search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மினி பஸ் அதிபர்"

    • போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
    • போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலிவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67), மினி பஸ் அதிபர்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார் என விஜயகுமாரின் மகன் விக்னேஷ், போலீசில் புகார் அளித்தார். கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.

    இதற்கிடையில் போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.

    இந்த நிலையில் இன்று திருவட்டாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் கந்துவட்டி கொடுமையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அது சாதாரண தற்கொலை என்றும் தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.

    • போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார்

    கன்னியாகுமரி:

    மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலி விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67). இவர் மினி பஸ் நிறுவனம் நடத்தி வந்தார்.

    விஜயகுமார், படந்தாலு மூட்டில் உள்ள ஒரு தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் மினி பஸ்கள் நடத்துவதற்காக கடன் பெற்றுள்ளார். கடனுக்கு வட்டி கட்ட முடியாமல் தவித்த விஜயகுமார் என்ன செய்வதென்று தெரியாமல், ஒவ்வொரு மினி பஸ்சாக விற்பனை செய்து கடனை செலுத்தி வந்தார்.

    இந்த நிலையில் கடந்த ஒரு வார காலமாக கடன் கொடுத்தவர்கள் அவரது வீட்டில் முகாமிட்டு டார்ச்சர் செய்து வந்துள்ளனர். இதனால் மனம் உடைந்த அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து அவரது மகன் வினேஷ் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் என புகார் அளித்துள்ளார்.

    இந்நிலையில் மினி பஸ் உரிமையாளர் விஜய குமாரின் உடல் குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் அவரது மகன் வினேஷ் கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தந்தை தற்கொலை செய்து கொண்டார் எனவும்,கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மினி பஸ் உரிமையாளர் விஜயகுமார் உடலை பெற்றுக்கொள்ள மாட்டோம் என போலீசாரிடம் தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து போலீசார் விஜயகுமார் உடலை ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இந்நிலையில் இன்று விஜயகுமாரின் உற வினர்கள் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மற்றும் அதிகாரிகளை சந்தித்து முறையிட போவதாக தெரி வித்துள்ளனர்.

    ×