என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோப்பு படம்
மார்த்தாண்டம் அருகே மினி பஸ் அதிபர் தற்கொலை ஏன்?
- போலீஸ் சூப்பிரண்டு விளக்கம்
- போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
கன்னியாகுமரி:
மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பாகோடு மேல்புறம் மணலிவிளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (வயது 67), மினி பஸ் அதிபர்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு இவர், வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்தார். கந்துவட்டி கும்பலின் மிரட்டலால் தான் தனது தந்தை தற்கொலை செய்து கொண்டார் என விஜயகுமாரின் மகன் விக்னேஷ், போலீசில் புகார் அளித்தார். கந்து வட்டி கும்பல் மீது நடவடிக்கை வேண்டும் எனவும் புகாரில் அவர் குறிப்பிட்டு இருந்தார்.
இதற்கிடையில் போலீசார் கந்து வட்டி கும்பலுக்கு ஆதரவாக செயல்படுவதாக விஜய குமாரின் உறவினர்கள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் இன்று திருவட்டாரில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத்திடம் இது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், போலீசார் நடத்திய விசாரணையில் விஜயகுமார் கந்துவட்டி கொடுமையில் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும், அது சாதாரண தற்கொலை என்றும் தெரிய வந்திருப்பதாக தெரிவித்தார். அவர் தற்கொலை செய்து கொண்ட தாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.






