search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மனைவி காயம்"

    கொரட்டூரில் குடும்ப தகராறில் கணவர் தனது மனைவியை அரிவாளால் வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    அம்பத்தூர்:

    கொரட்டூரை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி கவிதா. கணவருடன் ஏற்பட்ட தகராறில் கவிதா, அதே பகுதி திரு.வி.க. தெருவில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். நேற்று இரவு காமராஜ் மாமியார் வீட்டுக்கு சென்று மனைவி கவிதாவை குடும்பம் நடத்த அழைத்தார். அப்போது அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது.

    ஆத்திரம் அடைந்த காமராஜ் மறைத்து வைத்திருந்த அரிவாளால் கவிதாவை சரமாரியாக வெட்டினார். தலை, தோள் பட்டையில் பலத்த காயம் அடைந்த அவருக்கு கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. #tamilnews
    ஆப்பக்கூடல் அருகே மின்சாரவேலியில் கைபட்டு கணவர் பலியானர், மனைவி படுகாயத்துடன் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    ஆப்பக்கூடல்:

    ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35).

    இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பூனைக் கல் என்ற இடத்தில் உள்ளது. அருகே வனப்பகுதி இருப்பதால் தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க தோட்டத்தைசுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.

    இன்று காலை சரவணன் மற்றும் அவரது மனைவி சத்யா(36)வும் தோட்டத்துக்குசென்றனர். அப்போது இருவரது கைகளும் தவறுதலாக மின்கம்பியில் பட்டுவிட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

    உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    ஆனால் வழியிலேயே கணவர் சரவணன் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் சத்யா கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    மின்சாரம் தாக்கி பலியான சரவணனுக்கு உமாஸ்ரீ (6) என்ற மகளும், நிருபம்(1) என்ற ஒரு மகனும் உள்ளனர்.

    இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×