.

    இதனையடுத்து அவரை ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். பின்னர் மருத்துவர் மருந்து மாத்திரை கொடுத்து வீட்டுக்கு அனுப்பி விட்டார்.

    இந்நிலையில் இரவு மீண்டும் அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது.அவரை மீண்டும் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    அவரை பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தியாகராஜன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார்
    • பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர்

    ஆண்டிபட்டி:

    திருப்பூரை சேர்ந்தவர் மைக்கேல்ராசு (வயது60). இவர் மதுபோதைக்கு அடிமையானதால் தேனி மாவட்டம் க.விலக்கு பகுதியில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சேர்க்கப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் திடீரென மயங்கி கிடந்தார். இது குறித்து அவரது சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர் விரைந்து வந்து மைக்கேல்ராசை தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார்.

    அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ைமக்கேல்ராசு எற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் க.விலக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    ×