search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவியை தாக்கிய கணவர்"

    • ராஜாவுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது.
    • லட்சுமியையும், அவரது உறவினர்களையும் ராஜாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    தருமபுரி,

    தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது33). இவர் சென்னை ஆவடியைச் சேர்ந்த லட்சுமி (33) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.

    இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமராவதியில் உள்ள சைனீஷ் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. இதனால் ராஜா தனது மனைவி லட்சுமி மற்றும் மகனை சென்னை ஆவடியில் உள்ள மாமனார் வீட்டில் அவர்களை விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் ராஜாவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கணவரிடம் லட்சுமி அவரது உறவினர்களுடன் சென்று தட்டி கேட்டார்.

    அப்போது லட்சுமியையும், அவரது உறவினர்களையும் ராஜாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

    இதில் லட்சுமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

    இதுகுறித்து லட்சுமி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் வேறுபெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்டதால் தங்களது குடும்பத்தினரை திட்டியும், தாக்கியும் உள்ளனர் என்று ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்தார்.

    இந்த புகாரின்பேரில் போலீசார் ராஜா, அவரது தாய் மல்லிகா, தந்தை பிரபாகரன, தங்கை சூர்யகலா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
    • நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    கடலூர்: 

    கடலூர் அடுத்த நடுவீரப்பட்டு சன்னியாசி பேட்டையை சேர்ந்தவர் முருகன் (வயது 35) மனைவி சத்தியவாணி (24) சம்பவத்தன்று முருகன் குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனால் கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் முருகன் கரண்டியால் தனது மனைவி சத்தியவாணியை தாக்கியதில் அவர் காயம் அடைந்தார். பின்னர் சத்தியவாணி கடலூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். இது குறித்து மனைவி சத்தியவாணி கொடுத்த புகாரின் பேரில் நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து முருகனை விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×