search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்விளக்குகள்"

    • மின்விளக்குகள் எரியாததால் திருப்பரங்குன்றம் நிலையூர் சாலை இருள் சூழ்ந்து காணப்படுகிறது.
    • வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

    திருப்பரங்குன்றம்

    மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்துள்ள நிலையூர், கைத்தறிநகரில் பல்லாயிரக்கணக்கானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருந்து நாள் ேதாறும் ஏராளமானோர் வேலைக்கு நகர் பகுதிக்கு வந்து செல்கின்றனர். மேலும் மாணவ-மாணவி கள் பள்ளி, கல்லூரி களுக்கு செல்கின்றனர்.

    திருப்பரங்குன்றத்தில் இருந்து நிலையூர் செல்லும் மெயின்ரோடு பெரும் பாலான நேரங்களில் ஆள் நடமாட்டமில்லாமல் இருக்கும். தற்போது இந்த ரோட்டில் மின்விளக்கு களும் பழுதாகி எரியாமல் உள்ளது. இதனால் இரவு நேரங்களில் திருப்ப ரங்குன்றம்-நிலையூர் ரோடு இருள் சூழ்ந்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் தட்டு தடுமாறி செல்ல வேண்டி உள்ளது.

    மோட்டார் சைக்கிளில் பெண், குழந்தைகளுடன் செல்வோர்கள் அச்சத்து டன் செல்ல வேண்டி உள்ளது. மேலும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்தி சமூக விரோதிகள், வழிப் பறி, பணம் பறிப்பு போன்ற செயல்களிலும் ஈடுபடு கின்றனர். போலீசாரும் இந்த பகுதியில் ரோந்து வருவதில்லை என புகார் எழுந்துள்ளது.

    எனவே திருப்பரங் குன்றம்-நிலையூர் ரோட்டில் மின்விளக்குகள் பழுதை சரி செய்து பொதுமக்கள் அச்சமின்றி செல்ல மின்வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மின்விளக்குகள் சரிவர எரியாததால் மீனாட்சி அம்மன் கோவில் பகுதி போதிய வெளிச்சமின்றி காணப்படுகிறது.
    • இதனால் பக்தர்கள்-பயணிகள் அவதியடைந்துள்ளனர்.

    மதுரை

    மதுரை மாநகரில் மையப்பகுதியாக மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றிலும் ஏராளமான கடைகள், வியாபார நிறுவனங்கள் உள்ளன. அதனால் இந்த பகுதியில் 24 மணி நேரமும் ஆட்கள் நடமாட்டம் இருக்கும். மேலும் வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து வரும் பக்தர்கள், சுற்றுலா பயணிகளையும் எந்த நேரத்திலும் இந்த பகுதியில் காணலாம்.

    தமிழ்நாடு மட்டு மில்லாமல் இந்திய அளவில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் வந்து செல்லும் இடமாகவும் மீனாட்சி அம்மன் கோவில் உள்ளது. மேலும் இரவு நேரத்தில் பலர் நடைபயிற்சியும் செய்து வருகின்றனர். மேலும் சிலர் கோவில் சுற்றுவேலியை ஒட்டியுள்ள திண்டில் அமர்ந்து பொழுதை கழிக்கின்றனர்.

    இந்த நிலையில் மாலை, இரவு நேரத்தில் கோவிலை சுற்றியுள்ள சித்திரை வீதி, ஆவணி மூல வீதி, மேல கோபுர தெரு சந்திப்பு, நேதாஜி ரோடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மின்விளக்குள் சரிவர எரிவதில்லை என பக்தர்கள், பயணிகள், பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

    மின் விளக்குகள் சரியாக எரியாததால் இந்த பகுதியில் வெளிச்சம் குறைவாக உள்ளதாகவும், இதனால் குழந்தைகள், முதியவர்கள் நடந்து செல்வது சிரமமாக உள்ளதாகவும், போதிய வௌிச்சம் இல்லாததால் திண்டுகளில் அமர்ந்து ஓய்வெடுக்க முடியவில்லை எனவும் பயணிகள் தெரிவிக்கின்றனர்.

    இரவு 7 மணிக்கு மேல் இந்த பகுதிகளில் உள்ள கடைகளில் அதிகளவில் வியாபாரம் நடக்கும். வெளிச்சம் குறைவாக உள்ளதால் வாடிக்கை யாளர்கள் வந்து செல்வது சிரமமாக இருப்பதாக வியா பாரிகள் தெரி விக்கின்றனர். மேலும் இரவில் மீனாட்சி அம்மன் கோவில் கோபுரங்களின் அழகை ரசிப்பதற்கும், புகைப் படங்கள் எடுப்பதற்கும், செல்பி எடுப்பதற்கும் பலர் வருகின்றனர்.

    ஆனால் போதிய வெளிச்சம் இல்லாததால் அவர்கள் ஏமாற்றம் அடைகின்றனர். மதுரை மாநகர் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பல்வேறு நவீனமாக்கல் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் முக்கிய மைய மாகவும் உலக பிரசித்தி பெற்ற இடமாகவும் உள்ள மீனாட்சி அம்மன் கோவில் பகுதி நல்ல வெளிச்சத்துடன் பராமரிக் கப்பட வேண்டும் எனவும், பக்தர்கள், பொதுமக்கள், சுற்றுலா பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு வசதி களை மேம்படுத்த வேண் டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

    • எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் தொடங்கி வைத்தனர்
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    திருப்பத்தூர்:

    வாணியம்பாடியில் இருந்து திருப்பத்தூர் வழியாக ஊத்தங்கரை வரை ரூ300, கோடியில் நான்கு வழி தேசிய நெடுஞ்சாலை போடப்பட்டு உள்ளது. திருப்பத்தூர் டவுன் பகுதியில் செல்லும் இந்த தேசிய நெடுஞ்சாலை இருபுறமும் மின்விளக்குகள் இல்லாததால் வாகன ஓட்டிகள் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டனர்.

    இதனை ஒட்டி திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்து புதுப்பேட்டை சாலை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்க ரூ.50 லட்சம் திருவண்ணாமலை தொகுதி சிஎன்.அண்ணாதுரை எம்பி நிதி ஒதுக்கி இருந்தார்.

    அதன்படி இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டது. இந்த மின் விளக்குகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி திருப்பத்தூர் பழைய பஸ் நிலையம் அருகே நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு திருப்பத்தூர் மாவட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன் தலைமை வகித்தார். நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முரளி வரவேற்றார்.

    நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்ட மின்விளக்குகளை திருவண்ணாமலை தொகுதி சி. என். அண்ணாதுரை எம்பி, எம் எல் ஏக்கள் க. தேவராஜ், ஏ.நல்லதம்பி தொடங்கி வைத்து பேசினார்கள்.

    நிகழ்ச்சியில் நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கூட்டுறவு சங்கத் தலைவர்கள் டி ஆர் ரகுநாதன் கே பி ஆர். ஜோதிராஜன், பி சந்திரசேகர், வி., வடிவேல்துணைத்தலைவர் ஏ.ஆர்.சபியுல்லா, நகராட்சி கவுன்சிலர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

    அதைதொடர்ந்து செய்தியாளர்கள் சி.என்.அண்ணாதுரை எம்பி நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதற்கட்டமாக திருப்பத்தூர் டவுன் பகுதியில் 300, மீட்டர் ரூ.50 லட்சத்தில்இரு புறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்துரூ4கோடியில் திருப்பத்தூர் நகராட்சி எல்லையில் இருந்து சேலம் எல்லை வரை இருபுறமும் மின்விளக்குகள் அமைக்கப்பட உள்ளது என்றார்.

    • சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை.
    • தூய்மை பணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    சீர்காழி:

    சீர்காழி நகர்மன்ற சாதாரணக்கூட்டம் அவைகூடத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நகர்மன்ற தலைவர் துர்காபரமேஸ்வரி ராஜசேகரன் தலைமை வகித்தார். ஆணையர் (பொ) ராஜகோபால், மேலாளர் காதர்கான், நகரமைப்புஆய்வாளர் நாகராஜன், வருவாய்ஆய்வாளர் சார்லஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மன்ற தீர்மானங்களை அலுவலர் ராஜகணேஷ் வாசித்தார். தொடர்ந்து உறுப்பினர்கள் பேசியதாவது,

    வேல்முருகன்: சீர்காழி தென்பாதி பகுதிகளில் நெகிழி பை போன்ற குப்பைகளை தூய்மைபணியாளர்கள் எடுத்துசெல்வதில்லை. அதேபோல் சாலைகளில் வாழைமரங்கள், கீற்றுகள் போன்ற குப்பைகள் அகற்றபடாமல் மாதகணக்கில் கிடக்கிறது.

    சாமிநாதன்: ஈசானியத்தெரு எரிவாயு தகண மேடை டெண்டர் விடாமல் ஏன் காலதாமதமாகிறது. முன்பு நடத்தி அனுபவம் உள்ளவருக்கு முன்னுரிமை அளித்து எரிவாயு தகணமேடை நடத்திட வேண்டும்.

    ஆணையர் ராஜகோபால்: எரியாயு தகண மேடை டெண்டர் விரைவில் விடப்படும்.

    ராஜசேகரன்: அரசு மருத்துவமனை கழிவுநீர் பாசன வாய்க்காலில் விடப்படுகிறது என பல முறை கூறியும் நடவடிக்கை இல்லை. தூய்மைபணியாளர்களுக்கு கையுறைகள், மண்வெட்டி, அரிவாள் போன்றவற்றை புதிதாக வாங்கிதர வேண்டும்.

    கிருஷ்ணமூர்த்தி: எனதுவார்டில் புதிதாக மின்விளக்குகள் அமைத்திடவேண்டும்.

    முபாரக் : சீர்காழி மணிகூண்டு பகுதி, பழைய பஸ் நிலையம் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. தற்காலிகமாக பேட்ஜ் பணியாவது செய்து அதனை நிரப்பவேண்டும்.

    ராஜேஷ்: சீர்காழி நகருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக அரசு, தனியார் பஸ்கள் பயணிகளை இறக்கவிட்டு செல்வதை தடுத்திட தீர்மானம் கொண்டுவரவேண்டும்.

    தலைவர் துர்காபரமேஸ்வரி: சீர்காழி நகரில் பள்ளி நேரங்களில் கனரக வாகனங்கள் வந்து செல்ல தடைவிதிக்கவும், புறவழிச்சாலை வழியாக பஸ்கள் இயக்கப்படாமல் நடவடிக்கை எடுத்திடவும் கலெக்டர், கோட்டாட்சியர், போக்குவரத்து துறை அதிகாரிகளை அனைத்து உறுப்பினர்களும் நேரில் சென்று வலியுறுத்துவோம். அனைத்து வார்டுகளிலும் வாரம் 1 முறை மெகா தூய்மைபணி நடத்தப்படும். நகரை தூய்மையாக வைத்திருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றார்.

    ×