search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மளிகை சாமான்கள்"

    • நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை.
    • பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்துவிடுங்கள்.

    பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களின் மீதும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கடைகளில் இருந்து பெரும்பாலான நேரங்களில் ஆவலோடு பொருட்களை வாங்குகின்ற நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை. சில சமயம், பொருட்களை வாங்கி வீட்டில் வைத்திருந்து சில நாள் அல்லது வாரங்கள் கழித்தும் கூட உபயோகம் செய்கிறோம்.

     இடைப்பட்ட நேரத்தில் காலாவதி தேதி கடந்து விட்டதா என்ற சந்தேகம் பெரும்பாலும் வந்து விடுவதில்லை. கடைகளில் புத்தம் புதிய பிரெட், ஸ்வீட் போன்றவற்றை வாங்கி கொண்டு வந்து ஃபிரிட்ஜில் நாம் நிரப்பி விடுகிறோம். தேவைப்படும் சமயங்களில் எடுத்து சாப்பிடும் பழக்கம் இருந்தாலும், ஒருவேளை இது கெட்டுப் போயிருக்குமோ என்ற சந்தேகம் எழுவதும், பின்னர் நம்மை நாமே ஆசுவாசப்படுத்திக் கொண்டு சாப்பிடுவதும் தொடர் கதையாகிறது.

    உலர்ந்த நிலையில் உள்ள நட்ஸ், பாஸ்தா போன்ற உணவுப் பொருள்கள் காலாவதி தேதியை கடந்திருந்தாலும், பார்க்க நன்றாகதான் இருக்கும். இதுபோன்ற பொருட்களில் பூஞ்சை ஏற்பட்டால் உடனடியாக தவிர்த்துவிடுங்கள். உணவுகளை காலாவதி தேதி கடந்து சாப்பிட்டால் பல வகைகளில் நாம் இன்னல்களை சந்திக்க நேரிடும்.

    காலாவதியான உணவுகளில் பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை போன்றவை இருக்கும். அவை உணவு ஒவ்வாமையை ஏற்படுத்தும். அதன் காரணமாக குமட்டல், வாந்தி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப்பிடிப்பு மற்றும் காய்ச்சல் ஆகிய சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும்.

    இகோலி, சால்மோனெல்லா, லிஸ்டேரியா போன்ற பாக்டீரியாக்கள் காலாவதி உணவுகளில் இருக்கலாம். இகோலி பாக்ரீயா என்பது காலாவதியான இறைச்சி மற்றும் பால் பொருட்களில் இருக்கும். சால்மோனெல்லா பாக்டீரியா என்பது கெட்டுப்போன முட்டை, காய்கறிகள் மற்றும் பழங்களில் இருக்கும்.

    லிஸ்டேரியா என்ற வகை பாக்டீரியாவானது கர்ப்பிணி பெண், பச்சிளம் குழந்தைகள், குறைவான நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்கள் போன்றோருக்கு மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது.

    எந்தவொரு உணவுப் பொருளை வாங்கினாலும் அதில் உள்ள தயாரிப்பு தேதி, காலாவதி தேதி போன்றவற்றை கவனிக்க வேண்டும். பெரும்பாலும் உணவுப் பொருளை பதப்படுத்துவதற்காக சேர்க்கப்பட்ட உபபொருள்களுக்காகவே அந்த காலாவதி தேதி சேர்க்கப்பட்டிருக்கும். ஃபிரஷ்சாக சாப்பிட வேண்டிய உணவுப் பொருட்களை புதிதாகவே எடுத்துக் கொண்டால் மட்டுமே ஊட்டச்சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்.

    பேக்கிங் செய்யப்பட்ட அனைத்து உணவுப் பொருள்களின் மீதும், தயாரிப்பு தேதி, காலாவதி தேதி உள்ளிட்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும். கடைகளில் இருந்து பெரும்பாலான நேரங்களில் ஆவலோடு பொருட்களை வாங்குகின்ற நாம் அதில் இருக்கும் காலாவதி தேதியை கவனிப்பதில்லை.

    • கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம், குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.
    • அரசு மருத்துவமனையிலுள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் பயனடைகின்றனர்.

    தஞ்சாவூர்:

    புனித அன்னை தெரசாவின் அன்பு வழியைப் பின்பற்றி தஞ்சாவூர் மதர் தெரசா பவுண்டேசன் 2002ஆம் ஆண்டு முதல் சாதி, மதம், இனம், மொழி கடந்து அனைத்துத் தரப்பினருக்கும் பல்வேறு சமூகப் பணிகளைச் செய்து வருகிறது.

    மதர் தெரசா பவுண்டேசன் கடந்த 2020ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் கொரோனா நோய் தொற்று காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, மருந்துகள், மளிகை சாமான்கள் மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்கியது.

    அதனைத் தொடர்ந்து தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா மற்றும் இதர நோய்களினால் பாதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் உள் நோயாளிகளின் உதவியாளர்கள் தினமும் பசியால் வாடுவதை கண்டு அவர்களுக்கு அன்னை தெரசா அமுதசுரபி அன்னதான திட்டத்தின் மூலம் இலவசமாக மதிய உணவு வழங்கி வருகிறது .

    இத்திட்டத்தின் மூன்றாம் ஆண்டு தொடக்கவிழா தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.

    இத்தொடர் திட்டத்தை தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் தொடக்கி வைத்து, ஏழை எளிய மக்களுக்கு இடைவிடாமல் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் இலவசமாக அன்னதானம் வழங்கிவரும் பவுண்டேசன் பணியினை பெரிதும் பாராட்டினார்.

    தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் முதல்வர் (பொ) மருதுதுரை முன்னிலை வகித்தார். மதர் தெரசா பவுண்டேசன் சேர்மன் சவரிமுத்து தலைமை தாங்கினார்.

    பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் 500-க்கும் மேற்பட்டோருக்கு இத்திட்டத்தின் மூலம் ஒரு நாள் கூட தவறாமல் தினந்தோறும் தொடர்ந்து மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.

    இத்திட்டதின் மூலம் தக்காளி சாதம், புளி சாதம், எலுமிச்சை சாதம். கொத்தமல்லி சாதம், தயிர் சாதம், சாம்பார் சாதம், புதினா சாதம், தேங்காய் சாதம், கறிவேப்பிலை சாதம், வெஜிடபுள் சாதம் மற்றும் குஸ்கா போன்ற உணவுகளும், விழா மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு உணவுகளும் வழங்கப்படுகிறது.

    மாதாக்கோட்டை சாலையில் அமைந்துள்ள அன்பு இல்லம், தஞ்சை நகர் பகுதிகள், தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகம் ஆகிய இடங்களில் அன்ன தானம் வழங்கப்ப டுகிறது.

    இத்திட்டத்தின் மூலம் ஆதரவற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், சாலை ஓரங்களில் வசிப்ப வர்கள், நோயுற்றவர்கள், முதியவர்கள், கூலித்தொ ழிலாளர்கள், அரசு மருத்துவ மனையிலு ள்ள உட்புற நோயாளிகளின் உதவியாளர்கள் மற்றும் பசியால் வாடும் ஏழை எளிய மக்கள் ஆகியோர் பயனடைகின்றனர்.

    இந்நிகழ்ச்சியில் மதர் தெரசா பவுண்டேசன் அறங்காவலர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் பயனாளர்கள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர் ரத்தீஷ்குமார், நிர்வாக மேலாளர் மெர்சி, தளவாட மேலாளர் ஜெரோம், மக்கள் தொடர்பு அலுவலர்கள் நாகராணி, விஜி, ரேணுகா மற்றும் தன்னார்வ தொண்டர்கள் மகேஷ்வரன், சூசைராஜா, கிறிஸ்டி, வர்ஷினி, ஷர்மிளா ஆகியோர் செய்திருந்தனர்.

    ×