என் மலர்
நீங்கள் தேடியது "electrical shock"
கூத்தாநல்லூர்:
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சூறை காற்று வீசி வருகிறது. இதனால் பல இடங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து கிடக்கிறது.
கூத்தாநல்லூர் பகுதியில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தில் பணி செய்த மின்வாரிய ஊழியர் மின்சாரம் தாக்கி பலியாகியுள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-
கூத்தாநல்லூர் அருகே உள்ள மேலகொண்டாளி பகுதியைச் சேர்ந்தவர் தங்கபாண்டியன் (வயது 35). இவரது மனைவி பூங்குழலி. இவர்களுக்கு பூபாலன், தருண் என்ற 2 மகன்கள் உள்ளனர். தங்கபாண்டியன் மின் வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவர் நேற்று கூத்தாநல்லூர் இஸ்மாயில் தெருவில் சூறை காற்றில் சாய்ந்து கிடந்த மின் கம்பத்தில் ஏறி வேலை பார்த்து கொண்டிருந்தார். அப்போது அறுந்து கிடந்த கம்பியில் எதிர்பாராத விதமாக அவரது கைபட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அவரது மனைவி பூங்குழலி கூத்தாநல்லூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் கவிதா வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #Tamilnews
ஆப்பக்கூடல்:
ஈரோடு மாவட்டம் ஆப்பக்கூடல் அருகே உள்ள அத்தாணி கருப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் சரவணன் (வயது 35).
இவருக்கு சொந்தமான விவசாய தோட்டம் பூனைக் கல் என்ற இடத்தில் உள்ளது. அருகே வனப்பகுதி இருப்பதால் தோட்டத்தில் வன விலங்குகள் புகாமல் இருக்க தோட்டத்தைசுற்றி மின் வேலி அமைத்திருந்தார்.
இன்று காலை சரவணன் மற்றும் அவரது மனைவி சத்யா(36)வும் தோட்டத்துக்குசென்றனர். அப்போது இருவரது கைகளும் தவறுதலாக மின்கம்பியில் பட்டுவிட்டது. இதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.
உடனடியாக இருவரையும் மீட்டு ஆம்புலன்சில் கோபி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
ஆனால் வழியிலேயே கணவர் சரவணன் பரிதாபமாக இறந்தார். படுகாயத்துடன் சத்யா கோபி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
மின்சாரம் தாக்கி பலியான சரவணனுக்கு உமாஸ்ரீ (6) என்ற மகளும், நிருபம்(1) என்ற ஒரு மகனும் உள்ளனர்.
இந்த பரிதாப சம்பவம் குறித்து ஆப்பக்கூடல் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.






