search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் நிலையத்தில் தஞ்சம்"

    • நேற்று காலை 11 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுது கொண்டே , மிகுந்த பதற்றத்துடன் ஓடி வந்தார்.
    • போலீசார் அவரை சமாதானப்படுத்தினர்.

    அன்னதானப்பட்டி:

    சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கு நேற்று காலை 11 மணியளவில் சுமார் 20 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் அழுது கொண்டே , மிகுந்த பதற்றத்துடன் ஓடி வந்தார். போலீசார் அவரை சமாதானப்படுத்தினர். மேலும் அவர் இந்தி மொழி பேசியதால், இந்தி தெரிந்த நபரை வரவழைத்து, அவர் மூலமாக அந்த வாலிபரிடம் விசாரித்தனர். 

    விசாரணையில், நேபாளம் நாட்டைச் சேர்ந்த 5 பேர் கேரளாவில் ஓட்டலில் வேலை செய்ய, ெரயிலில் தன்னை அழைத்துச் சென்ற

    னர். ‌அப்போது அவர்கள், தன்னை மிகப் பெரிய தொகைக்கு அங்கு விற்று

    விட வேண்டும் என பேசினர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த நான், உடனடியாக சேலம் ெரயில் நிலையத்தில் இறங்கி வெளியே ஓடி வந்து விட்டேன்.

    மேலும் கடத்தல்காரர்கள் தன்னை பின் தொடர்ந்து வருவதாக நினைத்துக் கொண்டு, மிகுந்த பதற்றத்துடன் பஸ்சில், ஏறி சேலம் பழைய பஸ் நிலையம் வந்து, அங்கிருந்து அன்னதானப்பட்டிக்கு வந்ததாகவும் அவர் போலீ சாரிடம் தெரிவித்தார். 

    இதையடுத்து போலீசார்

    அவரை சேலம் ெரயில்வே

    போலீசாரிடம் ஒப்படைத்த னர். அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். மேலும் கடத்தல் கும்பல் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

    • இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டனர்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷனை பகுதியை சேர்ந்தவர் ஷாஜகான். இவரது மகன் யாகத் பாஷா (வயது 25). இவரும், செஞ்சியை அடுத்த அஞ்சேரி சேர்ந்த ஜெயராமன் என்பவரது மகள் பிரியதர்ஷினி (22) யும் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி கடந்த 3 வருடமாக காதலித்து வந்தனர். பின்னர் இருவரும் நேற்று யாகத் பாஷா வீட்டுக்கு வந்து விட்டார். இந்த நிலையில் தனது மகளை காணவில்லை என பிரியதர்ஷியின் தந்தை ஜெயராம் செஞ்சி போலீசில் புகார் கொடுத்தார்.

    அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரியதர்ஷினியை தேடி வந்தனர். இதை அறிந்த யாகத் பாஷா பிரியதர்ஷினி இருவரும் பாதுகாப்பு கேட்டு திண்டிவனம் உதவி போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரண் அடைந்தனர். அவர்களை விசாரித்த உதவி போலீஸ் சூப்பிரண்டு அபிஷேக் குப்தா செஞ்சி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். செஞ்சி போலீசார் அவர்களை விசாரித்து விசாரணைக்கு பிறகு 2 பேரையும் யாகத் பாஷா வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.

    ×