search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவ பயன்கள்"

    • மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என்று 2 வகை உண்டு.
    • ராமலிங்க அடிகளார் கரிசலாங்கண்ணியை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

    கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை

    சித்தர்களில் ஒருவரான ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் அருட்பிரகாச வள்ளலார் மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

    கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும். இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.

    `கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்' என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்து காணப்படும்.

    வெள்ளை கரிசலாங்கன்னி

    வெள்ளை கரிசாலாங்கன்னி சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் ரத்தசோகை அல்லது உடலின் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.

    ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலாங்கன்னி சாறு கலந்து கொடுத்துவந்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை உயரும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இந்த கரிசலாங்கன்னிக்கு உண்டு.

    கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தம் மற்றும் தலை சார்ந்த அனைத்துபிரச்சினைகளும், இளநரையையும் சரி செய்யலாம்.

    • படிகாரத்தில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன.
    • சரும பிரச்சினை, கிருமித்தொற்று போன்றவற்றுக்கு சிறந்த மருந்து.

    சில தலைமுறைகளுக்கு முன்பு வீட்டின் முகப்பில் கற்றாழை, மஞ்சள், எலுமிச்சை ஆகியவற்றுடன் படிகாரத்தையும் சேர்த்து கட்டி தொங்கவிட்டு இருப்பார்கள். கண் திருஷ்டியை போக்குவதற்காக இவ்வாறு கட்டுகிறார்கள் என்று பலர் கூறினாலும், இதற்கு பின்னால் மருத்துவ ரீதியான காரணம் ஒன்றும் இருந்தது.

    இப்போது இருப்பது போல உடனடி மருத்துவ வசதிகள் இல்லாத அந்த காலத்தில், முதலுதவி சிகிச்சைக்கு கை மருந்தாக பயன்படுத்துவதற்காகவே இவ்வாறு கட்டியிருந்தார்கள். படிகாரத்தில் பல்வேறு மருத்துவ பண்புகள் உள்ளன. சரும பிரச்சினைகள், கிருமித்தொற்று போன்றவற்றுக்கு இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

    படிகாரத்தின் பயன்கள்

    * சருமத்தில் ஏற்படும் சுருக்கங்கள், கரும்புள்ளிகள் மற்றும் வறட்சியை போக்குவதற்கு படிகாரம் உதவும். சிறிதளவு படிகாரத்தூளுடன் தேவையான அளவு ரோஸ் வாட்டர் கலந்து மூகத்தில் பூசவும். வாரத்தில் 3 நாட்கள் இவ்வாறு செய்து வந்தால் வறட்சி நீங்கி சருமத்தின் பொலிவு அதிகரிக்கும்.

    * முகப்பரு மற்றும் அதன் மூலம் ஏற்படும் தழும்புகளை நீக்குவதற்கு படிகாரம் சிறந்த தேர்வாக அமையும். ஒரு கப் தண்ணீரில் சிறிதளவு படிகாரத்தூளைப் போட்டு நன்றாகக் கலக்கவும்.

    * இந்த தண்ணீரைக் கொண்டு முகத்தைக் கழுவவும். இவ்வாறு சில நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் முகப்பரு மற்றும் தழும்புகள் நீங்கும்.

    * மாதுளம் பூ மற்றும் மாதுளம் பட்டையை சிறிதளவு தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைக்கவும். அந்த தண்ணீரை வடிகட்டி அதனுடன் சிறிதளவு படிகாரத்தூள் சேர்த்து கலக்கவும். இந்த கரைசலைக் கொண்டு காலை, மாலை இரண்டு வேளையும் வாய் கொப்பளித்து வந்தால், தொண்டைப் புண் விரைவிலேயே குணமாகும்.

    * சிறிதளவு படிகாரத்தூளை முட்டையின் வெள்ளைக் கருவுடன் சேர்த்துக் கலக்கவும். மெல்லிய பருத்தித் துணியை அதில் தோய்த்து, கண்களின் மேல் பற்று போட்டால் கண் வலி உடனே குறையும்.

    * தினமும் குளித்து முடித்தவுடன் படிகாரத்தை உடலில் தேய்த்துக் கொண்டால் வியர்வை நாற்றம் நீங்கும்.

    * படிகாரத்தூளை தண்ணீர் சேர்த்து பசை போல குழைக்கவும். இதை விரல்களில் நகச்சுற்று உள்ள இடத்தில் பூசி வந்தால் விரைவிலேயே குணமாகும்.

    * குதிகால் வெடிப்பு பிரச்சினையால் சிரமப்படுபவர்கள். தினமும் இரவு தூங்கச் செல்வதற்கு முன்பு படிகாரத்தை பாதத்தில் நன்றாக தேய்த்து மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்து வந்தால் பித்த வெடிப்புகள் நீங்கி பாதங்கள் மென்மையாகும்.

    • சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது.
    • இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது.

    எலும்பொட்டி செடியை அனைவருமே வீட்டில் வளர்க்கலாம். சுக்குநூறாக உடைந்த எலும்பை கூட சேர்க்கும் ஆற்றல் நிறைந்தது இந்த எலும்பொட்டி இலைகள். கை, கால், இடுப்பு எலும்புகளில் வீக்கம், வலி, மூட்டுத்தேய்மானத்தால் ஏற்படும் வலி, குதிங்கால் வலி போன்றவற்றுக்கு மிகவும் நல்லது.

    இந்த எலும்பொட்டி இலைகளை எடுத்து அரைத்து பாலில் கலந்து குடிக்கலாம். அல்லது இந்த இலைகளை அரைத்து ஒரு சிறிய உருண்டைகளாக உருட்டி தினமும் சாப்பிட்டு வர எலும்பினால் ஏற்படும் வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

    இன்றைக்குத் தான் சாதாரண தலைவலிக்கே மருத்துவமனைக்கு ஓடுகிறோம். நம்முன்னோர்களை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். அவர்களின் வாழ்க்கையில் மூலிகைகளே பிரதானமாக இருந்தது. அவர்களின் மருத்துவத்தில் முக்கியப் பங்கு வகித்த மூலிகை தான் அருகாம்பச்சை என்றும், சதாப்பு இலைச்செடி என்றும் அழைக்கப்படும் அருவதா செடி. இதன் பூர்வீகம் மேலை நாடு என்றும் சொல்லப்படுகிறது.

    ஆனால் நம்மூரு காடுகளிலும் திபு, திபுவென வளர்ந்து விடுகிறது. அடர்ந்த காடுகளில் மற்றும் மலைகளில் இயற்கையாக உள்ள இந்தச் செடி மூன்றடி உயரம் மட்டுமே வளரும். இதன் இலைகள் முருங்கை இலைகள் போல, சின்னதாக தண்டுகளில் இணைந்து காணப்படும். இந்த செடியில் மஞ்சள் நிறத்தில் பூவும் பூக்கும். இவை வறட்சியை தாங்கி வளரும் தன்மையுடவை. இதன் இலைகள், வேர்கள், காய்கள் அனைத்தும் மருத்துவப் பலன்கள் நிறைந்தது.

    இவை வீடு, வணிக நிறுவனங்களிலும் அழகுக்காகவும் வளர்க்கப்படுகிறது. இந்த மூலிகை செடி இருக்கும் இடத்தில் ஈக்கள் மொய்க்காது. இந்த செடி நாய், பூனைகளுக்கும் ஆகாது.

    மருத்துவ பயன்கள்:

    * இந்த இலைக்கு எழும்பு முறிவு பாதிப்புகளை குணமாக்கும் ஆற்றலும் உண்டு. முதுகு தண்டு பாதிப்பை குணமாக்கும். முதுகுத்தண்டுவட வலி மற்றும் முதுகு வலி பாதிப்புகளையும் இது குணமாக்கும். சிறுநீர் கழிக்கும் போது அவரும் எரிச்சலைப்போக்கும். சிறுநீர்த்தாரை அடைப்பை சரியாக்கும். கருப்பை பாதிப்புகளையும் அகற்றும். இந்த இலைகளுக்கு மூட்டுவலியை குணப்படுத்தும் தன்மையும் உண்டு. மன அழுத்தத்தினால் உருவாகும் நரம்பு பாதிப்புகளை குணப்படுத்தி ரத்தத்தை தூய்மைப்படுத்தி வயிற்றுப் புழுக்கள அழிக்கும்.

    * பெண்களுக்கு மாதவிலக்கில் ஏற்படும் இரத்தப் போக்கு பாதிப்புகளை சரி செய்யும். உடல் சூட்டையும் போக்கும். மேலும் அதனால் ஏற்படும் வாத உடல் வலி, வயிற்று வலியையும் போக்கும். சுளுக்கைக், கூட இந்த இலை சுளுக்கெடுத்து விடும். அதாவது போக வைத்துவிடும். மூலவியாதி, உடல் அணுக்களை பாதிக்கும் புற்றுவியாதி ஆகியவற்றையும் சரி செய்யும்.சுவாச பாதிப்பை போக்கும்.

    * இந்த இலைகளை பூண்டு சேர்த்து நீரில் கொதிக்க வைத்து, கீரையைப் போல் கடைந்து உணவில் சேர்த்து சாப்பிடலாம். இதனால் மூட்டு வலி, சிறுநீர்ப்பை அடைப்பு, மூச்சுத்திணறல் ஆகியவை ஓடிவிடும்.

    * இதேபோல் இந்த இலையை நிழலில் உலர்த்து, இடித்துப் பொடியாக்கி வைத்துக்கொள்ள வேண்டும். அதிமதுரப்பொடி, சதகுப்பை, கருஞ்சீரகம், இலவங்கப்பட்டை, இதையெல்லா பொடியாக்கி அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, அதில் சிறிதளவு எடுத்து அத்துடன் பணங்கற்கண்டு சேர்த்து தினமும் இருவேளை சாப்பிட்டு வர உடல் சூடு தணியும்.

    * உங்களை மன அழுத்தம் வாட்டுகிறதா? அதற்கும் கூட சதாப்பு இலை மருந்து தான். இந்த இலைகளை சிறிதுஎடுத்து, நன்கு மையமாக அரைத்து அத்துடன் சிறிது மிளகுத்தூள் சேர்த்து தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் மன அழுத்த பாதிப்புகள் விலகி, மனநிலை இயல்பாகும்.

    * இந்த இலைச்சாறை தேனில் குழைத்தும் சாப்பிடலாம். இந்த இலையை நன்றாக அரைத்து அந்த விழுதை மிளகுத்தூள் சேர்த்து, கொஞ்சம் எடுத்து தாய்ப்பாலில் கலந்து குழந்தைகளுக்கு சங்கில் இட்டு வாயில் ஊட்டினால் குழந்தைகளின் மார்பு சளி மட்டுப்படும்.

    * பக்கவாத பாதிப்பால் பலரும் வீட்டுக்குள் முடங்கிப் போய் இருப்பார்கள். இவர்கள் சதாப்பிலைகளை நன்றாக அரைத்து உடலில் வாத பாதிப்பு உள்ள இடங்களில் மேலே தடவினால் சிறிது, சிறிதாக பாதிப்புகள் அகலும். இதேபோல் நரம்பு சுருட்டல் பாதிப்பையும் இது குணமாக்கும். இந்த இலைகளை நீரில் கொதிக்க வைத்து, அந்த நீர் வற்றியதும் ஆறவைத்து தினசரி இரண்டு அல்லது மூன்று வேளை பருகினால் மூட்டுவலி சரியாகும். குடல் புழு அழியும். ரத்த நாள அடைப்புகள் இருந்தால் அதையும் போக்கிவிடும்.

    • முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகிறார்கள்.
    • எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்குகிறோம்.

    ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால் எண்ணற்ற நோய்களை நாமே விலை கொடுத்து வாங்கும் நிலை தான் இருக்கிறது. இதற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொண்டாலும் சிலருக்கு பக்கவிளைவுகள் உண்டாகலாம். எனவே தான் பலரும் நம் முன்னோர்கள் வழிகாட்டிய இயற்கை மருத்துவத்திற்கு திரும்புகின்றனர்.

    பேஸ்புக், வாட்ஸ்-அப் போன்ற சமூகவலைத்தளங்களில் பல இயற்கை மருந்துகளை பார்த்திருப்போம். இதை சாப்பிடலாமா? அதிகமாக சாப்பிட்டால் என்ன நடக்கும்? உண்மையிலேயே நோய்களை குணப்படுத்துமா? என்ற சந்தேகமும் பலருக்கு இருக்கும். அதில் ஒன்று தான் வெந்தயம், கருஞ்சீரகம், ஓமம் மூன்றையும் ஒன்றாக கலந்து எடுத்துக் கொண்டால் பல நோய்களை எளிதில் சரிசெய்யும் என்பது.

    வெந்தயம்- 200 கிராம், ஓமம்- 100 கிராம், கருஞ்சீரகம்- 100 கிராம் என அனைத்தையும் லேசாக வறுத்து அரைத்துக்கொள்ள வேண்டும். இந்த பொடியை காற்று புகாத டப்பாவில் போட்டுவைக்க வேண்டும், தினமும் படுக்கச்செல்லும் முன் ஒரு டேபிள் ஸ்பூன் சாப்பிட்டு சுடு தண்ணீர் குடித்துவிடவேண்டும். இதற்கு பிறகு எந்த உணவையும் எடுத்துக் கொள்ளக்கூடாது. 3 மாதங்கள் தொடர்ந்து இதை சாப்பிட்டு வந்தால் உடல்நிலையில் நல்ல பலன் கிடைக்கும்.

    நன்மைகள்

    * உடலில் தேங்கியிருக்கும் நச்சுகளை வெளியேற்றும்.

    * கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவுகிறது.

    * எலும்புகள் வலுவாவதுடன் எலும்பு தேய்மானத்தை தடுக்கிறது.

    * பல் பிரச்சனைகளை சரிசெய்கிறது, சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்குவதால் தேகம் மினுமினுப்பாகும்.

    * முடி வளர்ச்சி சீராக இருக்கும், மலச்சிக்கல் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

    * சர்க்கரை நோயை கட்டுப்படுத்துகிறது, மாதவிடாய் பிரச்சனைகளையும் தீர்க்கும்.

    தீமைகள்

    * மூன்று மாதங்களுக்கு மேல் நீண்ட காலம் பயன்படுத்துவது பாதுகாப்பானதாக இல்லை.

    * வெகு அரிதாக சிலருக்கு இது ஒவ்வாமையை உண்டாக்கும். வயிறு வலி, வாந்தி அல்லது மலச்சிக்கலை உண்டாக்கும்.

    * கருஞ்சீரக விதைகள் இரத்த உறைதலை குறைத்து ரத்தபோக்கு அபாயத்தை அதிகரிக்க கூடும் தன்மை கொண்டவை.

    * ரத்த அழுத்தத்தை குறைக்க செய்யலாம்.

    * சிலருக்கு தூக்கத்தை அதிகரிக்க செய்யும்.

    * கருஞ்சீரக விதைகள் உடலில் செரோடோனின் அளவை அதிகரிக்க செய்யும்.

    • உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கிறது.
    • அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    நம் வீட்டில் உள்ள முதியவர்கள் வெற்றிலை பாக்குடன் சிறிதளவு சுண்ணாம்பு சேர்த்து சாப்பிடுவார்கள். ஏனெனில் சுண்ணாம்பில் கால்சியம் சத்து நிறைந்துள்ளது. இது எலும்பின் வலிமையை அதிகரிக்கும். அதேபோல் வழிபாடு மற்றும் பிற புனித சடங்குகளில் சுண்ணாம்பை அதிகமாக பயன்படுத்துவார்கள். காரணம். சுண்ணாம்பில் ஆன்டிசெப்டிக் வலிநிவாரணி, மூச்சுத்திணறல் மற்றும் மன அழுத்தத்தை எதிர்க்கும் பண்புகள் நிறைந்துள்ளன. சுண்ணாம்பின் பயன்கள் பற்றி இங்கே தெரிந்துகொள்வோம்.

    * சுண்ணாம்பில் உள்ள மன அழுத்த எதிர்ப்பு பண்புகள், சுண்ணாம்பின் நறுமணத்தை சுவாசிப்பதன் மூலம் மன சோர்வு மற்றும் மன அழுத்தத்தைக் குறைக்கிறது.

    * சுண்ணாம்பு புகையின் நறுமணத்தை சுவாசிப்பதால் நாள்பட்ட இருமல், காசநோய் மற்றும் மார்பு சளி ஆகியவை குணமாகும். சுண்ணாம்பில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு பண்புகள்.

    * உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுத்து. புற்றுநோயின் அறிகுறிகளை குறைக்கும்.

    * விஷப்பூச்சிகள் கடித்து விட்டால், சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் சம அளவு எடுத்து, நீர் சேர்த்து கரைத்து, கடித்த இடத்தில் தடவினால் விஷத்தன்மை நீங்கும். தேள் கடிக்கு கண்ணாம்புடன் சிறிது நவச்சாரம் சேர்த்து நசுக்கி, அதை தேள் கொட்டிய இடத்தில் வைத்துத் தேய்த்தால் நஞ்சு இறங்கும்.

    * இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சிறிது சுண்ணாம்பும் கலந்த கலவையை தொண்டையில் தடவினால் தொண்டை வலி குறையும்.

    * கண்ணாம்பு, துணி சுட்ட கரி, பனை வெல்லம் மூன்றையும் சமஅளவு எடுத்து, மைபோல் அரைத்து, வீக்கம் மற்றும் ரத்தக்கட்டு உள்ள இடத்தில் தடவ சரியாகும். உடலில் ஏற்படும் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டைத்தூள் இரண்டையும் சமஅளவு சேர்த்து நல்லெண்ணெய்யில் கலந்து தடவினால் கட்டிகள் பழுத்து உடையும்.

    * மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கி, தூக்கம் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீர் விலகிவிடும்.

    * அரை லிட்டர் தயிருடன் ஒரு கொட்டைப்பாக்கு அளவு சுண்ணாம்பு சேர்த்து தினமும் காலையில் மட்டும் சாப்பிட்டு வர மஞ்சள் காமாலை குணமாகும்.

    * ஒரு டம்ளர் தண்ணீரில் சிறி தளவு சுண்ணாம்பை கலந்து. அதில் மேலே தெளிந்த நீரை மட்டும் எடுத்து தேங்காய் எண்ணெய்யுடன் கலந்து, குழைத்து தடவி வர வெந்நீர் அல்லது நெருப்பினால் ஏற்பட்ட புண் ஆறும்.

    * சுண்ணாம்பை உமிழ்நீர் விட்டு குழைத்து, தொப்புளை சுற்றியும், கால் பெருவிரலிலும் தடவினால் நீர்க்கடுப்பு குணமாகும்.

    குறிப்பு: நீரிழிவு, ரத்த அழுத்தம் மற்றும் ஆஸ்துமா நோயாளிகள். அறுவை சிகிச்சை மேற்கொண்டவர்கள் சுண்ணாம்பு பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

    ×