search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ்காரர்கள் கைது"

    • கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.
    • சங்கர் ராஜபாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டத்தில் முக்கிய சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக முக்கொம்பு சுற்றுலா மையம் விளங்குகிறது. இந்த சுற்றுலா மையத்தில் உள்ள பூங்காவில் நேற்று முன்தினம் திருச்சி அரியமங்கலத்தை சேர்ந்த 17 வயது சிறுமியும், அவருடைய காதலரும் வந்துள்ளனர்.

    அவர்கள் அங்கு பல்வேறு இடங்களை சுற்றி பார்த்துவிட்டு முக்கொம்பு கரைப்பகுதியில் உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.

    அப்போது அங்கு ஜீயபுரம் போலீஸ் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் (வயது 28) மற்றும் போலீசார் பிரசாந்த் (26) சங்கர் ராஜபாண்டியன் (32), சித்தார்த்தன் (30) ஆகியோர், சங்கருக்கு சொந்தமான காரில் வந்தனர். அவர்கள் கரைப்பகுதியில் அமர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அவர்கள் 4 பேரும் சாதாரண உடையில் இருந்தனர்.

    இதில் பிரசாந்த் நவல்பட்டு போலீஸ் நிலையத்திலும், சங்கர் ராஜபாண்டியன் நெடுஞ்சாலை ரோந்து வாகன போலீசாகவும், சித்தார்த்தன் ஜீயபுரம் போக்குவரத்து போலீசிலும் பணியாற்றி வந்தனர். மேலும் சித்தார்த்தன் தற்போது விடுமுறையில் உள்ளதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில் கரைப்பகுதியில் அமர்ந்திருந்த காதல் ஜோடி எல்லை மீறி, பொது இடத்தில் அநாகரிகமான செயல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதைக்கண்ட போலீசார், அங்கு சென்று காதல் ஜோடியை மிரட்டி, தனித்தனியாக அழைத்து சென்றுள்ளனர்.

    இதில் அந்த சிறுமியை தாங்கள் வந்த காருக்கு அழைத்துச்சென்ற போலீசார், சிறிது நேரம் காரில் வைத்து அந்த சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி உள்ளனர்.

    மேலும் இதனை செல்போனில் வீடியோவாக பதிவு செய்து, 'நாங்கள் எப்போது அழைத்தாலும் வர வேண்டும், என்று சிறுமியை மிரட்டி, அங்கிருந்து அனுப்பியுள்ளனர். ஆனால் அந்த 4 பேரும் போலீசார்தான் என்று அந்த சிறுமிக்கும், அவரது காதலருக்கும் முதலில் தெரியவில்லை.

    இதையடுத்து சிறுமியும், அவரது காதலரும் அங்கிருந்து சென்று முக்கொம்பு நுழைவு பகுதியில் உள்ள புறக்காவல் நிலையத்தில் பணியில் இருந்த போலீசாரிடம் நடந்த விவரங்களை தெரிவித்தனர். அப்போது அவர்களை பின்தொடர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 4 போலீசாரும் வந்தனர்.

    அவர்கள் போலீசார்தான் என்பதை புறக்காவல் நிலைய போலீசார், அந்த காதல் ஜோடியிடம் கூறி உறுதிப்படுத்தினர். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த காதல் ஜோடி அங்கிருந்து பஸ் ஏறி வீட்டுக்கு சென்றுவிட்டனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பாக பேசப்பட்டது.

    மேலும் இந்த தகவல் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தெரியவந்தது. அவர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு திருச்சி தலைமையக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோபாலசந்திரன் நேரில் சென்று அங்கு பணியில் இருந்த போலீசாரிடம் விசாரணை நடத்தினார்.

    பின்னர் அங்கு பொதுப்பணித்துறை மூலம் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சம்பவ நேரத்தில் பதிவான காட்சிகளை பார்வையிட்டார். இதையடுத்து சம்பந்தப்பட்ட சிறுமியின் புகைப்படத்தை வைத்து, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு குத்தாலிங்கம் மற்றும் திருச்சி மாநகர போலீசார் உதவியுடன் சிறுமியை கண்டுபிடித்து நேரில் சென்று விசாரணை நடத்தினர். விசாரணையில், அவரை போலீசார் பாலியல் ரீதியாக துன்புறுத்தியது உறுதி செய்யப்பட்டது.

    இதையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் மற்றும் போலீஸ்காரர்கள் பிரசாந்த், சித்தார்த்தன், சங்கர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவிட்டார்.

    மேலும் சிறுமி கொடுத்த புகாரின்பேரில் ஜீயபுரம் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சப்-இன்ஸ்பெக்டர் சசிகுமார் உள்பட 4 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார்.மேலும் அந்த காரையும் பறிமுதல் செய்தனர்.

    கைதான சப்-இன்ஸ்பெக்டர் சசிக்குமார் கடந்த 2021-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றுள்ளார். பின்னர் பயிற்சி முடித்து கடந்த 10 மாதங்களுக்கு முன்புதான் ஜீயபுரம் போலீஸ் நிலையத்தில் பணியில் சேர்ந்து உள்ளார். தற்போது அவர் தனிப்படையில் பணியை தொடர்ந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    கைதான பிரசாந்த், சித்தார்த்தன் ஆகியோர் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வச்சாணி முதலி தெருவை சேர்ந்தவர்கள் ஆவர். சங்கர் ராஜபாண்டியன் புதுக்கோட்டை மாவட்டம் ராஜகோபாலபுரம் பெரியார் நகரை சேர்ந்தவர் ஆவார்.

    சிறுமி பாலியல் தொல்லை சம்பவத்தை தொடர்ந்து முக்கொம்பில் கூடுதல் போலீசாரை கண்காணிப்பில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

    • 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்ததால், முஜித் காரை நிறுத்தி உள்ளார்.
    • டைல்ஸ் விற்கும் கடை நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    திருவனந்தபுரம்:

    திருவனந்தபுரம் அருகே உள்ள கட்டக்கடை பகுதியை சேர்ந்தவர் முஜித். இவர் அங்குள்ள மார்க்கெட் சந்திப்பில் எலக்ட்ரானிக்ஸ் கடை நடத்தி வருகிறார்.

    இவர் இரவில் கடையை அடைத்து விட்டு காரில் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார். இரவு 10 மணியளவில் ஆள் நடமாட்டம் குறைந்த பகுதியில் கார் சென்றபோது இருளில் மறைந்திருந்த 3 பேர் திடீரென வந்து காரை மறித்துள்ளனர்.

    அவர்களில் 2 பேர் போலீஸ் சீருடையில் இருந்ததால், முஜித் காரை நிறுத்தி உள்ளார். அவர்கள், அமலாக்கத்துறை இயக்குனரகத்தில் இருந்து வருவதாகவும், உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் எனவும் முஜித்திடம் கூறி உள்ளனர். ஆனால் அதனை நம்ப அவர் மறுத்துள்ளார். இதனைத்தொடர்ந்து 3 பேரில் ஒருவர் துப்பாக்கியை காட்டி மிரட்டி உள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த முஜித், கூச்சலிட்டார். இதனை கேட்டு அந்தப்பகுதியில் மக்கள் திரண்டனர். இதனால் 3 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தி அந்த பகுதியில் உள்ள சி.சி.டி.வி. கேமிரா பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.

    இதில் துப்பாக்கியை காட்டி மிரட்டிய 3 பேர் பற்றிய விவரம் கிடைத்தது. போலீஸ் உடையில் இருந்தவர்கள், பொன்முடி போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றும் கிரண் மற்றும் சஸ்பெண்டு செய்யப்பட்ட போலீஸ்காரர் வினீத் என்பதும் மற்றொருவர் அவர்களது நண்பர் அருண் என்பதும் தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர். இவர்கள் டைல்ஸ் விற்கும் கடை நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால், தொழில் அதிபரை கடத்தி பணம் பறிக்க முயன்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    • கஞ்சா வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே கஞ்சா விற்று வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    • கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் சிறையில் அடைத்தனர்.

    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் நிலையத்தில் காவலராக பணியாற்றி வருபவர் சரவணன், (35). இவர், கஞ்சா பதுக்கி வைத்திருந்ததாக, கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய், இவரை சஸ்பெண்ட் செய்தார். இந்த நிலையில் போலீஸ்காரர் சரவணன் திடீரென தலைமறைவானார். தலைமறைவாக இருந்த இவரை, தேவகோட்டை போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட போலீஸ்காரர் சரவணனிடம் விசாரித்த போது அவர் அளித்த தகவலின் பேரில், பல்லடம் போலீஸ் நிலையத்தில் வேலை பார்த்து வரும் மற்றொரு காவலர் அருண்பாண்டி, (33) என்பவருக்கும் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்ததில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து போலீஸ்காரர் அருண் பாண்டியும் கைது செய்யப்பட்டார் .

    கைது செய்யப்பட்ட இரண்டு போலீசாரிடமும் விசாரணை நடத்திய போது ராமநாதபுரம் மாவட்டம், எஸ்.பி., பட்டணம் பகுதியை சேர்ந்த பிரவீன், ராஜேந்திரன் ஆகியோருக்கு, பல்லடத்தை சேர்ந்த போலீஸ்காரர்கள் சரவணன், அருண்குமார் ஆகியோர் கஞ்சா சப்ளை செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு திருப்பூரில் இருந்து பல்வேறு நபர்கள் கஞ்சா கொடுத்துள்ளனர். அதனை பதுக்கி வைத்து பல்வேறு மாவட்டங்களுக்கு சப்ளை செய்ததும் தெரிய வந்தது.

    இதனையடுத்து கைது செய்யப்பட்ட இரண்டு போலீஸ்காரர்களையும் சிறையில் அடைத்தனர். கஞ்சா வியாபாரிகளின் நடமாட்டத்தை கண்டறிந்து, மக்களை பாதுகாக்க வேண்டிய போலீசாரே கஞ்சா விற்று வந்தது பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    ×