search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Drinking habits"

    • மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.
    • அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 45), இவரது மனைவி வானீஸ்வரி. இவர்கள், எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.

    இளையராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

    மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    ஆலங்குடியில் மதுகுடிப்பதை மனைவி கண்டித்ததால் விஷம் கலந்த மதுவை குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
    ஆலங்குடி:

    ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் துரைராஜ் (55) விவசாயி. இவர் தினமும் மது குடித்து விட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் சம்பவத்தன்று துரைராஜ் மது அருந்திவிட்டு தனது மனைவியுடன் தகராறில் ஈடுபட்டார். மேலும் மது குடிக்க கூடாது என்று கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த துரைராஜ் மதுவில் வி‌ஷம் கலந்து குடித்து மயங்கி கிடந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி துரைராஜ் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.

    ஆலங்குடி அருகேயுள்ள பாண்டிக்குடியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவரது மனைவி அன்புச்செல்வி (27). இவர்களுக்கு குழந்தை இல்லாததால், மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்று வந்தனர்.

    இந்நிலையில், குழந்தை இல்லாததால், மனமுடைந்த அன்புச்செல்வி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து கீரமங்கலம் போலீசார் விசாரித்து வருகிறார்கள். திருமணம் முடிந்து 9 மாதங்களே ஆனதால் ஆர்.டி.ஓ டெய்சிகுமார் விசாரணை மேற்கொண்டு வருகிறார். #tamilnews
    ×