search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போலி சாமியார் கைது"

    • இளம்பெண்ணின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும்.
    • இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை சாமியார் பலாத்காரம் செய்தார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் பகுதியை சேர்ந்தவர் இளம்பெண். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த ஜூன் மாதம் திருமணம் நடந்தது.

    திருமணமான ஒரு மாதத்தில் இளம்பெண்ணிற்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதுகுறித்து இளம்பெண் தன்னுடைய தாயாரிடம் தெரிவித்தார்.

    இளம்பெண்ணை அவரது தாயார் பல்வேறு இடங்களுக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தார். அப்போதும் இளம்பெண் உடல்நிலை சரியாகவில்லை.

    இதையடுத்து கணவர் வீட்டிற்கு வந்த இளம்பெண் தனது உடல்நிலை குறித்து கணவரிடமும் அவரது மாமியாரிடமும் தெரிவித்தார்.

    இளம்பெண்ணின் மாமியார் யுனானி மருந்து கடையில் வேலை செய்யும் தனக்கு தெரிந்த சாமியாரிடம் மருமகளை அழைத்துச் சென்றார். அங்கு இருந்த சாமியார் இளம்பெண்ணின் உடலில் 5 தீய சக்திகள் உள்ளது.

    இளம்பெண்ணின் உடலில் உள்ள தீய சக்திகளை விரட்ட பில்லி சூனிய பூஜை செய்ய வேண்டும். பந்தலகுடாவில் உள்ள தனது வீட்டிற்கு மருமகளை அழைத்து வர வேண்டும் என கூறினார்.

    இதையடுத்து நேற்று முன்தினம் இரவு தனது மனைவியை சாமியார் வீட்டிற்கு கணவர் அழைத்துச் சென்றார்.சாமியார் இளம்பெண்ணை வீட்டிற்குள் அழைத்துச் சென்றார். பின்னர் பூஜை செய்ய வேண்டி இருப்பதால் இளம்பெண்ணின் கணவரை வெளியே அனுப்பினார்.

    அப்போது இளம்பெண்ணின் கண்களை கருப்பு துணியால் கட்டி விட்டு பூஜைகள் செய்வதுபோல் நடித்து அவரை பலாத்காரம் செய்தார்.

    தனக்கு நடந்த கொடுமைகள் குறித்து இளம்பெண் தனது கணவரிடம் தெரிவித்தார். அவர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து போலி சாமியாரை கைது செய்தனர்.

    • கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவி கேட்டு சாமியாரிடம் சென்றார்.
    • பெண்ணை தனி அறையில் வைத்து சில மாந்திரீக வார்த்தைகளை கூறி பூஜை செய்தார். அப்போது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

    திருப்பதி:

    தமிழகத்தை சேர்ந்த 58 வயது சாமியார். இவர் தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள வாரங்கல் ஏனுமாமுலா மார்க்கெட் பகுதியில் வசித்து வருகிறார்.

    தன்னிடம் அற்புத சக்தி உள்ளது. மேலும் சூனியம் செய்யக்கூடிய சக்தி இருப்பதாக கூறி மாந்திரீக வேலைகளில் ஈடுபட்டு வந்தார்.

    இவரிடம் குறைதீர்க்க வரும் பெண்களை தனிமையில் பூஜை செய்ய வேண்டுமென அழைத்துச் சென்றுள்ளார். மேலும் இவர் அற்புத சக்தி இருப்பதாக கூறி பெண்களை பாலியல் ஆசைக்கு அடிபணிய செய்துள்ளார்.

    கடந்த 2 நாட்களுக்கு முன்பு பெண் ஒருவர் தன்னுடைய குடும்ப பிரச்சினையை தீர்க்க உதவி கேட்டு சாமியாரிடம் சென்றார்.

    பெண்ணை தனி அறையில் வைத்து சில மாந்திரீக வார்த்தைகளை கூறி பூஜை செய்தார். அப்போது பெண்ணை பலாத்காரம் செய்ய முயன்றார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அங்கிருந்து வெளியேறி வீட்டிற்கு ஓடிச்சென்றார். நடந்த சம்பவம் குறித்து அவரது குடும்பத்தினரிடம் தெரிவித்தார். அவர்கள் இது குறித்து போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    போலி சாமியார் என்பதால் கூடுதலாக அதிரடிப்படை போலீசார் விரைந்தனர். போலி சாமியாரின் வீட்டிற்குள் நுழைந்து அதிரடியாக சோதனை நடத்தினர்.

    அங்கு பல்வேறு மாந்திரீக புத்தகங்கள் எலுமிச்சை பழங்கள் ஆயுர்வேத பொருட்கள் இருந்தன. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    போலி சாமியாரை கைது செய்தனர். போலி சாமியார் தமிழகத்தை சேர்ந்தவர் என்பதால் அவர் பற்றிய விவரங்களை வெளியிட மறுத்து விட்டனர்.

    தொடர்ந்து எத்தனை பெண்களிடம் போலி சாமியார் அத்துமீறலில் ஈடுபட்டார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர்.
    • சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    மத்தூர்:

    திருப்பத்தூர் மாவட்டம், காக்கங்கரை அடுத்த, நரவந்தம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நளினி (வயது45). இவர் நத்தம் ஊராட்சியில் தூய்மை பணியாளராக பணிபுரிந்து வருகிறார். கடந்த வருடம் நளினி வீடு வழியே சென்ற சாமியார் ஒருவர் நளினியிடம் வீட்டில் யாரோ செய்வினை செய்திருப்பதாகவும், அதன் காரணமாக தொடர்ந்து கஷ்டப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

    இதில் ஏமாந்து போன நளினி செய்வினை எடுக்க வேண்டும். ஆடு பலியிட வேண்டும் என பலவற்றை கூறி மூளை சலவை செய்துள்ளார்.

    இதனால் கடந்த 6 மாதங்களாக சிறுக, சிறுக சேர்த்து வைத்த ரூபாய் ஒரு லட்சத்திற்கும் மேல் பணம் மற்றும் நகைகளை அந்த போலி சாமியாரிடம் கொடுத்துள்ளார்.

    பணத்தை பெற்றுக்கொண்ட போலி சாமியார் தொடர்ந்து தோஷம் கழிக்க வேண்டும் என பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனாலும் நளினியின் வீட்டில் கஷ்டம் தீர்ந்தபாடில்லை. சாமியாரை தொடர்பு கொண்டு கேட்க போன் செய்த போதெல்லாம் அவரது செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததாக தெரிகிறது.

    இந்நிலையில் எதிர்பாராதவிதமாக நளினியை தொடர்பு கொண்ட போலி சாமியார் சிறப்பு பூஜை ஒன்று செய்ய வேண்டும். அதற்காக ஆடு மற்றும் பூஜை பொருட்கள் வாங்க வேண்டுமென்பதால், உடனடியாக ரூபாய் பத்தாயிரத்தை எடுத்துக்கொண்டு மத்தூர் பேருந்து நிலையம் வரவேண்டும் என கூறியுள்ளார்.

    இந்த தகவல் அறிந்த நளினியின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் நேற்று மத்தூரில் பணத்துக்காக காத்திருந்த போலி சாமியாரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் அவரை மத்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

    பின்னர் போலி சாமியார் குறித்து மத்தூர் போலீசார் விசாரணை நடத்தியதில் இவர் தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூரை அடுத்த, செங்குட்டை பகுதியைச் சேர்ந்த செல்வம் (47) என்பது தெரிய வந்தது.

    இவர் இதே போல் பல பெண்களை சுற்றுவட்டாரங்களில் உள்ள கிராமத்தில் ஏமாற்றி பணம் பறித்து இருப்பதும் தெரியவந்தது. மேலும் இவர் ஒவ்வொரு கிராமத்திற்கும் தனது சொந்த காரில் சென்று கிராமத்தின் வெளியே காரை நிறுத்திவிட்டு கிராமத்தினுள் நடந்து சென்று குடும்ப பெண்களிடம் தோஷம் இருப்பதாக கூறி நம்பவைத்து ஏமாற்றுவதும் தெரிய வந்துள்ளது.

    திருப்பத்தூர் மாவட்ட போலி சாமியாரால் பெண் ஏமாற்றப்பட்டதால் கந்திலி காவல் நிலையத்தில் புகார் அளிக்குமாறு மத்தூர் போலீசார் நளினியிடம் தெரிவித்தனர். தற்போது இந்த சம்பவம் குறித்து திருப்பத்தூர் மாவட்டம் காந்திலி காவல் நிலைய போலீசார் விசாரித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

    • புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர்.
    • சின்னத்துரை இவ்வாறு வேறு எங்காவது பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? ஆபாச படங்களை அனுப்பி ஏதேனும் முறைகேடுகள் செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    அரூர்:

    வேலுார் மாவட்டம், குடியாத்தம் அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சின்னதுரை (வயது 40).

    தருமபுரி மாவட்டம், அரூர் வள்ளுவபுரத்தை சேர்ந்த ஒருவரின் வீட்டிற்கு கடந்த 19-ம் தேதி தன்னை சாமியார் என அறிமுகப்படுத்திக் கொண்டு சின்னத்துரை சென்றுள்ளார்.

    அந்த வீட்டின் பின்புறம் செய்வினை உள்ளதாகவும், அதை நீக்க பூஜை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளார். ஆனால் வீட்டுக்காரருக்கு அந்த ஆசாமி மீது சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

    இதையடுத்து, பூஜை பொருட்கள் வாங்க போகலாம் என்று சின்னதுரையை அழைத்துக் கொண்டு அரூர் வந்துள்ளார்.

    தன் மீது சந்தேகம் வந்துவிட்டது என்பதை அறிந்த சின்னத்துரை போலீசில் பிடித்து கொடுத்து விடுவார் என்ற பயத்தில் இருசக்கர வாகனத்தில் இருந்து குதித்து தப்பி ஓடிவிட்டார்.

    தப்பி ஓடிய சின்ன துரையை செல்போனில் தொடர்பு கொண்ட அந்த வீட்டுக்காரர் பூஜை செய்யாமல் சென்று விட்டீர்களே என கேட்டபோது, அவரை தகாத வார்த்தையால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    சிறிது நேரத்தில் அவரது மகளுடைய செல்போனுக்கு ஒரு பெண்ணின் நிர்வாண படத்தை சின்னதுரை அனுப்பியுள்ளார். இது குறித்து அரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் தரப்பட்டது.

    புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் போலி சாமியார் சின்னதுரையை கைது செய்தனர். சின்னத்துரை இவ்வாறு வேறு எங்காவது பொதுமக்களை ஏமாற்றி பணம் பறித்துள்ளாரா? ஆபாச படங்களை அனுப்பி ஏதேனும் முறைகேடுகள் செய்தாரா? என்பது குறித்து விசாரித்து வருகின்றனர்.

    ×