search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தொழிலாளி தற்கொலை
    X

    தொழிலாளி தற்கொலை

    • மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.
    • அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

    நாமக்கல்:

    திருச்சி மாவட்டம் தொட்டியம் தாலுகா நாகையநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் இளையராஜா (வயது 45), இவரது மனைவி வானீஸ்வரி. இவர்கள், எருமப்பட்டி அருகே உள்ள மேட்டுப்பட்டி கிராமத்தில் வீரக்குமார் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் கூலி வேலை செய்து அங்கேயே வசிக்கின்றனர்.

    இளையராஜாவுக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்து வந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் சம்பவத்தன்று மது குடித்துவிட்டு வீட்டுக்கு வந்தார்.

    அளவுக்கு அதிகமான போதையில் இருந்த அவர், தோட்டத்திற்கு பயன்படுத்த வைத்திருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்ததாக தெரிகிறது.

    மயங்கி கிடந்த அவரை, அக்கம்பக்கத்தினர் சிகிச்சைக்காக நாமக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து எருமப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    Next Story
    ×