என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மனைவியை சரமாரியாக தாக்கிய கணவர்
- ராஜாவுக்கு வேறு பெண்ணுடன் கள்ளத் தொடர்பு இருந்தது.
- லட்சுமியையும், அவரது உறவினர்களையும் ராஜாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
தருமபுரி,
தருமபுரி குமாரசாமிபேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (வயது33). இவர் சென்னை ஆவடியைச் சேர்ந்த லட்சுமி (33) என்பவரை கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இவர்களுக்கு 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு அமராவதியில் உள்ள சைனீஷ் பள்ளியில் ஆசிரியராக வேலை கிடைத்தது. இதனால் ராஜா தனது மனைவி லட்சுமி மற்றும் மகனை சென்னை ஆவடியில் உள்ள மாமனார் வீட்டில் அவர்களை விட்டுவிட்டு வேலைக்கு சென்றார். இந்த நிலையில் ராஜாவுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாக லட்சுமிக்கு தகவல் கிடைத்தது. இதுகுறித்து கணவரிடம் லட்சுமி அவரது உறவினர்களுடன் சென்று தட்டி கேட்டார்.
அப்போது லட்சுமியையும், அவரது உறவினர்களையும் ராஜாவின் குடும்பத்தினர் சரமாரியாக தாக்கியுள்ளனர்.
இதில் லட்சுமி படுகாயம் அடைந்தார். உடனே அவரை உறவினர்கள் மீட்டு தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இதுகுறித்து லட்சுமி தருமபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் வேறுபெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததை தட்டி கேட்டதால் தங்களது குடும்பத்தினரை திட்டியும், தாக்கியும் உள்ளனர் என்று ராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது புகார் தெரிவித்தார்.
இந்த புகாரின்பேரில் போலீசார் ராஜா, அவரது தாய் மல்லிகா, தந்தை பிரபாகரன, தங்கை சூர்யகலா ஆகிய 4 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்