search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Karisalanganni"

    • மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி என்று 2 வகை உண்டு.
    • ராமலிங்க அடிகளார் கரிசலாங்கண்ணியை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

    கரிசலாங்கண்ணி ஒரு மருத்துவ மூலிகைச் செடியாகும். இதில் இருவகை உண்டு. மஞ்சள் கரிசலாங்கண்ணி, வெள்ளை கரிசலாங்கண்ணி. மஞ்சள் கரிசலாங்கண்ணியை, அதன் மஞ்சள் நிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம். வெள்ளை கரிசலாங்கண்ணியை வெள்ளைநிற பூக்களை வைத்து அடையாளம் காணலாம்.

    மஞ்சள் கரிசலாங்கண்ணி மூலிகை

    சித்தர்களில் ஒருவரான ராமலிங்க அடிகளார் என்று அழைக்கப்படும் அருட்பிரகாச வள்ளலார் மிகவும் முதன்மையான கரிசாலை என்று அழைக்கப்படும் கரிசலாங்கண்ணி கீரையை ஞான மூலிகை என்று கூறுகிறார்.

    கரிசாலை மஞ்சள்காமாலை, மகோதரம், வலிப்பு மற்றும் ரத்த புற்றுநோய் போன்ற பல்வேறு வகையான நோய்களை குணப்படுத்தும். இதனை சித்தர்கள் கரப்பான், பொற்றலை, கையாந்தகரை இன்னும் பல பெயர்களை வைத்து கரிசாலையை அழைத்தார்கள்.

    `கரிசாலையை உண்டால் காலமெல்லாம் வாழலாம்' என்ற பழமொழிக்கேற்ப கரிசாலையின் மகத்துவத்தை நாம் உணரலாம். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி உணவாக அல்லது மருந்தாக ஏதேனும் ஒரு வகையில் சேர்த்தால் மூளை திறன் வளம் பெரும், வயிற்றில் ஏற்படும் புண் அல்லது கட்டியை சரி செய்யும், உடல் தங்கம் போன்ற பொலிவு தரும், அறிவாற்றல் வளரும். இதன் பூக்கள் மஞ்சள் நிறத்தில் இருக்கும். இம்மஞ்சள் கரிசலாங்கண்ணி பொதுவாக உணவிற்காக பயன்படுத்துவார்கள். இதில் கார சுவை குறைந்து காணப்படும்.

    வெள்ளை கரிசலாங்கன்னி

    வெள்ளை கரிசாலாங்கன்னி சாப்பிட்டு வந்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது. அத்துடன் ரத்தசோகை அல்லது உடலின் மற்றும் பாண்டு பூரணமாக குணமடையும். இதன் பூக்கள் வெள்ளை நிறத்தில் இருக்கும் மற்றும் இதன் இலைகள் கரும்பச்சை நிறத்துடன் காணப்படும். பொதுவாக இதை மருத்துவத்திற்கே அதிகம் பயன்படுத்துவார்கள்.

    ஒரு நாளுக்கு இரண்டு முறை இளநீரில் கரிசாலாங்கன்னி சாறு கலந்து கொடுத்துவந்தால் தட்டணுக்கள் எண்ணிக்கை உயரும் என்று ஆய்வுகள் கூறுகிறது. அதுமட்டுமில்லாமல் புற்றுநோய், கல்லீரல் வீக்கம் மற்றும் கல்லீரல் சார்ந்த அனைத்து நோய்களை முழுக்க குணமாக்க கூடிய ஆற்றல் இந்த கரிசலாங்கன்னிக்கு உண்டு.

    கரிசாலை, வெட்டிவேர், கருஞ்சீரகம், நெல்லிவற்றல், செம்பருத்தி பூ, மருதாணி, அவுரிஇலை என அனைத்தையும் செக்கில் ஆட்டிய தேங்காய் எண்ணெய்யில் போட்டு காய்ச்சி தலைக்கு தேய்த்து வந்தால் உடம்பில் பித்தம் மற்றும் தலை சார்ந்த அனைத்துபிரச்சினைகளும், இளநரையையும் சரி செய்யலாம்.

    ×