search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ம.தி.மு.க"

    • ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது.
    • ராமநாதபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ் ஏற்பாட் டில் உற்சாக வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டம், பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை நடைபெறுகிறது. ம.தி.மு.க. சார்பில் பொதுச் செயலாளர் வைகோ, முதன் மைச் செயலாளர் துரை வைகோ உள்ளிட்ட நிர்வாகி கள் கலந்துகொண்டு அஞ் சலி செலுத்துகின்றனர். அவர்களுக்கு ராமநாதபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ் ஏற்பாட் டில் உற்சாக வரவேற்பளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து ராமநாதபுரம் ம.தி.மு.க. மாவட்ட செயலா ளர் வி.கே.சுரேஷ் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் கிராமத்தில் முத்துராமலிங்கத் தேவர் திருமகனாரின் 116-வது பிறந்தநாள் விழா மற்றும் 61-வது குருபூஜை விழா நாளை கோலாகலமாக நடைபெறுகிறது. ம.தி.மு.க. சார்பில் பொதுச்செயலாளர் வைகோ, முதன்மை செயலா ளர் துரை வைகோ, துணைப் பொதுச்செயலாளர் தி.மு.ராஜேந்திரன், புதூர் பூமி நாதன் எம்.எல்.ஏ., சாத்தூர் ஏ.ஆர்.ஆர்.ரகுராமன் எம்.எல்.ஏ., ம.தி.மு.க. மாவட்ட செய லாளர்கள் செல்வரா கவன் (திண்டுக்கல்), பசும்பொன் மனோகரன் (சிவகங்கை) முனியசாமி (மதுரை மாந கர்), மாரநாடு (மதுரை புறநகர் வடக்கு), ஜெயரா மன் (மதுரை புறநகர் தெற்கு), ராமகிருஷ்ணன் (தேனி), கலியமூர்த்தி (புதுக் கோட்டை), ரமேஷ் (தூத்துக் குடி வடக்கு), செல்வம் (தூத் துக்குடி தெற்கு), வேல்முரு கன் (விருதுநகர் தெற்கு), கம்மாப்பட்டி ரவிச்சந்திரன் (விருதுநகர் வடக்கு),

    தலைமைக்கழக நிர்வாகி கள் கே.ஏ.எம்.குணா (மாநில தணிக்கை குழு உறுப்பினர்), மாநில இளைஞரணி செய லா ளர் ஆசைத்தம்பி, மாநில தொண்டரணி செய லாளர் பாஸ்கர சேதுபதி, சட்ட, திட்ட திருத்தக்குழு உறுப்பினர் பழனிச்சாமி, மாநில மீனவரணி செயலா ளர் பேட்ரிக் உட்பட மாநில நிர்வாகிகள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்துகின்றனர்.

    எனவே ராமநாதபுரம் மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர், கிளைக் கழக நிர்வா கிகள் அதிக அளவில் வாகனங்களில் வந்து கலந்து கொண்டு ராமநாதபுரம் மாவட்ட எல்கையான பார்த்திபனூர் மருச்சுக்கட்டி யில் நாளை காலை 9 மணி அளவில் தேவர் திருமகனா ருக்கு அஞ்சலி செலுத்த வருகை தரும் ம.தி.மு.க. நிர்வாகிகளுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண் டும் என்று கேட்டுக் கொள்கி றேன்.இவ்வாறு அவர் கூறியுள் ளார்.

    • ம.தி.மு.க. ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.
    • மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    திருப்பூர்:

    தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெற வலியுறுத்தி திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட கையெழுத்து இயக்க படிவங்களை ம.தி.மு.க. அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி மற்றும் மாநகர் மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் திருப்பூர் காந்திநகரில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. மாநகர் மாவட்ட அவைத்தலைவர் நேமிநாதன் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட செயலாளரும், 24-வது வார்டு கவுன்சிலருமான ஆர்.நாகராஜ் முன்னிலை வகித்தார்.

    நிகழ்ச்சியில் திருப்பூர் மாநகர் மாவட்ட ம.தி.மு.க. சார்பில் பெறப்பட்ட 1 லட்சத்து 55 ஆயிரம் கையெழுத்து இயக்க படிவங்களை மாநில அவைத்தலைவர் ஆடிட்டர் அர்ஜூனராஜிடம் மாநகர் மாவட்ட செயலாளர் நாகராஜ் வழங்கினார். மேலும் அதிக அளவில் கையெழுத்து பெற்ற சாமுண்டிபுரம் பகுதி செயலாளர் உள்ளிட்ட நிர்வாகிகளுக்கும், தனிப்பட்ட முறையில் அதிக கையெழுத்து பெற்ற 13-வது வார்டு செயலாளர் மற்றும் அனைத்து பகுதி செயலாளர்களுக்கும் மாநகர் மாவட்ட செயலாளர் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டது. கூட்டத்தில் அடுத்த மாதம் 15-ந்தேதி மதுரையில் நடைபெறும் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் திரளாக கலந்து கொள்வது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    இதில் மாநகர் மாவட்ட பொருளாளர் நல்லூர் மணி என்கிற சண்முகசுந்தரம், தலைமை செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாநில இளைஞரணி செயலாளர் ரத்தினசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    அதை தொடர்ந்து அர்ஜூனராஜ் நிருபர்களிடம் கூறும்போது " பா.ஜ.க.வின் ஊதுகுழலாக செயல்படும், சனாதானத்தை தாங்கி பிடிக்கின்ற கவர்னர் ஆர்.என்.ரவியை திரும்பப்பெறும் வகையிலும் நாங்கள் ஓய மாட்டோம். மத்தியில் பிரதமர் உள்பட பா.ஜ.க. அரசு அப்புறப்படுத்தப்பட வேண்டும். இதற்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றார்.

    ×