search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறைதீர்க்கும் நாள்"

    • திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது.
    • வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு தொடங்குகிறது.

    திருப்பூர்-

    திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் வருகிற 26-ந் தேதி மாலை 4 மணிக்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் நடத்தப்படுகிறது. பொதுமக்கள் தங்கள் யோசனை, புகார்களை ஏ.விஜயதனசேகர், அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், திருப்பூர் கோட்டம், திருப்பூர் 641601 என்ற முகவரிக்கு கடிதத்தை அனுப்பி வைக்க வேண்டும்.

    கடிதத்தின் மீது DAK ADALAT CASE என்று தவறாமல் குறிப்பிட்டு இருக்க வேண்டும். வருகிற 20-ந் தேதிக்குள் கடிதம் அனுப்பி வைக்கலாம் என்று திருப்பூர் அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் விஜயதனசேகர் தெரிவித்துள்ளார்.

    • மக்கள் குறைதீர்க்கும் நாளில் 258 மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு அளிக்கப்பட்டது.
    • ரூ.6,200 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மாணவிகளுக்கு வழங்கினார்.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

    இதில் கலெக்டர் பொது மக்களிடம் பல்வேறு கோரிக்கைகள் குறித்த 258 மனுக்களை பெற்று மனு தாரரின் முன்னிலையில் மனுக்களை விசாரணை செய்து தொடர்புடைய அலுவலர்களிடம் மனுக்களை வழங்கி உரிய நடவடிக்கையை விரைந்து மேற்கொள்ள அலுவலர்களுக்கு உத்தர விட்டார்.

    இந்த கூட்டத்தில் வீட்டுமனைபட்டா, முதியோர் உதவித்தொகை, தனிநபர் வீடு வழங்கும் திட்டம், குடிநீர் இணைப்பு வழங்குதல் உள்ளிட்டவை தொடர்பாக பொதுமக்கள் மனுக்களை அளித்தனர்.

    அதனைத்தொடர்ந்து, ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் முகாமில் வசித்து, மரணமடைந்த 9 இலங்கைத்தமிழரின் வாரிசுதாரர்களிடம் ஈமச்சடங்கிற்கான உதவித் தொகையாக தலா ரூ.5ஆயிரம் வீதம் ரூ.45 ஆயிரத்துக்கான காசோலை களையும், ராமநாதபுரம் மாவட்டம், கடலாடி வட்டம், குருவாடி அரசு உயர்நிலைப்பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிற மாணவிகள் பாக்யஸ்ரீ, காவியா ஆகியோருக்கு இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணி ஆகிய பணிகளுக்கான கனவிற்கு உரம் ஊட்டும் விதத்தில் படிப்பதற்கு ஏதுவாக மது விலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறையின் சார்பிலும், மாவட்ட நிர்வாகத்தின் சார்பிலும் ரூ.6,200 மதிப்புள்ள புத்தகங்களை மாவட்ட கலெக்டர் ஜானிடாம் வர்கிஸ் மாணவிகளுக்கு வழங்கினார்.

    இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், உதவி ஆட்சியர் (பயிற்சி) நாராணய சர்மா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) சேக் மன்சூர், தனித்துணை ஆட்சியர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையம் குருசந்திரன் மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    ×