search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மது குடிக்கும் பழக்கம்"

    • மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.
    • அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 45), இவரது மனைவி வானீஸ்வரி. இவர்கள், எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.

    இளையராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

    மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • ரமேஷ் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.
    • ரமேஷின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கிச்சிப்பாளையம் சன்னியாசிகுண்டு சிவன் கரடு பகுதியை சேர்ந்வர் ரமேஷ், (வயது 36). இவருக்கு திருமணமாகி மகாலட்சுமி (32) என்ற மனைவி உள்ளார். மது குடிக்கும் பழக்கம் உள்ள ரமேஷ் அடிக்கடி மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்தநிலையில் நேற்று மதியம் மதுபோதையில் வந்த ரமேஷ், மனைவியிடம் தகராறில் ஈடுபட்டு பின்னர் திடீரென வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின் பேரில் கிச்சிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷின் உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • ரவிச்சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம்.
    • வீட்டில் இருந்த ரவிச்சந்திரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    கொண்டலாம்பட்டி:

    சேலம் கன்னங்குறிச்சி அய்யன் திருமாளிகை மேல் தெரு பகுதியை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (வயது 28). இவருக்கு திருமணமாகி திவ்யபாரதி (24) என்ற மனைவி உள்ளார்.

    மது குடிக்கும் பழக்கம் உள்ள ரவிச்சந்திரனுக்கும், அவரது மனைவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படுவது வழக்கம். இந்த இந்நிலையில் நேற்று இரவு வீட்டில் இருந்த ரவிச்சந்திரன் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த தகவலின்பேரில் கன்னங்குறிச்சி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×