என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மாணவர்கள் சாலை மறியல்"
- வகுப்பறையில் பாடம் நடத்தாமல் செல்போன் பார்ப்பதாக புகார்
- மாணவர்களின் பெற்றோர்களுடன் அதிகாரிகள் பேச்சுவார்த்தை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகா மூலைகேட் கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள் ளியில் மூலைகேட் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 205 மாணவ, மாண விகள் படித்து வருகின்ற னர். இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர், ஒரு ஆசிரியர், 7 ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில் இந்த பள்ளியல் பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர் களுக்கு சரிவர பாடம் எடுப்பதில்லை எனக் கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்டும் மாணவர் களை மேஜை விட்டு கீழே உட்கார வைக்கப்பட்டு வகுப்புகளை நடத்தி வருவதாக தெரிகிறது. ஆசிரியர்கள் பள்ளிக்கு சரியான நேரத்திற்கு வருவதில்லை எனவும், இதைத் தொடர்ந்து ஆசிரியர்கள் சரியாக பாடம் நடத்துவதில்லை எனவும், வகுப்புகளில் ஆசிரியர்கள் செல்போன் பார்ப்பதாகவும் மாணவர்கள் அவர்களின் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
அவர்களும் பள்ளி மேலாண்மை கூட்டம், பெற்றோர் ஆசிரியர் கூட் டம் என பல கூட்டங்களில் பலமுறை தெரிவித்தும் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் இதுகுறித்து கிராம மக்கள் மாவட்ட கல்வி அலுவலரை சந்தித்தும் புகார் அளித்துள்ளனர். புகார் கொடுத்து ஒரு மாதங்களுக்கு மேலாகியும் நடவடிக்கை எடுக்கவில்லை. விரை வில் 10-ம் வகுப்பு பொதுதேர் வுகள் வரவுள்ள நிலையில் பாடங்கள் நடத்தப்ப டாததால் மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு எப்படி படிப்பது என்று பெரும் அச்சமடைந்துள்ளனர்.
எனவே சம்பந்தபட்ட ஆசி ரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி நேற்று அரசு பள்ளி எதிரே மூலைகேட்- அணைக்கட்டு செல்லும் சாலையில் பள்ளி மாண வர்கள், பெற்றோருடன் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவலறிந்து அங்கு வந்த இன்ஸ்பெக் டர் கருணாகரன், வட்ட வழங்கல் அலுவலர் பழனி அங்கு சென்று மறியலில் ஈடுபட்ட மாணவ, மாண விகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தி நடவ டிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து மறியலை கைவிட்டு பள்ளிக்கு சென்றனர்.
தொடர்ந்து பள்ளிக் குள் இன்ஸ்பெக்டர் கரு ணாகரன் தலைமையில் பள்ளி மாணவர்களை அழைத்து விசாரணை நடத்தினர். அப்போது இந்த பள்ளியில் பணியாற் றும் ஆசிரியைகள் சரி வர பாடம் எடுப்பதில்லை, கேட்டால் எங்களை திட் டுகிறார்கள், தேர்வு தாள்களில் கேள்விகளை மட்டும் எழுத வைத்து விட்டு விடை களை ஆசிரியைகளே எழுதி திருத்தி அவர்களே மதிப் பெண்களை வழங்குகின்றனர் என சரமாரியாக ஆசிரியர்கள் மீது புகார்கள் கூறினர்.
இதையடுத்து பிரச்சினை அதிகமாகவே அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர் களை சமரசப்படுத்தி தனி யாக ஒரு அறையில் அமர வைத்து அவர்கள் தரப்பில் விசாரணை நடத்தினர். இதில் மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி பெற்றோர்களிடம் விசா ரணை நடத்தியோது, எங் கள் பிள்ளைகள் தினந்தோ றும் பள்ளியில் ஆசிரியர்கள் செய்த பிரச்சினைகளை தெரிவிக்கின்றனர்.
பள்ளியில் உள்ள ஆசி ரியர்களுக்குள் உள்ள கருத்துவேறுபாடால் மாணவர்களை பழி வாங்கு கின்றனர். பள்ளியில் பாடம் நடத்துவதில்லை என கூறி செல்போன்களில் யூடியுப் மூலம் நடத்தும் பாடங் களை இரவில் வீட்டில் படிக்கின்றனர் என அவர் களும் சரமாரியாக புகார் தெரிவித்தனர்.
இதையடுத்து இதுகுறித்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உங்கள் பிள்ளைகளின் படிப்பு கெடாமல் இருக்க வேண்டிய ஏற்பாடுகள் செய்யப்படும் என உறு தியளித்தனர்.
இதையடுத்து அவர்கள் கலைந்து சென் றனர். அதை தொடர்ந்து மாணவிகள், அவர்கள் பெற்றோர் வைத்த புகார் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்களி டம் தனித்தனியாக பெற் றோர், மாணவிகள் முன் னிலையில் விசாரணை நடத்தினர்.
இதில் நடத் திய விசாரணையில் இருத ரப்பிலுமே ஆசிரியர்கள் மீதே குற்றச்சாட்டுகளை முன் வைத்து பேசினார். அவர்கள் சமரசம் செய்து, சம்பந்தபட்ட ஆசிரியர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்ப டும் என மாவட்ட கல்வி அலுவலர் அங்குலட்சுமி எச்சரித்துவிட்டு சென்றார்.
மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்