search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாடு மீட்பு"

    • ஆலங்குடியில் கழிவு நீர் தொட்டியில் விழுந்த பசுமாடு மீட்கப்பட்டது
    • நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்

    ஆலங்குடி:

    புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள எம்.ராசியமங்கலம் கிராமத்தில் கோபி என்பவருக்கு சொந்தமான கழிவு நீர் தொட்டியில் சங்கர் என்பவருக்கு சொந்தமான பசு மாடு தவறி விழுந்தது. பொதுமக்களால் மீட்க முடியாத நிலையில் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்தனர். நிலைய அலுவலர் சீனிவாசன் தலைமையில் அங்கு வந்த தீயணைப்பு துறையினர் பசுமாடு மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர். தீயணைப்புத்துறை வீரர் பாண்டி செல்வன் கழிவு நீர் தொட்டியில் இறங்கி கயிறு கட்டி உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பசு மாட்டை கயிற்றில் பிணைத்தார்.பின்னர் கழிவு நீர் தொட்டியில் இருந்த பசுமாட்டை தீயணைப்பு வீரர்கள் சேர்ந்து தூக்கி வெளியில் கொண்டு வந்தனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் மாட்டை உரிமையாளரிடம் ஒப்படைத்தனர்.


    • கயிறு அறுந்ததால் விபரீதம்
    • 1 மணி நேரம் போராடி மீட்டனர்

    ஜோலார்பேட்டை:

    நாட்டறம்பள்ளியை அடுத்த சி.கே. ஆசிரமம் பகுதியை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 60). இவருக்கு சொந்தமான காளை நேற்று பூரி கான் மானி மிட்டா பகுதியில் உள்ள நிலத்தில் மேய்ச்சலுக்காக கட்டி வைத்திருந்தார்.

    இந்த நிலையில் கட்டி வைத்திருந்த மாட்டின் கயிறு திடீரென அறுந்து அங்கிருந்து ஓடியது. பின்னர் அருகில் உள்ள 60 அடி ஆழமுள்ள கிணற்றில் தவறி விழுந்தது. இதுகுறித்து நாட்டறம்பள்ளி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

    விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று சுமார் 1 மணி நேரம் போராடி கயிறு கட்டி மாட்டை உயிருடன் மீட்டனர்.

    ×