search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலீஸ் அதிகாரி ரூபா"

    பெங்களூர் ஜெயிலில் சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது தொடர்பாக நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று நிரூபணமாகி இருக்கிறது என்று போலீஸ் அதிகாரி ரூபா கூறினார். #Roopa #Sasikala
    பெங்களூரு:

    சொத்து குவிப்பு வழக்கு தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹார ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவருக்கு விதிமுறைகளை மீறி ஏராளமான சலுகைகளை அளித்து வருவதாக அப்போது சிறைத்துறை டி.ஐ.ஜி.யாக இருந்த ரூபா குற்றம் சாட்டினார்.

    இதுதொடர்பாக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வினய்குமார் தலைமையிலான விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. அதன் அறிக்கை அரசிடம் தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது.

    அதில், சசிகலாவுக்கு வசதிகள் செய்து கொடுத்திருப்பது உண்மைதான், பல விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என்று கூறப்பட்டிருக்கிறது.

    இதுசம்பந்தமாக போலீஸ் அதிகாரி ரூபா கூறியதாவது:-

    சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் தொடர்பாக விசாரணை அறிக்கையை தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்டிருக்கிறேன். அது இன்னும் எனக்கு தரப்படவில்லை. முழுமையாகவும் பொதுமக்களுக்கு வெளிப்படுத்தவில்லை. அந்த அறிக்கையில் இன்னும் பல வி‌ஷயங்கள் வெளிவரலாம்.

    நான் அப்போது கூறிய குற்றச்சாட்டு உண்மை என்று இந்த அறிக்கை மூலம் நிரூபணமாகி இருக்கிறது. விசாரணை ஆழமாகி ஊடுருவி நடத்தி இருக்கிறார்கள். ஜெயில் அதிகாரிகள் ஆவணங்களை திருத்தி பதிவு செய்திருந்த விவரங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    சசிகலாவை முதல் வகுப்பு கைதியாக நடத்தி இருக்கிறார்கள். ஆனால் அவர் முதல் வகுப்பு கைதி அல்ல. அவருக்காக 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருந்தன. தனி சமையல் கூடம் ஏற்படுத்தி உணவு தயாரிக்கும் வசதி, தனி பார்வையாளர் கூடம், படுக்கை அறை, எல்.இ.டி. டி.வி. என வசதிகள் செய்யப்பட்டுள்ளது. ஆனால் இவை முழுமையாக கணக்கில் எடுத்துக் கொள்ளப்படவில்லை.

    இந்த பிரச்சினையால் நான் பல இன்னல்களை சந்தித்தேன். என்னை இடமாற்றம் செய்தார்கள். ஆனால் இதை நான் தண்டனையாக கருதவில்லை. அதே நேரத்தில் தனி விசாரணை குழு அமைக்கப்பட்டதை நல்ல வி‌ஷயமாக கருதினேன். இப்போது நான் கூறிய குற்றச்சாட்டின்படி உண்மை வெளிவந்துள்ளது.

    ஜெயிலில் சசிகலாவுக்கு செய்யப்பட்ட வசதிகள் ஜெயில் விதிமுறைகளை மீறியது மட்டும் அல்ல. சுப்ரீம் கோர்ட்டு தண்டனை வழங்கிய ஒருவருக்கு அதை முறையாக நிறைவேற்றாததால் கோர்ட்டு அவமதிப்பு செயலாகவும் இது உள்ளது.

    அப்போதைய ஜெயில் இயக்குனர், சசிகலாவுக்கு எந்த வசதிகளையும் செய்யவில்லை என்று கூறியிருந்தார். ஆனால் அவர் சொன்னது தவறு என்பதை ஆவணங்கள் தெரிவிக்கின்றன. இதற்கு அவர் தான் பொறுப்பேற்க வேண்டும். அதேபோல ஜெயில் சூப்பிரண்டும் இதற்கு பொறுப்பானவர் ஆவார்.

    2014-ல் ஜெயலலிதா அடைக்கப்பட்டிருந்தபோது இதே வசதிகள் செய்து கொடுக்கப்பட்டிருந்ததா? என்று எனக்கு தெரியாது. அப்போது நான் ஜெயில் அதிகாரியாக நியமிக்கப்படாததால் எனக்கு எதுவும் தெரியாது.

    இவ்வாறு அவர் கூறினார். #Roopa #Sasikala
    அரசியல்வாதிகளிடம் ஊழல் குறித்து பொதுமக்கள் கேள்வி கேட்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரி ரூபா பேட்டியில் கூறியுள்ளளார். #PoliceOfficerRoopa #Sasikala

    வடவள்ளி:

    அரசுப் பணியில் நேர்மையாக பணிபுரியும் அரசு ஊழியர்களை ஆண்டு தோறும் தேர்வு செய்து கோவை மாவட்ட ஊழல் எதிர்ப்பு இயக்கம் விருது வழங்கி கவுரவித்து வருகிறது.

    இந்த ஆண்டு கோவை மாவட்டத்தில் உள்ள பல்வேறு அரசுத்துறைகளில் நேர்மையாக லஞ்சம் பெறாமல் பணிபுரிந்து வரும் ஆண் மற்றும் பெண் அதிகாரிகள் 18 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு விருது வழங்கும் விழா கோவை வேளாண்மை பல்கலைகழக பட்டமளிப்பு விழா அரங்கில் இன்று நடந்தது.

    கர்நாடகா மாநிலத்தில் உள்ள பரப்பன அக்ரஹார சிறையில் பணி புரிந்து, பல்வேறு உண்மைகளை வெளிக்கொண்டு வந்த ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா, தேர்வு செய்யப்பட்ட அரசு ஊழியர்களுக்கு விருது வழங்கி கவுரவித்தார்.

    மேலும், ஊழல் அதிகாரிகளை எதிர்த்து தைரியமாக புகார் கொடுத்த, அவர்களை பிடிப்பதற்கு உறுதுணையாக இருந்த 10 பேர் கவுரவிக்கப் பட்டனர். இதையொட்டி ‘நாட்டை நாசமாக்கிக் கொண்டிருக்கும் ஊழல் வளரப் பெரிதும் காரணம் அரசியல்வாதிகளே! அரசு அலுவலர்களே! பொது மக்களே!’ என்ற தலைப்பில் கவிஞர் கவிதாசன் நடத்திய பட்டிமன்றம் நடந்தது.


    விழாவில் கலந்து கொண்ட போலீஸ் அதிகாரி ரூபா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ஊழல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். ஊழல் தொடர்பாக அரசியல்வாதிகளிடம் மக்கள் கேள்விகளை எழுப்ப வேண்டும். சமூக மாற்றத்திற்கு நேர்மையான அதிகாரிகளின் பங்கு நிச்சயம் இருக்கும்.

    சிறையில் சசிகலா தொடர்பான வி‌ஷயங்களில் எனது பணியை மட்டும் தான் செய்தேன். மன்னார்குடி மாபியா உங்களை சும்மா விடாது என்று கூட பலர் என்னிடம் கூறினார்கள். அது பற்றி நான் சீரியஸாக எடுத்துக்கொள்ளவில்லை. பரப்பன அஹ்ரஹார சிறையில் தற்போது என்ன நிலைமை இருக்கின்றது என்பது குறித்து எனக்கு தெரியாது.

    எனது பணியிடமாற்றத்திற்கு பிறகு புதிதாக வந்த சிறை அதிகாரி, சிறையில் சசிகலா விதிமீறல் செய்தது தொடர்பான அறிக்கையை மேல் அதிகாரிகளிடம் சம்ர்பித்ததாக கூறப்பட்டது. அந்த அறிக்கையை நானே ஆர்.டி.ஐ மூலம் தகவல் பெற முயற்சித்தும் என்னால் பெற முடியவில்லை.

    சிறையில் எனது நடவடிக்கை தொடர்பாக என்னை பணியிடமாற்றம் செய்தது குறித்து நான் எந்த கேள்வியையும் யாரிடமும் எழுப்பவில்லை.

    இவ்வாறு அவர் கூறினார். #PoliceOfficerRoopa #Sasikala

    ×