search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவி பிணமாக மீட்பு"

    • கிணற்றின் அருகே செருப்பு இருந்தது
    • போலீசார் விசாரணை

    செய்யாறு:

    செய்யாறு அடுத்த கீழ் மட்டை கிராமத்தை சேர்ந்தவர் வேலு. கூலி தொழிலாளி. இவரது மகள் நிக்கித்தா (வயது 15). இவர் திருவத்திபுரம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை இயற்கை உபாதை கழிப்பதற்காக அப்பகுதியில் உள்ள விவசாய நிலத்திற்கு நிக்கித்தா சென்றார்.

    நீண்ட நேரம் ஆகியும் மகள் வீட்டுக்கு வரவில்லை. இதனையடுத்து அக்கம் பக்கத்தில் வேலு தேடினார். அவர் கிடைக்காததால் பின்னர் நிலத்திற்கு சென்று பார்த்தார்.

    அப்போது குடிநீர் கிணற்றின் அருகே நிக்கித்தாவின் செருப்பு இருந்துள்ளது. சந்தேகம் அடைந்த வேலு செய்யாறு தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் குடிநீர் கிணற்றில் இறங்கி தேடினர். சிறிது நேர தேடுதலுக்கு பின்னர் நிக்கித்தாவை பிணமாக மீட்டு அவரது உடலை மேலே கொண்டு வந்தனர்.

    இது குறித்து வேலு அனக்காவூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து நிக்கித்தாவின் உடலை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து நிக்கித்தா இறந்ததற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது.
    • பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் கோபி அடுத்த வெள்ளாங்கோவில், அம்மா நகரை சேர்ந்தவர் பழனியம்மாள். இவருக்கு பிரியதர்ஷினி (15) என்ற மகளும், நவீன்குமார் (13) என்ற மகனும் உள்ளனர்.

    இதில் பிரியதர்ஷினி வெள்ளாங்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பொது தேர்வு எழுதி முடித்து விடுமுறையில் தற்போது வீட்டில் இருந்து வந்துள்ளார்.

    இந்நிலையில் கடந்த 29-ந் தேதி பழனியம்மாள் தனது மகள் பிரியதர்ஷினி மற்றும் மகன் நவீன் குமார் ஆகியோருடன் அதேப்பகுதியில் செல்லும் கீழ் பவானி வாய்க்கால் கரையில் துணி துவைத்து கொண்டிருந்தார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சோப்பு தவறி தண்ணீரில் விழுந்தது. சோப்பை எடுப்பதற்காக பிரியதர்ஷினி தண்ணீருக்குள் சென்ற போது திடீரென அவரை தண்ணீர் அடித்து சென்றது.

    இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது தாய் கதறினார். இது குறித்து தகவல் அறிந்ததும் அவரது உறவினர்கள் சம்பவ இடத்துக்கு வந்து பிரியதர்ஷினியை தேடினர். இரவு முழுவதும் தேடி பார்த்தும் அவர் குறித்து எந்த ஒரு தகவலும் கிடைக்கவில்லை.

    அதனைத் தொடர்ந்து நேற்று காலை மீண்டும் உறவினர்கள் பிரியதர்ஷினியை தேடினர். அப்போது நீச்சாம் பாளையத்திலிருந்து தாசம்புதூர் செல்லும் கீழ பவானி வாய்க்காலில் துரைசாமி கோவில் அருகே பிரியதர்ஷினி பிணமாக மிதந்து வந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுகுறித்து சிறுவல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மாணவியின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×