என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "போலீஸ் கமிஷனர் அலுவலகம்"
- அடையாளங்கள் காண்பது, தொழில் நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில் சைபர் ஹேக்கத்தான் என்ற போட்டி நடத்தப்படுகிறது.
- சைபர் கிரைம் நிபுணர்களால் 2ம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்வுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
சென்னை:
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவின்பேரில், சென்னை காவல்துறையின், சைபர் கிரைம் பிரிவினர் சி.சி.டி.வி. கேமரா பதிவு காட்சிகள் கொண்டு விவரங்கள் சேகரிப்பது, அடையாளங்கள் காண்பது உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில் சைபர் ஹேக்கத்தான் என்ற போட்டி நடத்தப்படுகிறது.
இப்போட்டியில் கலந்துகொள்ள பொதுமக்களை அழைப்பதுடன், விருப்பமுள்ளவர்கள் தனி நபராகவோ, குழுவாகவோ இப்போட்டியில் ஏதேனும் ஒரு தலைப்பை தேர்ந்தெடுத்து நவம்பர் 30-ந்தேதிக்குள், சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு இணைய முகவரியான dcpcccgcp@gmail.com என்ற இ-மெயில் முகவரியில் தங்களது விவரங்கள், அடையாள சான்றுகளுடன் அனுப்பி பதிவு செய்து கொள்ளலாம்.
இப்போட்டி 2 கட்டமாக நடைபெற திட்டமிடப்பட்டு, டிசம்பர் 6-ந்தேதி வரை இணையதளம் வழியாக முதற்கட்ட போட்டிகள் நடத்தப்பட்டு, சைபர் கிரைம் நிபுணர்களால் 2ம் கட்ட மற்றும் இறுதி கட்ட தேர்வுக்கு போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
பின்னர் தேர்ந்தெடுக்கப் பட்ட வெற்றியாளர்கள், டிசம்பர் 12-ந்தேதி சென்னை காவல் ஆணையரகத்திற்கு அழைக்கப்பட்டு, நேரடியாக தேர்வு நடத்தப்பட்டு, முதல் 3 இடங்களுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படும் வெற்றியாளர் அல்லது குழுவினருக்கு முதல் பரிசு ரூ.50,000, 2-ம் பரிசு ரூ.30,000 மற்றும் 3-ம் பரிசு ரூ.20,000 வழங்கப்பட்டு கவுரவிக்கப்படுவர்.
மேலும், பொதுமக்கள் இப்போட்டி குறித்த விவரங்களை அறிய சென்னை பெருநகர காவல், சைபர் கிரைம் பிரிவு தொலைபேசி எண் 044-23452348ஐ தொடர்பு கொண்டு தங்களது சந்தேகங்களை தீர்த்துக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முதியோர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை.
- கூகுள் மீட் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு புகார் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்.
கோவை
கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழக முதல்வர் கடந்த 13-ந் தேதி நடைபெற்ற சட்டமன்ற கூட்டத்தில் அறிவித்தவாறு, கோவை மாநகரில் பொதுமக்களின் குறைதீர்க்கும் நிகழ்ச்சி தொடர்பாக பொதுமக்கள் குறிப்பாக முதியோர்கள் மற்றும் பெண்கள் நலன் கருதி அதிகாரிகளை தேடி கோவை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகம் வர தேவையில்லை. தங்களது இருப்பிடத்திலிருந்து கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பால கிருஷ்ணனை காணொளி காட்சி மூலம் நேரடியாக தொடர்பு கொண்டு தங்களது குறைகளை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்களது புகார்களை ஆன்லைன்(ID:onlinegrievance.copcbe@gmail.com) அனுப்பி வைக்கப்படும் பட்சத்தில் தங்களது இ-மெயிலுக்கு கூகுள் மீட்டிங் லிங்க்
(https://meet288.webex.com/meet/pr26411062314) அனுப்பி வைக்கப்படும். ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை 12 மணி முதல் மதியம் 1 மணி வரை, கூகுள் மீட் மூலம் கோவை மாநகர போலீஸ் கமிஷனரை தொடர்பு கொண்டு புகார் குறித்த கருத்துகளை தெரிவிக்கலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- 'ஜெய்பீம்' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது.
- சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும்.
சென்னை :
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான 'ஜெய்பீம்' திரைப்படம் பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளானது. இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரத்துடன் தொடர்புடைய தஞ்சாவூரைச் சேர்ந்த குளஞ்சியப்பன், 'ஜெய்பீம்' படம் தொடர்பாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க அனுமதி கோரி சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று புகார்மனு அளிக்க வந்தார்.
பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவர், லுங்கி, சட்டையுடன் வந்ததால் பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்தனர். அதனால் அவர் அங்குள்ள பத்திரிகையாளர் அலுவலகம் அருகே செய்வதறியாது திகைத்து நின்றார்.
அதை கவனித்த பத்திரிகையாளர்கள் சிலர், நடந்த விவரங்களை குளஞ்சியப்பனிடம் கேட்டறிந்தனர். பின்னர் அருகில் உள்ள கடைக்கு சென்று வேட்டி ஒன்றை வாங்கி குளஞ்சியப்பனிடம் கொடுத்தனர். அதை கட்டிக்கொண்ட பின்னர் அவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளிக்கும் பகுதிக்கு அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து குளஞ்சியப்பன், இங்கு சாமானிய மக்களும் அவரவர் உடைகளில் வந்து செல்ல அனுமதி வழங்க வேண்டும் என்றார்.
அவர் அளித்த புகார்மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
'நான் பட்டியல் இன சமூகத்தைச் சேர்ந்தவன். எனது கதையை திருடி 'ஜெய்பீம்' திரைப்படத்தை 2டி திரைப்படத் தயாரிப்பு நிறுவனம் எடுத்து வெளியிட்டிருப்பது தொடர்பாக சென்னை சைதாப்பேட்டை 9-வது சிட்டி கோர்ட்டில் முறையீடு அளித்தேன்.
அந்த முறையீட்டை முதல் தகவல் அறிக்கையாக பதிவு செய்து விசாரித்து அறிக்கையை கோர்ட்டில் தாக்கல் செய்யும்படி சாஸ்திரிநகர் போலீஸ் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டருக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அந்த உத்தரவு இதுவரை நிறைவேற்றப்படவில்லை.
ஆகவே, கோர்ட்டு உத்தரவை போலீசார் நிறைவேற்றும் நிமிடம் வரை ஆகஸ்டு 15-ந்தேதி காலை 9 மணி முதல் சென்னை அடையாறில் உள்ள அம்பேத்கர் நினைவு இல்லம் முன்பு காலவரையற்ற உண்ணாவிரதம் இருக்க நான் முடிவு செய்திருப்பதால், எனக்கு போலீஸ் அனுமதி வழங்க வேண்டும்.'
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
'ஜெய்பீம்' படம் தொடர்பாக லுங்கியுடன் வந்த பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தடுத்து நிறுத்திய சம்பவம் அங்கு சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்